பரிந்துரை

குளிர்காலப் புத்தகங்கள்

குளிர்காலம் புத்தகம்படிப்பதற்கு மிகவும் உகந்த காலம். வேறு எப்போதையும் விட கையிலிருந்த புத்தகம் குளிர்ந்த இரவுகளில் நம்மோடு மிக நெருக்கமாகவிடுகிறது.வார்த்தைகள் தரும் வெம்மை அலாதியானது. சொற்கள் மிக நெருக்கமாக தோளில் கைபோட்டுக் கொண்டு பேசும் நட்புடன் நம்மோடு பேசுகின்றன. மூடிய ஜன்னலின் வெளியே குளிர்காற்று அலைந்து கொண்டிருக்கிறது. புத்தகங்கள் குளிர்காலத்தில் துளிர்க்க துவங்குகின்றன. அதன் பசுமையும் அலைவும் மிக வசீகரமாகயிருக்கிறது. படுக்கையில் கிடந்தபடியே வாசிப்பதற்கு போதுமான வெளிச்சத்தில் படிப்பது அலாதியான அனுபவம். எப்போதும் சில புத்தகங்கள் வாசிக்கபடுவதற்கான …

குளிர்காலப் புத்தகங்கள் Read More »

நூறு சிறந்த சிறுகதைகள்

கேணி இலக்கியச் சந்திப்பில் பேசுவதற்காக என் விருப்பக் கதைகளை மறுவாசிப்பு செய்து கொண்டிருந்த போது இளம் வாசகர்களுக்காக நான் முக்கியம் என நினைக்கும் சிறுகதைகளை அடையாளம் காட்டலாமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் இந்தப் பட்டியல் கட்டாயம் வாசிக்கபட வேண்டிய தமிழ்சிறுகதைகளாக நூறு கதைகளைப் பட்டியிலிட்டிருக்கிறேன். இது தரவரிசைபட்டியல் இல்லை.  மாறாக பல்வேறுவிதமான கதை சொல்லும் முறைகளில் அமைத்த சிறந்த சிறுகதைகள் இவை. இவர்கள் தனித்துவமாக கதை சொல்லும் எழுத்தாளர்கள். என் நினைவில் உள்ள கதைகளிலிருந்து …

நூறு சிறந்த சிறுகதைகள் Read More »

குறும்படங்கள்

சமீபத்தில் நான் பார்த்த முக்கியமான குறும்படங்கள் இவை. குறும்படங்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான உதாரணங்களாக இவற்றைச் சொல்லலாம். ஐந்து நிமிசங்களுக்குள் உருவாக்கபட்ட இந்தப் படங்கள் ஆழமான மனப்பாதிப்பை உருவாக்குகின்றன. எவ்வளவு காட்சிகள் இடம் பெற வேண்டும். எப்படி காட்சிகளை படமாக்க வேண்டும். எப்படி படத்தொகுப்பு செய்ய  வேண்டும் என்று இந்தப் படங்களில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். குறும்படம் இயக்க நினைப்பவர்கள் இதை தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பார்த்து அதற்கான திரைக்கதையை ஒளிப்பதிவை …

குறும்படங்கள் Read More »

நூறு சிறந்த நாவல்கள்.

சில மாதங்களுக்கு முன்பாக தமிழில் படிக்கபடவேண்டிய 100 புத்தகங்களின் பட்டியல் ஒன்றினை வாசகர்களுக்குச் சிபாரிசு செய்திருந்தேன். அதில் பெரும்பாலும் சிறுகதைகளே முக்கியமாக உள்ளன. அத்தோடு செவ்வியல் பிரதிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆகவே வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான 100 நாவல்களின் பட்டியல் ஒன்றினைத தர இயலுமா என்று பல்வேறு நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். நாவல்குறித்த கருத்தரங்கம் மற்றும் ஆய்வு அரங்கங்கள் இன்று பல்வேறு ஊர்களில், பல்வேறு தளங்களில் நடந்து வருகின்றன. அதற்கு உதவக்கூடும் என்றே இந்தப் …

நூறு சிறந்த நாவல்கள். Read More »

நூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள்

கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழில் வெளியான மொழிபெயர்ப்பு நாவல்களில் எனக்கு விருப்பமான நூறு நாவல்கள் இவை. இதில் சில மீண்டும் பதிப்பிக்கபடவில்லை. சில யார் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற தகவலைக் கண்டறிவது கூட சிரமமாக இருக்கிறது. சில புதிய பதிப்புகள் வெளிவந்துள்ளன. 1) அன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா2) போரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா3) புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா4) கசாக்குகள் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா5) குற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – …

நூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள் Read More »

படித்ததும் பிடித்ததும் 2

வலைப்பக்கங்களில் அவ்வப்போது சில சுவாரஸ்யமான கட்டுரைகள் செய்திகள் வெளிவருகின்றன. அப்படி என் கவனத்தை கவர்ந்தது இக்கட்டுரை. இன்னும் கிராமப்புறங்களில் காணப்படும் விசித்திர நடைமுறைகளில் ஒன்று மொய் பணம் தருவது. அதை பற்றிய சுவாரஸ்யமாக தகவல்களை தருகிறது இந்தக் கட்டுரை.   சின்ன கவுண்டர் படத்தில் இப்படியொரு மொய்விருந்து காட்சியிருக்கிறது. ஆனால் இவ்வளவு விபரமாக அதில் குறிப்பிடப்படவில்லை. ** மொய்விருந்து     நம்வீட்டுத் திருமணத்தின்போது பணமாகவும் பொருளாகவும் மணமக்களுக்கு அன்பளிப்புகள் தரப்படுகிறதல்லவா?………….. அதை நமக்குக் கொடுத்தவர் பின்னொரு காலத்தில் …

படித்ததும் பிடித்ததும் 2 Read More »

நான்கு அறிமுகங்கள்

அநங்கம்  சிற்றிதழ் நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்கள், படைப்பாளிகள் மலேசியாவில்  நிறைய இருக்கிறார்கள். சிறுகதைகள் கவிதைகள் என்று தொடர்ந்து செயல்படும் அவர்கள் தங்களது வெளிப்பாட்டிற்காக ஒன்றிரண்டு சிற்றிதழ்களை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வெளிவந்துள்ளது அநங்கம் என்ற சிற்றிதழ். இதன் முக்கிய நோக்கமாக மலேசியாவில் உள்ள தீவிர எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் வாசகர்களையும் ஒன்றிணைப்பது என்ற பிரகடனத்துடன்  முதல் இதழ் வெளியாகி உள்ளது. பொதுவில் சிறுபத்திரிக்கைகள் நடத்துவது பொருளாதார சிரமம் கொண்டது. அத்தோடு …

நான்கு அறிமுகங்கள் Read More »

படித்ததும் பிடித்ததும் 1

தளசிங்கமாலை என்ற நூலிலுள்ளது இப்பாடல் “ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்செவ் வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வர வேயுறு வெள்ளி வலை சோர, நானுன்னை மேவுதற்குத் தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்கமே“ இப்பாடலின் பொருள்: சூரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து விரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச, மன்மதன் பாணமெய்ய, தென்றல் வீச, மூங்கிலையத்த அழகிய வளையங்கள், விரக தாபத்தினால் சோர்ந்து விழ, நான் உன்னை வந்து சேர்வதற்குத் தாய் குறுக்கே நிற்கின்றாளே …

படித்ததும் பிடித்ததும் 1 Read More »

இலக்கிய இணையதளங்கள்.

எங்கோ லத்தீன் அமெரிக்காவில் வெளியாகும் படைப்புகள் கூட உடனடியாக நமக்கு அறிமுகமாகி விடுகின்றன. ஆனால் இந்திய மொழிகளில் வெளியாகும் சமகால இலக்கிய முயற்சிகள் நமக்கு அதிகம் அறிமுகமாவதேயில்லை. மொழிபெயர்ப்பின் வழியாக தமிழுக்கு அறிமுகமனாவர்களும் 1950- 60களைச் சேர்ந்தப் படைப்பாளிகளே. சமகால இந்திய இலக்கியத்தை அறிந்து கொள்வதற்கான சில இணையதளங்களை சிபாரிசு செய்கிறேன். இவற்றில் ஆங்கிலம் வழியாக அந்த மொழியின் முக்கியப் படைப்பாளிகளின் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. சில இந்திய மொழிகளின் படைப்பிலக்கியத்திற்கான இதழ்களும் இதில் …

இலக்கிய இணையதளங்கள். Read More »

அக்கால மதராஸ்

நூறுவருடங்களுக்கு முன்பான பழைய புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது கண்ணில் பட்டவை இவை. ** ஆலயங்களில் நாதசுரம் வாசிக்கவேண்டிய முறைகள் காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும் பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்ட பண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூர தீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்து பள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டு இசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும் பாடலாம்) …

அக்கால மதராஸ் Read More »