குறுங்கதை

குறுங்கதை 34 சூட்கேஸ்

வெளியூர் செல்லும் நேரங்களில் அவன் தன் மனைவியை ஒரு சூட்கேஸ் போல உருமாற்றி எடுத்துச் சென்றுவிடுவான். சூட்கேஸ் ஒருபோதும் பயண நெருக்கடி பற்றியோ, புதிய இடம் பற்றியோ முணுமுணுப்பதில்லை. அதற்குச் சிறிய மூலை போதும். அவனுக்குத் தேவையான உடைகள். பற்பசை, சேவிங்கிரீம், ரப்பர் செருப்பு வரை எல்லாவற்றையும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டது சூட்கேஸ். விடுதிகளின் வரவேற்பறையில் அவன் சூட்கேஸ் உடன் நிற்பது தான் பெருமையாகக் கருதப்பட்டது. வெறும் கையோடு வருபவனைப் பயணியாக யாரும் மதிப்பதில்லை. அவன் வெளியே …

குறுங்கதை 34 சூட்கேஸ் Read More »

குறுங்கதை-33 மொழி அதிகாரம்

அமேசான் காடுகளில் வாழும் முண்டிரு என்ற பழங்குடியினர் பேசும் மொழியில் காலத்தைக் குறிக்கும் சொற்கள் கிடையாது. பன்மை சொற்கள் கிடையாது. அப் பழங்குடியின் மொழி பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஜோன்ஸ் வாழ்நாளின் பெரும்பகுதியை அமேசானில் கழித்தார். முதுமையில் நாடு திரும்பி வந்த போது அவரைச் சந்தித்த நண்பர் கேட்டார் “அமெரிக்காவிலிருந்து அங்குப் போய்ச்சேர எவ்வளவு நாட்களானது“ ஜோன்ஸ் சொன்னார் “இங்கிருந்து சான்டரெம் வரை ஒன்பது மணி நேர விமான பயணம். பின்பு அங்கேயிருந்து படகில் ஆறு மணி …

குறுங்கதை-33 மொழி அதிகாரம் Read More »

குறுங்கதை 32 நிர்கதி

அவர் சிறுவயதிலிருந்தே புகழ்பெற வேண்டும் என்பதில் மிகுந்த ஆசை கொண்டிருந்தார். இதற்காகவே இசை கற்றுக்கொண்டார். நடனம் பயின்றார். நாடகங்களில் நடிக்கவும் செய்தார். அவரது பெயரையும் புகைப்படத்தையும் சுவரொட்டியில் பார்க்கும் போது மேகக்கூட்டத்தில் மிதப்பது போலச் சந்தோஷம் கொண்டார். சினிமாவில் கதாநாயகனாக நடித்துப் பணமும் மரியாதையும் வசதிகளும் அடைந்த போது புகழ் அவரது வளர்ப்பு நாய் போலக் கூடவே சென்றது. அந்த மகிழ்ச்சியில் தனது வீட்டின் எதிரில் தன்னுடைய உருவச்சிலை ஒன்றை நிறுவச் செய்திருந்தார். ஒவ்வொரு நாளும் அந்தச் …

குறுங்கதை 32 நிர்கதி Read More »

குறுங்கதை 31 கூட்டலை மறந்த மனிதர்

அந்த மனிதருக்குக் கூட்டல் கணக்கு சுத்தமாக மறந்து போயிருந்தது. இரண்டும் இரண்டும் நான்கு என்றோ, ஐம்பது ரூபாயும் ஐம்பது ரூபாயும் சேர்ந்தால் நூறு ரூபாய் என்றோ அவரால் கணக்கிட முடியவில்லை. அவரிடமிருந்தது கழித்தல் கணக்கு மட்டுமே. கூட்டலை மறந்துவிட்டால் உலகம் மிகச்சிறியதாகிவிடும். அனுபவங்களும் சுருங்கிவிடும். பொருள்தேடுதல் முக்கியமற்றுப் போய்விடும். புத்தகங்களோ, இசையோ, பயணமோ எதுவும் தேவைப்படாமல் போய்விடும். கூட்டலை மறந்தவன் உதிர்ந்த சிறகைப் போன்றவன் எனப் பலரும் அவரைக் குற்றம் சாட்டினார்கள். வயது ஏற ஏற சந்தோஷங்கள் …

குறுங்கதை 31 கூட்டலை மறந்த மனிதர் Read More »

குறுங்கதை 30 குற்றத்தின் மலர்

போலீஸ் ஸ்டேஷனுள் ஒரு மஞ்சள் ரோஜாச் செடியை யார் நட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை. அந்தச் செடியில் நிறைய மஞ்சள் ரோஜாக்கள் பூத்திருந்தன. லாக்கப்பில் எவனோ ஒரு குற்றவாளி அடிவாங்கும் போது ஒரு ரோஜாப்பூ “கொடூரம் “என்றபடியே தலைகவிழ்ந்து கொண்டது. மகளைக் காணாமல் தேடும் தந்தை போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வந்து நின்று கண்ணீர் விட்டபோது ரோஜாச் செடி சொன்னது “கண்ணீர் குருதியை விடக் கனமானது.“ சந்தேகத்தின் பேரில் அடித்து இழுத்துவரப்பட்ட இளைஞனின் தாயும் சகோதரிகளும் ஸ்டேஷன் …

குறுங்கதை 30 குற்றத்தின் மலர் Read More »

