குறுங்கதை

குறுங்கதை- 8 கனவின் நடனம்

அந்த நகரில் எல்லோரும் கனவில் நடனமாடினார்கள். விடிந்து எழுந்தவுடன் தாங்கள் கனவில் ஆடிய நடனத்தைப் பற்றி வெட்கத்துடன், பெருமிதத்துடன், கூச்சத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு இளம் பெண் சொன்னாள். நான் “நீர்க்குமிழி வானில் பறப்பது போல நடனமாடினேன்“. ஒரு இளைஞன் சொன்னான் “பாய்ந்தோடும் குதிரையின் வேகம் போலிருந்தது எனது நடனம்“. ஒரு முதியவர் சொன்னார் “நதிக்கரையோர நாணலின் அசைவு போன்றிருந்தது எனது நடனம்“. வீட்டு வேலைக்காரப் பெண் சொன்னாள் “காற்றில் ஈரத்துணிகள் உலர்வது போலிருந்தது எனது ஆட்டம்“. …

குறுங்கதை- 8 கனவின் நடனம் Read More »

குறுங்கதை -7 சாலை ஓவியன்

சாலையில் கரித்துண்டுகளைக் கொண்டு ஓவியம் வரையும் ஒருவனிருந்தான். அவன் தினமும் பின்னிரவில் யாருமற்ற சாலையில் அமர்ந்தபடியே ஓவியம் வரைந்து கொண்டிருப்பான். மற்ற சாலை ஓவியர்களைப் போலக் கடவுள் உருவத்தை அவன் வரைவதில்லை. மாறாகத் தாயும் சேயுமாக இருவரை தான் வரைவான். ஒவ்வொரு நாளும் அந்தத் தாயின் முகம் மாறிக் கொண்டேயிருக்கும். சில சமயம் அந்த முகத்தில் தூய மகிழ்ச்சி ததும்பும். சில வேளை சோகம் படிந்ததாகக் காணப்படும். பெரும்பான்மை நேரம் வெறித்த பார்வை கொண்ட முகமாகயிருக்கும். ஆனால் …

குறுங்கதை -7 சாலை ஓவியன் Read More »

குறுங்கதை -6 பச்சைக் காதுள்ள முயல்

மலையடிவாரத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மருதன் எப்போதும் வேங்கை மரத்தடியில் உட்கார்ந்து கொள்வான். மேகங்கள் கடந்து போவதை வேடிக்கை பார்ப்பது தான் அவனது பொழுதுபோக்கு. சில நேரங்களில் ஆடுகளுடன் பேசிக் கொண்டிருப்பான். மருதனுக்கென யாருமில்லை. இந்த ஆடுகளும் கூட அவனுக்குச் சொந்தமானவையில்லை. நல்லான் குடும்பத்துக்குச் சொந்தமான ஆடுகளை மேய்ப்பவனாக இருந்தான். தான் எதற்காக வாழ்கிறோம். ஏன் தன்னை வாழ்க்கை இப்படியிருக்கிறது எனச் சில நேரம் சலித்துக் கொள்வான். ஆனால் இதிலிருந்து விடுபட அவனுக்கு வழிதெரியவில்லை ஒரு நாள் …

குறுங்கதை -6 பச்சைக் காதுள்ள முயல் Read More »

குறுங்கதை- 5 எவரது கண்ணீர்

திருமண வீட்டில் அந்த முதியவரைக் கண்டேன். திருமண மேடையைப் பார்த்தவாறு சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். எண்பது வயதைத் தாண்டிய தோற்றம். கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. வீங்கிய பாதங்கள். பட்டு வேஷ்டியைத் தளர்வாகக் கட்டியிருந்தார். வேஷ்டி விலகி தொடை தெரிந்தது. சிறுவர்கள் அணிவது போலக் காலர் இல்லாத  சட்டை. மணமகளின் தாத்தா என்றார்கள். அவரது கழுத்து ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்தது. அவர் பேசும் போது கிணற்றுக்குள்ளிருந்து சப்தம் வருவது போலத் தெளிவற்றுக் கேட்டது. வீட்டில் படுக்கையிலே கிடப்பவர் …

குறுங்கதை- 5 எவரது கண்ணீர் Read More »

