புத்தக விமர்சனம்

அகத்துணையான எழுத்து

ந. பிரியா சபாபதி நம்மை நமக்கும் நாம் அறியாத பிறரின் வாழ்க்கையையும் நமக்குக் காட்டும் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற புத்தகம் இந்தத் ‘துணையெழுத்து’ நூல். “மறப்போம் மன்னிப்போம்” இந்த வார்த்தைகளுக்கு உரியவர்கள் குழந்தைகள்தாம். குழந்தைகள் உலகம் மாய உலகமும் அல்ல, மந்திரம் உலகமும் அல்ல. நிதர்சமான உண்மையை உணர்ந்த உலகம் ஆகும். குழந்தைகளை ‘ஞானியர்’ என்று சொன்னால் மிகையாது. அவர்கள் பொம்மையைத் தன் உலகமாகப் பார்க்கும் பொழுது பெரியவர்களின் பார்வைக் கோணமும் குழந்தைகளின் பார்வைக் கோணமும் …

அகத்துணையான எழுத்து Read More »

வாசகனுக்கான சிறு வெளிச்சம்

– காட்வின் ஜினு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் செல்லும் பாதை பலருக்கும் பல உள்ளீடுகளைத் தந்துவிட்டுச் செல்லும் அற்புதமான தொகுப்பு . தன்னுடைய கட்டுரைத் தொகுப்புகளின் வழியே உலகின் மிகச் சிறந்த சிறுகதைகளை, அவற்றின் ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை, தனக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் வாசகனின் முன்பு எழுத்தாளர் வைத்திருக்கிறார். உலக இலக்கியம், சினிமா, இசை, பயணங்கள் என அவரது கட்டுரைகள் ஒரு வாசகனுக்குத் தரும் தகவல்கள் உண்மையிலேயே பிரமிப்பூட்டுபவை. குறிப்பாக இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள …

வாசகனுக்கான சிறு வெளிச்சம் Read More »

காதலின் நினைவில்

 ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’ (நாவல்) – வாசிப்பனுபவம் ந. பிரியா சபாபதி, மதுரை. காதல் எனும் அன்பானது இவ்வுலகில் பிறந்த யாரையும் விட்டுவைப்பதில்லை. அது அனைவரின் மனத்திலும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கடந்து வராதவர்கள் எவரும் இல்லை. பலர் தம் மனத்தில் எழும் அன்பினைச் சொற்களின் வழியே அன்பானவர்களின் செவிக்குள் விழச் செய்கின்றனர். பலர் அதைத் தம் மனத்திற்குள்ளேயே திரையிட்டு மறைத்து விடுகின்றனர். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் ‘ஒரு சிறிய விடுமுறைக்காலக் காதல் கதை’யை …

காதலின் நினைவில் Read More »

மழைமான் – வாசிப்பனுபவம்

கலை கார்ல்மார்க்ஸ் இந்தத் தொகுப்பில் மொத்தம் பத்துச் சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும், ஒவ்வொரு விதமாக உள்ளது. முன்னுரையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், ‘ஒவ்வொரு தொகுப்பும் ஒரு காலகட்டத்தில் எனக்கு இருந்த மனநிலையின் சாட்சி’ எனக் குறிப்பிடுகின்றார். மேலும், ‘முந்தைய கதைகளிலிருந்து அவரது கதைகள் வேறு திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டதாகவும்’ குறிப்பிடுகின்றார். ஆம். அது முற்றிலும் உண்மை தான். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையையும் படித்து முடிக்கும் பொழுது மனம் எங்கெங்கோ பயணித்து …

மழைமான் – வாசிப்பனுபவம் Read More »

ஆற்றல் மிகுந்த இடக்கை

மஞ்சுநாத் சைக்கோ என்ற வகைமையில் வாழ்ந்து வந்தவர்களை வாழ்ந்து வருபவர்களை எவ்விதப் பொருளில் வகைப்படுத்துவது. வரலாறு அவர்களை ஒரு பட்டியலாக மட்டுமே வகைமைப்படுத்தியுள்ளது. மனநோயாளிகளாக அவர்கள் மீது கருனை கொள்வதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை. அவர்களுக்கு மனம் இருக்கிறது. சாமானியன் மனதைவிட அது சிறப்பாகவே செயல்புரிகிறது. துடிப்பான வேகத்தோடு செயலாற்றும் ஒன்றிற்கு நோயின் சாயத்தைப் பூச முயல்வது அனர்த்தம் மட்டுமல்ல ஆபத்தும் கூட. மனதின் செல்வாக்கிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களைச் சைக்கோவாகப் பொருள் கொள்வதில் ஒரு உடன்பாடு உள்ளது. …

ஆற்றல் மிகுந்த இடக்கை Read More »