குறுங்கதை 29 சிரிக்கும் நட்சத்திரம்

பதினாறாம் நூற்றாண்டில் பெர்சியாவில் ஒரு ஞானியிருந்தார். அவன் தன்னைச் சிரிக்கும் நட்சத்திரம் என்று அழைத்துக் கொண்டார். அந்த ஞானி திருமணமானவர். குழந்தைகள் இல்லை. வாசனைத் திரவியம் தயாரிப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அவரது மனைவிக்கு அவர் ஞானி என்பதிலோ, அவரைத் தேடி பலரும் வந்து அறிவுரை கேட்பதிலோ துளியும் மரியாதை கிடையாது. இருவரும் அடிக்கடி சண்டையிடுவார்கள். அவள் பலத்த கூச்சல் போடுவாள். சண்டையின் உச்சத்தில் ஞானி தன் வீட்டிலிருந்த பானை, சட்டி, கரண்டி, தட்டு, ஸ்பூன், டம்ளர், படுக்கை, …

குறுங்கதை 29 சிரிக்கும் நட்சத்திரம் Read More »

குறுங்கதை 28 மொசார்ட்டின் வயலின்

பனிப்பிரதேசமொன்றில் அந்த மேபிள் மரம் ஒற்றையாக நின்று கொண்டிருந்தது. “எனக்கென யாருமில்லை. நான் யாருக்கும் பிரயோசனமாகவும் இல்லை. வாழ்வதே வீண்“ என்று அந்த மரம் சொல்லிக் கொண்டிருந்தது காற்று அம் மரத்தைக் கடக்கும்போது சொன்னது “அப்படி நினைக்காதே. உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது“ இரவில் வான் நிறைந்த நட்சத்திரங்களைக் காணும் போது மேபிள் மரம் சொன்னது. “இத்தனை அழகை நான் கண்ட போதும் அதைப் பகிர்ந்து கொள்ள ஒருவருமில்லை.“ அப்போதும் காற்றுச் சொன்னது. “அப்படி நினைக்காதே. உன் வாழ்க்கைக்கு …

குறுங்கதை 28 மொசார்ட்டின் வயலின் Read More »

குறுங்கதை – 27 காதலுற்ற சிற்பங்கள்

ஒன்றையொன்று காதலித்துக் கொள்ளும் இரண்டு சிற்பங்கள் அந்தக் கோவிலிலிருந்தன. ஒரே பிரகாரத்திலிருந்த அந்தச் சிற்பங்கள் கண்மூடாமல் ஒன்றையொன்று பார்த்தபடியே இருந்தன. ரகசியமாகப் பேசிக் கொண்டன வட்டமுகமும், பருத்த உதடுகளும், மாதுளை போன்ற மார்பகங்களும், வெண்கலப் பானையின் கழுத்து போல வளைந்த இடையும், பெரிய தொடைகளும், சிறிய பாதங்களும் கொண்டிருந்த அந்தப் பெண் சிற்பம் கையில் ஏந்திய ஆடியில் முகம் காணுவதை போல நின்றிருந்தது. ஆண் சிற்பமோ கால் உயர்த்தி நின்ற புரவியில், கையில் குத்தீட்டி ஏந்தியபடி வேட்டைக்குச் …

குறுங்கதை – 27 காதலுற்ற சிற்பங்கள் Read More »

குறுங்கதை 26 அன்பின் வெளிச்சம்

கப்பல் முதலாளியைத் தற்செயலாக அவன் பாலக்காடு ரயில் நிலையத்தில் சந்தித்தான். தட்டில் இட்லி பொட்டலம் வைத்து விற்றுக் கொண்டு வந்தார். அவரை இப்படிக் காணுவது அதிர்ச்சியாக இருந்தது. ஆள் மிகவும் தளர்ந்து போயிருந்தார். சாந்தமான முகம். பரிசுத்தமான கண்கள். கொக்கின் வெண்மையிலிருந்த தலைமயிர், அடர்ந்த தாடி. ரப்பர் செருப்பு. ஒரு காலத்தில் கப்பல் முதலாளி வருகிறார் என்றால் அவர் போட்டிருக்கும் வாசனைத்திரவியத்தின் மணத்திலே தெரிந்துவிடும். ஆள் நல்ல அழகன். பர்மா சில்க் தான் எப்போதும் அணிவார். கையில் …

குறுங்கதை 26 அன்பின் வெளிச்சம் Read More »

குறுங்கதை 25 பாவம் மனிதன்.

மலைகள் ஒன்றையொன்று “சகோதரா“ என அழைத்துக் கொண்டன. நீர்வீழ்ச்சி பாறைகளைப் பார்த்து “என் அன்பே“ எனச் செல்லமாகக் கூப்பிட்டது. மரங்களோ சீறிப்பாய்ந்தோடும் ஆற்றினை “நண்பனே“ என்று அழைத்தன. ஆறு தன்னில் நீந்திவிளையாடும் மீன்களை “என் செல்வங்களே“ என்றது. மீன்களோ ஆமைகளைப் பார்த்து “அண்ணா“ என்று அழைத்தன. ஆமைகள் பாதிக் கண்களைத் திறந்தபடியே முதலையைப் “பெரியப்பா சுகம் தானா“ என்று கேட்டன. முதலை கசிந்த கண்களுடன் ஆற்றின் கரையிலிருந்த யானையைப் பார்த்து “சௌக்கியமா மாமா“ என்றது. யானையோ வானில் …

குறுங்கதை 25 பாவம் மனிதன். Read More »