குறுங்கதை

குறுங்கதை 25 பாவம் மனிதன்.

மலைகள் ஒன்றையொன்று “சகோதரா“ என அழைத்துக் கொண்டன. நீர்வீழ்ச்சி பாறைகளைப் பார்த்து “என் அன்பே“ எனச் செல்லமாகக் கூப்பிட்டது. மரங்களோ சீறிப்பாய்ந்தோடும் ஆற்றினை “நண்பனே“ என்று அழைத்தன. ஆறு தன்னில் நீந்திவிளையாடும் மீன்களை “என் செல்வங்களே“ என்றது. மீன்களோ ஆமைகளைப் பார்த்து “அண்ணா“ என்று அழைத்தன. ஆமைகள் பாதிக் கண்களைத் திறந்தபடியே முதலையைப் “பெரியப்பா சுகம் தானா“ என்று கேட்டன. முதலை கசிந்த கண்களுடன் ஆற்றின் கரையிலிருந்த யானையைப் பார்த்து “சௌக்கியமா மாமா“ என்றது. யானையோ வானில் …

குறுங்கதை 25 பாவம் மனிதன். Read More »

குறுங்கதை 24 தபால்காரன்.

தனக்குத் தானே தபால் எழுதிக் கொள்ளும் ஒருவர் இருந்தார். எழுபது வயதைக் கடந்துவிட்ட அவர் தனியே வசித்தார். அவரது இருபதிமூன்றாவது வயதில் மனைவி இறந்து போனார். அதன்பிறகு அவர் வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவு என்று அவரைத் தேடி வர எவருமில்லை. அவருக்குச் சொந்தமாக மலைச்சரிவில் கொஞ்சம் நிலம் இருந்தது. அதன் ஒரு பகுதியில் வீடு அமைத்துக் கொண்டு வீட்டின் பின்னால் காய்கறிகள் விளைவித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். அவரது தோட்டத்தில் இரண்டு பிளம்ஸ் மரங்கள் …

குறுங்கதை 24 தபால்காரன். Read More »

குறுங்கதை 23 வீடென்பது

சந்தையில் திரியும் மனிதர்களைப் போலப் புதிய வீடுகள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டேயிருக்கின்றன. புதிய வீடுகளுக்குத் தனது பெருமைகளை எவ்வளவு சொல்லியும் நிறைவு வருவதேயில்லை. ஒரு புது வீடு சொன்னது “வீடென்பது ஒரு மலர். அதன் வாசனை வசிப்பவர்களின் இயல்பாலே வெளிப்படுகிறது.“ கொஞ்சம் பழசாக ஆரம்பித்தவுடன் அவை தன்னைப் பிறர் கவனிப்பதில்லை என்று மெலிதாகப் புகார் சொல்ல ஆரம்பிக்கின்றன. இப்போதும் தான் அழகு தான் என்று சுயசமாதானம் செய்து கொள்கின்றன. நடுத்தர வயதுப் பெண் தனது திருமண ஆல்பத்தைப் புரட்டிப் பார்ப்பதைப் போல ஆதங்கத்துடன், வெட்கத்துடன் நினைவில் ஆழ்ந்து …

குறுங்கதை 23 வீடென்பது Read More »

குறுங்கதை-22 இனிப்புப் பொட்டலம்

ஒரு பொட்டலம் பூந்தி இவ்வளவு வெறுப்பை உருவாக்கிவிடும் என ஒரு போதும் நினைத்ததில்லை. ஆனால் அப்படித்தான் நடந்தது. இன்றைக்கும் எனக்குப் பூந்தி பிடிக்காது. அதற்குக் காரணம் எனது மூத்த அண்ணன் பாபு. நிலத்தரகராக வேலை செய்த என் அப்பா எப்போதும் இரவு பத்து மணிக்கு தான் வீடு திரும்புவார். அவர் வரும் போது தள்ளுவண்டிக்கடையில் ஒரு பொட்டலம் பூந்தி,கொஞ்சம் காரசேவு அல்லது பக்கோடா வாங்கிக் கொண்டு வருவார். நாங்கள் ஐந்து பிள்ளைகள் இருந்த போதும் அப்பா உறங்கிக் …

குறுங்கதை-22 இனிப்புப் பொட்டலம் Read More »

குறுங்கதை-21 வண்ணங்களின் தாய்.

ஓவியர் வின்சென்ட் வான்கோ வீடு திரும்பும் போது இரவாகியிருந்தது. இன்றும் அவரால் நினைத்தபடியே ஓவியம் தீட்டமுடியவில்லை. கோதுமை வயலினைக் கடந்து செல்லும் காற்றை வரைய அவர் போராடிக் கொண்டிருந்தார். நினைத்தபடி படம் வரவில்லை. ஆகவே சோர்ந்து போய் வீடு திரும்பியிருந்தார். வீட்டின் கணப்பு அடுப்பிற்கு விறகுகள் இல்லை. சமைத்து உண்பதற்கு உருளைக்கிழங்குகள் கிடையாது. பசி . தாங்க முடியாத பசி அவரை வாட்டியது. பனிக்காலத்தின் இரவுகள் தனிமையை அதிகம் உணர்த்தக்கூடியவை. குளிர் உடலை விடவும் மனதை அதிகம் …

குறுங்கதை-21 வண்ணங்களின் தாய். Read More »