யாமம்- வாசிப்பனுபவம்

சௌந்தர்.G ஒரு நாவலுக்குள் , வரலாற்று தடயங்கள் , காலக்கணக்குகள், தத்துவார்த்த நிலைகள் , மனித அவலங்கள் , தீர்வும் , தீர்வற்ற முடிவுகள்.  என பல படிகள் கட்டமைக்கப்பட்டு , ஒரு உச்சத்தில்,  கதையை அந்தரத்தில் மிதக்க விடுவதோ , சரித்து கீழே தள்ளி, கைகட்டி அமர்ந்து வேடிக்கை பார்ப்பதோ, அந்த படைப்பாளியின்  தேர்வாக இருக்கலாம்.   வாசகனுக்கு அந்த நாவல் மிச்சம் வைப்பது என்ன? என்பதுவே  அந்த  நாவலின்  வெற்றி.  தொடர்ந்து பேசப்பட்ட, அப்படியான  …

யாமம்- வாசிப்பனுபவம் Read More »

துயிலின் திருவிழா

ஜெ. திவாகர் எல்லா சாலைகளும் ரோமை நோக்கியே செல்கின்றன என்பது போல இந்நாவலின் கதையோட்டம் முழுமையும் தெக்கோடு துயில் தரு மாதா கோவிலில் நடைபெறும் பத்து நாள் திருவிழா நோக்கியே நகர்கிறது. எஸ்.ரா. வின் அத்தனை கதைகளிலும் முக்கிய கதாபாத்திரமாய் இடம்பெறும் வெயில்.  இக்கதையிலும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலும் நம் உடலில் கண்ணுக்கு தெரியாமல் ஓடும் நரம்புகளாய் பின்னி பிணைந்து நம்மோடும், கதையோடும் பயணிக்கிறது வெயில். இந்நாவல், மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கிறது. ஒரு தளம் …

துயிலின் திருவிழா Read More »

போராடும் தவளை

உலகின் மிகச்சிறிய தவளை – வாசிப்பனுபவம் ந.பிரியா சபாபதி.      ஆதிகால மனிதன் இயற்கையோடு இணைந்து அதன் போக்குடனே வாழ்ந்தான்.  மனிதர்களுடைய அறிவு, ஆணவம் விரிவடைய விரிவடைய தன் பலத்தைப் பறைசாற்றத் தொடங்கினான். அதன்பின் தன் எல்லையை விரிவுபடுத்தினான். இயற்கையையும் தனதாக்கிக் கொண்டு தான்தான் இந்த அண்டத்தில் வலிமை பொருந்தியவன் என்பதை வெளிக்காட்ட போர் புரிந்தான். பிற நாட்டையும் இயற்கைச் செல்வங்களையும் தனக்கானது உரிமை கொண்டாடினான்.  நம் முன்னோர்களான இவர்களது எண்ணமானது நம்முடைய உடலுக்குள்ளும் ஓடுவதால் இப்போது …

போராடும் தவளை Read More »

அப்பாவின் கதைகள்

ஒவ்வொரு அப்பாவும் ஒரு காலத்தில் சிறு பையனாக இருந்தவர்களே. –     அலெக்சாந்தர் ரஸ்கின் அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய அப்பா சிறுவனாக இருந்தபோது என்ற சிறார் நூலை நா.முகம்மது செரீபு மொழியாக்கம் செய்திருக்கிறார். சுவாரஸ்யமான சிறார் நூல். தனது தந்தையின் பால்ய நினைவுகளைக் கேட்பதில் பிள்ளைகளுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம். அதுவும் பள்ளி நினைவுகளை விவரிக்க துவங்கினால் இப்படி எல்லாம் நடந்ததா என்று வியப்படைவார்கள். தந்தையோ, தாயோ தான் படித்த பள்ளிக்குப் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு போய் காட்ட …

அப்பாவின் கதைகள் Read More »

கதைகளின் பாதை

கதைகள் செல்லும் பாதை பற்றிய வாசிப்பனுபவம் –       தயாஜி, மலேசியா   மிகுந்த மகிழ்ச்சியில் இதனை எழுதுகிறேன். புத்தக வாசிப்பு என்பது பொழுது போக்கிற்காக அல்ல. பொழுதும் போகும்தான் அதே சமயம் அதனை தாண்டியது அதன் பயணம். முதலில் கதை எதனால் சொல்லப்படுகிறது யாருக்காகச் சொல்லப்படுகிறது என்பது யோசிக்கையில் மனதில் பல பதில்கள் கிடைக்கும். என் வரையில் அது ஒரு வழிகாட்டியின் தகவல் பறிமாற்றம். வழிகாட்டுதல் என்பது பயணத்திற்கு எத்தனை உதவியாக அமையும். மிக நீண்ட பயணத்தின் சிக்கல்களை கலைவதற்கும், …

கதைகளின் பாதை Read More »