சிறுகதை

ஞாபகக் கல்

புதிய சிறுகதை அரூ இணைய இதழில் வெளியானது •••சிறிய அலுமினிய டப்பா ஒன்றினுள் ஒரு கல்லையும் மூன்று சொற்கள் கொண்ட ஒரு துண்டு சீட்டினையும் அம்மா விட்டுச் சென்றிருந்தாள். இந்தப் பெட்டி அவளது பட்டுப்புடவைகளுக்குள் மறைத்து வைக்கபட்டிருந்தது. அம்மா இறந்தபிறகு அவளது பொருட்களை அப்படியே பீரோவில் வைத்துப் பூட்டி அதன் சாவியை அப்பா வைத்திருந்தார். அதை நாங்கள் திறக்கவேயில்லை கோடை விடுறைக்கு அமெரிக்காவிலிருந்து லீலா தனது பிள்ளைகளுடன் வந்திருந்த நாளில் அவள்தான் அப்பாவிடம் கேட்டு பீரோ சாவியை …

ஞாபகக் கல் Read More »

குற்றத்தின் பாதை

புதிய சிறுகதை (டெல்லி தமிழ்சங்க மலரில் வெளியானது.) தாத்தாவைக் கைது செய்வதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் வீட்டிற்கு வந்த ஏப்ரல் மாதத்தின் புதன்கிழமை முற்பகலில் கூர்வாள் போல வெயில் மினுங்கிக் bகாண்டிருந்தது. அப்போது என் வயது பனிரெண்டு. தாதன்குளத்தில் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன் அப்பாவின் வேலை காரணமாக அம்மாவும் தம்பிகளும் புனலூரில் வசித்தார்கள். என்னை மட்டும் தாத்தா வீட்டில் விட்டிருந்தார்கள். தாத்தாவிற்கு எட்டூர் கண்மாயை ஒட்டி நாலு ஏக்கர் வயலும் கரிசல் நிலமும் இருந்தது. வயலடியில் பெரிய படிக்கிணறு. …

குற்றத்தின் பாதை Read More »

கேள்வியின் நிழல்

புதிய சிறுகதை. ஜுலை 2022 கேமிரா ஓடிக்கொண்டிருந்தது. ராம்பிரசாத் கேமிராவைப் பார்க்கவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்துவிட்டவரைப் போலிருந்தார். கேமிராவின் பின்புறமிருந்து திவ்யா சைகையால் அவரைப் பேசுமாறு சொன்னாள். அவர் அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை பேராசிரியர் ராம்பிரசாத்திற்குக் கணிதத்திற்கான உயரிய விருது ஒன்றை ஜப்பானிய அரசு அறிவித்திருந்தது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற அந்த விருதைப் பெற்ற முதல் தமிழர் என்பதால் அவரை நேர்காணல் செய்து  தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும் என்று நியூவிஷன் சேனல் முடிவு செய்திருந்தார்கள். விருது செய்தி …

கேள்வியின் நிழல் Read More »

அஜந்தா கண்ணாடி.

புதிய சிறுகதை. ஜுலை 2022 அவன் கண்ணாடியை உடைத்தபோது மணி நான்கு இருபது. பள்ளிவிட்டுத் திரும்பியதும் எதற்காக முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்தான் என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் அலமாரியின் நடுத்தட்டில் சாய்த்து வைக்கப்பட்ட கண்ணாடி கைதவறி விழுந்து சில்லுசில்லாகச் சிதறியதைக் கண்டதும் பயத்துடன் குனிந்து எடுத்து ஒட்டவைக்க முயன்றான். உடைந்த சில்லுகளில் துண்டுதுண்டாக அவனது உருவம் காட்சியளித்தது விநோதமாக இருந்தது. அம்மா வருவதற்குள் கண்ணாடியை ஒட்ட வைத்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அடி வாங்கி முடியாது. அம்மா …

அஜந்தா கண்ணாடி. Read More »

வானில் எவருமில்லை

புதிய சிறுகதை புரவி ஆண்டு மலரில் வெளியானது தியேட்டரில் பாதிப் படம் நடந்து கொண்டிருக்கும் போதே சித்ராவிற்குப் பசிக்க ஆரம்பித்தது. ஆனால் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. மணி எட்டைக் கடந்தவுடன் வயிறு தானே பசிக்கத் துவங்கிவிடுகிறது. ஒன்பது மணிக்குள் இரவு உணவைச் சாப்பிட்டு முடித்துவிடுவது தான் அவளது வழக்கம். ஆனால் சினிமாவிற்குப் போகும் நாட்களில் என்ன செய்வது. இடைவேளையின் போது பாப்கார்ன் சாப்பிட்டார்கள். ஆனாலும் பசி அடங்கவில்லை. திரையில் ஒடும் காட்சிகளில் அவளது மனம் கூடவில்லை. …

வானில் எவருமில்லை Read More »

