குறுங்கதை 125 கவலைகளின் குளியலறை
அந்த நகரில் கவலைகளின் குளியலறை ஒன்றிருந்தது. அது ஒரு பொதுக்குளியலறை. நாள் முழுவதும் மக்கள் அங்கே குளிக்கக் காத்திருந்தார்கள் உண்மையில் அது ஒரு நீரூற்று. அந்த நீரூற்று பொங்கி வழிந்து தாரையாகச் செல்லும் வழியினைத் தடுத்து பதினாறு குளியலறைகளை உருவாக்கியிருந்தார்கள். ஆண்களுக்கு எட்டு. பெண்களுக்கு எட்டு. கவலைகளின் குளியலறையில் மரத்தால் செய்யப்பட்ட தொட்டி ஒன்றிருந்தது. அந்த தொட்டியினுள் இறங்கிக் குளிக்க வேண்டும். குளித்து வெளியேறும் போது கவலைகள் அத்தனையும் மனதிலிருந்து நீங்கிவிடும். துவைத்த உடையைப் போலப் புதிதாக …