குறுங்கதை 20 புத்தரைச் சந்தித்த கழுகு

ராஜகிருகத்தை நோக்கி புத்தர் நடந்து கொண்டிருந்த நாளில் ஒரு கழுகு அவரைச் சந்திப்பதற்காகத் தரையிறங்கியது.  கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான நகங்களும், அகண்ட இறக்கைகளும் கொண்ட அக்கழுகு கேட்டது “கோதமரே நீங்கள் ஏன் பறப்பதில்லை.“ புத்தர் சொன்னார் “நானும் பறக்கவே செய்கிறேன். ஆனால் வானத்தில் அல்ல“ கழுகு மறுபடியும் கேட்டது “வானில் பறக்கையில் பெரியதாக உள்ள உலகம் தரையிறங்கும் போது சிறியதாகிவிடுகிறது.. அது ஏன்“ கோதமர் சொன்னார் “பறத்தலின் போது நீ உடலை வெல்கிறாய். பூமியில் …

குறுங்கதை 20 புத்தரைச் சந்தித்த கழுகு Read More »

குறுங்கதை -19 பிரார்த்திக்கும் ரோபோ.

அந்த இளைஞன் அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியிருந்தான். அது ஒரு வகை ரோபோ. வேலை வேலை என்று பரபரப்பாக ஒடிக் கொண்டேயிருந்த காரணத்தால் அவனுக்குப் பிரார்த்தனை செய்ய நேரமில்லை. ஆகவே அவன் பொருட்டான பிரார்த்தனைகளைச் செய்யப் புதிய ரோபோவை உருவாக்கியிருந்தான். சின்ன வயதில் கடவுள் தன் வீட்டுப் பூஜையறையில் வசிப்பதாகவே நம்பிக் கொண்டிருந்தான். வயது வளர வளர அவன் கடவுளிடமிருந்து விலகிப் போனான்.. கல்லூரி வயதில் பிரார்த்தனை என்பது இயலாமைகளின் பட்டியல் என்று தோன்றியது. …

குறுங்கதை -19 பிரார்த்திக்கும் ரோபோ. Read More »

குறுங்கதை -18 சிறைச்சாலை மலர்கள்

அவனைத் திருடன் என்று குற்றம்சாட்டி சிறையில் அடைத்தார்கள். ஆனால் அவனது தோற்றம் சாதுவைப் போலிருந்தது. மெலிந்த உருவம் கொண்டிருந்தான். யானையின் கண்களைப் போன்ற கூர்மையான பார்வை. சுவருடன் ரகசியம் பேசுகிறவன் போல சிறைச்சாலையின் சுவரைப் பார்த்து பகலெல்லாம் அமர்ந்திருந்தான். காவலாளிகள் சில நேரம் அவனிடம் கேள்வி கேட்கும் போது கூட விரல்களால் காற்றில் எழுதியே பதில் தருவான். அந்தச் சிறைச்சாலை ஒரு தீவிலிருந்தது. சவப்பெட்டியைப் போலச் சிறியதாக இருந்த அவனது சிறையில் எலி செத்துக்கிடப்பது போல ஒரு …

குறுங்கதை -18 சிறைச்சாலை மலர்கள் Read More »

குறுங்கதை 17 அந்தச் சிறுவன்

சக்கரவர்த்தியின் புதிய உடைகள் என்ற கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தினமும் புதுப்புது மோஸ்தரில் ஆடைகளை அணிய ஆசை கொண்ட அரசனுக்குப் பாடம் கற்பிக்க இரண்டு நெசவாளிகள் அரூப அடை நெய்து தருவதாக வாக்களித்தார்கள். அதன்படியே அவர்கள் நெய்து தந்த கண்ணுக்குப் புலப்படாத ஆடையை அணிந்து கொண்ட சக்கரவர்த்தி தெருவில் ஊர்வலம் வந்த போது ஊரே கண்ணுக்குப் புலப்படாத உடையைப் பாராட்டியது. ஆனால். ஒரு சிறுவன் மட்டும், “சக்கரவர்த்தி ஆடையே அணியவில்லை. அம்மணமாக இருக்கிறார்“ என்று உண்மையை உரத்துச் சொன்னான். …

குறுங்கதை 17 அந்தச் சிறுவன் Read More »

குறுங்கதை 16 நினைவுகளின் குடுவை

விண்ணாரம் என்ற அந்த மலை மிக உயரமானது. பதினெட்டு வயது இளைஞனாக இருந்த அவன் உற்சாகமாக மலையேறினான். கடினமான பாதையில் கூட அவன் சோர்ந்து போகவில்லை. மலையின் உச்சிக்கு வந்து நின்றபோது மலை அவனிடம் கேட்டது. “எதற்காக இங்கே வந்திருக்கிறாய்“ “மனது நிறையச் சந்தோஷம் நிரம்பியிருக்கிறது. அதைக் கொடுத்துப்போகவே வந்திருக்கிறேன்“ என்றான் இளைஞன் “உன் சந்தோஷத்தைக் கொடு, அதை மேகங்களாக்கி வானில் மிதக்க விடுகிறேன்“ என்றது மலை. இளைஞன் அப்படியே செய்தான். அந்த இளைஞனுக்குச் சில ஆண்டுகளில் …

குறுங்கதை 16 நினைவுகளின் குடுவை Read More »