மலைப்பாம்பின் கண்கள்

அந்திமழை டிசம்பர் இதழில் வெளியான புதிய சிறுகதை ராகவின் கனவில் ஒரு மலைப்பாம்பு வந்தது. அவனது முப்பதாவது வயது வரை இப்படிக் கனவில் ஒரு மலைப்பாம்பினைக் கண்டதேயில்லை. ஆனால் திருமணமாகி வந்த இந்த ஏழு மாதங்களில் பலமுறை அவனது கனவில் மலைப்பாம்பு தோன்றிவிட்டது. இதற்குக் காரணம் மிருதுளா. அவளுக்கு மலைப்பாம்பினைப் பிடிக்கும். குளோப்ஜாமுனைப் பார்த்ததும் நாக்கைச் சுழற்றுவது போல அவள் மலைப்பாம்பைப் பார்த்தால் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று கண்கள் விரிய ஆசையுடன் ரசிப்பாள். என்ன பெண்ணிவள் …

மலைப்பாம்பின் கண்கள் Read More »

காணாமல் போனவர்களின் வசிப்பிடம்

(உயிர்மை 100 வது இதழில் வெளியான சிறுகதை) 1891ம் ஆண்டு நடைபெற்ற பில்வமங்கன் கொலை வழக்கு எனப்படும் மோகன்பூர் ஜமீன்தார் கொலைவழக்கினை விசாரணை செய்வதற்காக நியமிக்கபட்டிருந்த போலீஸ் சூப்ரெண்டெண்ட் யதோத்தகாரி எழுதிய டயரிக் குறிப்புகள் அவரது மறைவிற்கு நூறு ஆண்டுகளுக்குப் பின்பு அவரது குடும்பத்தினரால் கண்டறியப்பட்டு நூலாக்கம் பெறுவதற்காக நவயுகம் பதிப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்டிருந்தது. இந்த வழக்கின் விசித்திரம் கொலையாளியாகச் சந்தேகிக்கபடும் பில்வமங்கனின் மனைவி வருணா கொலை நடந்த இரவு காணாமல் போய்விட்டார். இக் கொலைவழக்கினை விசாரிக்க …

காணாமல் போனவர்களின் வசிப்பிடம் Read More »

இரண்டு கிழவர்கள்

விகடன் தீபாவளி மலரில் வெளியான சிறுகதை டெல்லிக்கு விமானத்தில் தான் போக வேண்டும் என்று பட்டாபிராமன் நினைத்தார். பின்பு காந்தி ஒருமுறை கூட விமானத்தில் போனதில்லையே. நாம் ஏன் காந்தி சமாதியைக் காண விமானத்தில் போக வேண்டும் என்று தோன்றியது. உடனே டெல்லி ரயிலில் டிக்கெட் போட்டார். காந்தி சமாதியை பார்க்க வேண்டும் என்பதற்காக டெல்லி போகிறேன் என்று மகனிடம் சொன்னால் ஒத்துக் கொள்ளமாட்டான். இந்த வயதான காலத்தில் எதற்காகக் காந்தி சமாதியைப் பார்க்க வேண்டும். பல …

இரண்டு கிழவர்கள் Read More »

நினைவுப் பெண்

புதிய சிறுகதை ஹூப்ளி எக்ஸ்பிரஸில் யாரோ ஒரு பெண் தவறவிட்டதாக அந்தச் சிவப்பு நிற மணிபர்ஸை ரயில்வே காவல் நிலையத்தில் வித்யா ஒப்படைத்தபோது மார்கண்டன் ஸ்டேஷனில் இல்லை. ஆறாவது பிளாட்பாரத்தில் கிடந்த மரப்பெட்டி ஒன்றிலிருந்து துர்நாற்றம் அடிப்பதாகப் பயணிகள் புகார் செய்த காரணத்தால் அதைப் பரிசோதனை செய்யப் போயிருந்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு மரப்பெட்டியில் பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடலை அவர்கள் கைப்பற்றினார்கள். அவளது தலையை மட்டும் காணவில்லை. ஆனால் உடல் மூன்றாகத் துண்டிக்கபட்ட நிலையில் …

நினைவுப் பெண் Read More »

பதினேழாவது ஆள்

2021 ஆகஸ்ட் காலச்சுவடு இதழில் வெளியான எனது குறுங்கதை ராமநாதன் வீட்டில் மாட்டப்பட்டிருந்த குடும்ப புகைப்படத்தில் புதிதாக ஒருவர் தோன்றியிருந்தார். அவர் யார். எப்படி புகைப்படத்தில் புதிதாகத் தோன்றினார் என்று வீட்டில் எவருக்கும் புரியவில்லை. அந்தப் புகைப்படம் 1986ல் எடுக்கப்பட்டது. அஜந்தா ஸ்டுடியோவில் பொங்கலுக்கு மறுநாள் எடுத்தது. சின்ன அக்கா கல்யாணி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எடுத்த புகைப்படம். சுருள் முடியோடு பேரழகியாக இருக்கிறாள். அந்த புகைப்படத்தில் மொத்தம் பதினாறு பேர் இருந்தார்கள். ஆனால் பதினேழாவதாக …

பதினேழாவது ஆள் Read More »