இலக்கியம்

மா-னீ

ஹெப்சிபா ஜேசுதாசனின் மா -னீ நாவல் வெளியாகி இருபத்தியேழு வருசங்கள் ஆகிவிட்டது. இன்று வரை அந்த நாவல் குறித்து விரிவான விமர்சனம் எதுவும் வெளியானதாக தெரியவேயில்லை. தமிழ்வாசகபரப்பில் ஏனோ அந்த நாவல்  கவனம் கொள்ளாமலே போய்விட்டது. அதற்கான முக்கிய காரணம்  ஹெப்சிபா தனது நாவல்கள் குறித்து அதிகம் பேசாதவர். எந்த இலக்கிய குழுவோடும் தன்னை இணைத்து கொண்டு சண்டை சச்சரவுகளில் ஈடுபடாதவர். மிக குறைவாக, ஆனால் சிறப்பாக எழுதியவர்.  நவீன விமர்சகர்களின் கருணையும் தயவும் மிக்க கடைக்கண் …

மா-னீ Read More »

குறத்தி முடுக்கின் கனவுகள்

தமிழில் எனக்கு பிடித்தமான காதல்கதை குறத்திமுடுக்கு. உடல் இச்சையிலிருந்து துவங்கி  காதலை நோக்கி நகர்வது தான் இதன் தனிச்சிறப்பு. தமிழ் புனைகதையுலகில் அதிகம் காதல்கதைகள் எழுதப்படுவதில்லை. அரிதாக எழுதப்படும் நேரங்களில் கூட அது உடல்இச்சையை கவனமாக தவிர்த்துவிடுகின்றன. காதலின் பிரிக்க முடியாத ஈர்ப்பு காமம் என்பதை கதைகள் அதிகம் விவரிப்பதேயில்லை. வேறு எந்த உணர்ச்சியையும் விட காமமே மனிதனின் ஆதார பிரச்சனை. அதை வெளிப்படுத்துவதிலும் நுகர்வதிலும் சமூகம் உருவாக்கிய தடைகளும் கட்டுபாடுகளுமே தனிமனதின் தீராதபிரச்சனையாக இருக்கின்றன. துக்கம், …

குறத்தி முடுக்கின் கனவுகள் Read More »

வாசக பர்வம்.

உயிர்மையில் தொடராக வெளிவந்து வாசகர்களின் பரந்த கவனத்திற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான  எழுத்தாளர்கள் குறித்து நான் எழுதிய பத்தியான வாசகபர்வம் தொகுக்கபட்டு தனி நூலாக வெளிவருகிறது. இந்த நூலில் வைக்கம் முகமது பஷீர், சுஜாதா,பிரமீள், விக்கிரமாதித்யன், சி.சு. செல்லப்பா பிரபஞ்சன், பா. சிங்காரம் கோபி கிருஷ்ணன், ந.முத்துசாமி, அசோகமித்ரன், கி.ராஜநாராயணன். ஏ.கே. ராமானுஜன், வண்ணநிலவன், வண்ணதாசன், கோணங்கி, கவிஞர் மீரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என்று தமிழ் இலக்கியத்தின் தனித்த ஆளுமைகளை நான் தேடிச் சென்று சந்தித்த நினைவுகளையும், …

வாசக பர்வம். Read More »

நினைவின் கலகம்.

மறதிக்கு எதிராக நினைவின் கலகம் தான் எழுத்து என்கிறார் மிலன் குந்தேரா. இன்றைய புகலிடக்  புனைகதைகள்  பெரிதும் இந்த முனைப்பிலிருந்தே பிறக்கின்றன. மறக்கடிப்பதை வேலையாக செய்வதே அதிகாரத்தின் பெருந்தந்திரம். அதைப் புனைவின் வழியே எதிர்க்கொள்வதும் நினைவின் தூண்டுதலால் புல்லின் நிழல் அளவு நம்பிக்கையாவது ஏற்படுத்திவிட முடியும் என்று முயற்சிப்பதுமே கலையின் தொடர்ந்த செயல்பாடாக உள்ளது. இன்றைய சிறுகதைகள் அன்றாடப் பிரச்சனைகளின் வடிகால்கள் அல்ல. மாறாக வாழ்வின் மீதான தீவிர விசாரணைகள்.  கதை ஒரு புனைவெளியாகவே, மாற்று இருப்பாகவே …

நினைவின் கலகம். Read More »

இரண்டு ஆசான்கள்

சிறுகதை எழுத விரும்புகின்றவர்களுக்கு இரண்டு ஆசான்கள் அவசியமானவர்கள். ஒருவர் ஆன்டன் செகாவ், மற்றவர் மாபசான். இந்த இருவரும் சிறுகதை என்ற வடிவத்தை அதன் பல்வேறு உயர்நிலைகளுக்கு கொண்டு சென்றவர்கள். உலகின் தலை சிறந்த  கதை சொல்லிகள். காலம்தோறும் மாறிக் கொண்டேயிருக்கும் எல்லா இசங்களையும் தாண்டி இவர்களது சிறுகதைகள் அசலாக மனித வாழ்வின் பேருண்மைகளை  என்றென்றும் வெளிப்படுத்துகின்றன.  சிறுகதை எழுத விரும்புகின்றவன் இந்த ஆசான்களிடம் தன்னை  முழுமையாக ஒப்படைத்துவிட வேண்டும். இவர்களை தொடர்ந்து வாசிப்பதன் வழியே அவர்களின் கதைநுட்பத்தை …

இரண்டு ஆசான்கள் Read More »

தனிமை கடந்து.

காப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் மற்றும் நாடின் கோடிமர் எழுதிய தந்தை காப்காவிற்கு எழுதிய கடிதம் இரண்டையும் ஒரு சேர நேற்றிரவு படித்து முடித்தேன். அப்பாவிற்கும் மகனுக்குமான பிணக்கும் சண்டைகளும் காலம் காலமாக தொடரக்கூடியவை. அப்பாவின் கெடுபிடிகள் தன் விருப்பத்தினை அழுத்தி தன்வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிவிட்டது என்று குற்றம் சாட்டுகிறான் காப்கா. அப்பாவோடு பெண்களுக்கு உள்ள உறவு பையன்களுக்கு இருப்பதில்லை.ஷெல் சில்வர்ஸ்டைன் என்ற அமெரிக்க கவி முதுமை பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு சிறுவனும் அவனது …

தனிமை கடந்து. Read More »

உறங்க மறுப்பவனின் கனவுகள்

    கனவு காண்பதால் நான் உயிர்வாழ்வதாக நம்புகிறேன் என்று ஸ்ரைன்பெர்க் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். காற்றில் பறக்கும் நீர்குமிழிகளை போல வெறுமை கொள்ளும் ஜாலம் தான் கனவுகளா? கனவுகளும் துர்சொப்பனங்களும் ஒன்றல்ல? துர்சொப்பனங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன. நம் உடலை, மனதில் ஒடுங்கி கிடந்த வலியை, நினைவுகளை பீறிடச் செய்கின்றன.    மனித விசித்திரங்களில் ஒன்று உறக்கம். அதை விளக்கிச் சொல்வது எளிதில்லை. இயற்கை துயில் கொள்வதில்லை. அது விழித்து கொண்டேதானியிருக்கிறது. தூக்கம் ஒரு தாதியைப் போல …

உறங்க மறுப்பவனின் கனவுகள் Read More »

தஸ்தாயெவ்ஸ்கியோடு அலைந்த நாட்கள்.

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியை (Fyodor Dostoyevsky)பற்றி இரண்டு நாட்களுக்கு முன்பாக நண்பர் சாரு நிவேதிதா தன் வலைப்பதிவில்  எழுதியிருந்ததை வாசித்தேன். டெல்லியின் குளிர்நிரம்பிய சாலையில் கையில் வோட்காவுடன் அவர் தஸ்தாயெவ்ஸ்கியைக் கொண்டாடியதை வாசித்த போது  தஸ்தாயெவ்ஸ்கி குறித்த எனது நினைவுகளும் பீறிடத்துவங்கின.  சாரு இப்போது தஸ்தாயெவ்ஸ்கியின் மீதான மயக்கத்திலிருந்து விலகி வந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். என்னால் அப்படி வரமுடியவில்லை. நான் இன்றைக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் தீராத ரசிகனே. என் இருபத்தைந்து வயதில் எனக்கிருந்த ஒரே தோழன் தஸ்தாயெவ்ஸ்கி மட்டுமே.   அந்தரங்கமான வலிகளை, …

தஸ்தாயெவ்ஸ்கியோடு அலைந்த நாட்கள். Read More »

வில்லா கேதர்

எனக்கு விருப்பமான அமெரிக்க பெண் எழுத்தாளர் வில்லா கேதர் . நான் அறிந்தவரை தமிழில் இவரது நாவல் எதுவும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆனால் உலகின் சிறந்த நூறு நாவல்கள் பட்டியலை எவர் சிபாரிசு செய்யும் போதும் வில்லா கேதரின் பெயர் நிச்சயம் இடம் பெற்றுவிடுகிறது. அந்த அளவு தனித்துவமும் நுட்பமான கதை சொல்லலும் கொண்டவர். வில்லியம் பாக்னரை  பிடிக்கின்றவர்களுக்கு வில்லா கேதரை நிச்சயம் பிடிக்கும். இருவரும் கதை தேர்வு மற்றும் சொல்முறையில் நிறைய ஒற்றுமை கொண்டவர்கள். இரண்டு …

வில்லா கேதர் Read More »

செகாவ்வும் கார்க்கியும்

நூறு வருடங்களுக்கு முன்பு புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆன்டன் செகாவ்வை சந்திப்பதற்கு சக எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி  சென்றார். இருவரும் ஒன்றாக அமர்ந்து ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பற்றிய நினைவுகுறிப்புகள் ஒன்றை இரண்டு நாட்களின் முன்பாக வாசித்தேன். செகாவ் மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். அப்பா கடன்தொல்லை காரணமாக வீட்டை விட்டு ஒடிப்போனார். தானே வேலை செய்து சம்பாதித்து படித்தவர். மருத்துவம் படித்து ஏழைகளுக்கு  இலவச வைத்தியம் செய்தபடியே எழுத்தாளராக தன்னை வெளிப்படுத்திக் …

செகாவ்வும் கார்க்கியும் Read More »