குறுங்கதைகள் -3 பறவைகளின் தையற்காரன்

மேற்குமலையின் அடர்ந்த வனத்தை நெடுங்காடு என்றார்கள். அந்த நெடுங்காட்டினை அடுத்த கிராமம் ஒன்றில் ஆதன் என்ற தையற்காரன் வசித்து வந்தான். இயந்திரத்தைப் பயன்படுத்தாமல் தானே ஊசிகள் செய்து தனது கையால் அவன் தையல்வேலைகள் செய்துவந்தான். கிராமவாசிகளுக்கான உடைகளைத் தைத்துக் கொடுப்பதல்ல அவனது வேலை. அவன் பறவைகளின் தையற்காரன். பறவை தனது உதிர்ந்த இறகினை  கவ்விக் கொண்டு வந்து அவனிடம் தந்து தனது ரெக்கையோடு சேர்த்துத் தைத்துவிடச் சொல்வது வழக்கம். தனது விசேச ஊசிகளைக் கொண்டு கச்சிதமாக அதைப் …

குறுங்கதைகள் -3 பறவைகளின் தையற்காரன் Read More »

குறுங்கதை 2 சிறு ஓசை

அமிர்தவர்ஷிணி தான் அதைக் கண்டுபிடித்தாள். சமைத்துக் கொண்டிருந்த போது கரண்டிகள் வைக்கும் ஸ்டேண்டில் இருந்து தவறி கீழே விழுந்த ஸ்பூன் சப்தம் எழுப்பவேயில்லை. இவ்வளவு பெரிய ஸ்பூன் தரையில் விழுந்து ஏன் சப்தம் வரவில்லை. ஒரு இறகு உதிர்வதைப் போல மௌனமாக எப்படிக் கீழே விழுந்தது என யோசித்தபடியே அவளாக ஒரு ஸ்பூனை எடுத்து வேண்டுமென்றே கீழே போட்டாள். அந்த ஸ்பூனும் சப்தமிடவில்லை. என்ன குழப்பமிது என்றபடியே டிபன் கேரியரில் சொருகும் கனமான ஸ்பூனை எடுத்து உயரமாகத் …

குறுங்கதை 2 சிறு ஓசை Read More »

குறுங்கதை – 1 அரசனின் தூண்டில்

ஆண்டுக்கு ஒருமுறை மன்னன் மீன்பிடிப்பதற்காக நளா ஆற்றிற்குச் செல்வது வழக்கம். புதிய மன்னராகப் பதவியேற்றுக் கொண்டபிறகு துங்கன் மீன்பிடிப்பதற்கு ஆர்வம் காட்டவேயில்லை. தனது எல்லையற்ற அதிகாரத்தை உலகம் அறியும்படியாக அவன் குரூரமான தண்டனைகளை அறிவித்து வந்தான். மக்களுக்குத் துங்கனின் பெயரைக் கேட்பதே அச்சம் தருவதாகியிருந்தது. துங்கனின் மூன்று மனைவிகள் ஒரே நேரத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள். கள்ள உறவு குறித்த சந்தேகம் தான் காரணம் என்றார்கள். அவனது விருப்பத்திற்காக ஆண்டு முழுவதும் அவனது மாளிகை மீது மழை …

குறுங்கதை – 1 அரசனின் தூண்டில் Read More »

உருதுக்கதை

ஜோகிந்தர் பால் – உருதுக்கதை என் நாவலில் வரும் கதாநாயகனும் கதாநாயகியும் என்மீது அதிருப்தி கொண்டிருந்தார்கள் நாவலின் கடைசியில் தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என நான் செய்திருந்த முடிவு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சரியான சந்தர்ப்பம் வருவதாகக் காத்திருந்தார்கள். முடிவில் ஒருநாள் நாவலில் இருந்து வெளியேறி மறைந்து போய்விட்டார்கள். நாவலின் பிரதி முழுவதும் தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவேயில்லை எப்படிக் கண்டுபிடிப்பது, எங்கே போயிருப்பார்கள், எனக்குக் கவலை உண்டானது அவர்களைக் கண்டுபிடிக்கமுடிந்தால் உடனடியாகத் …

உருதுக்கதை Read More »

சிறுமீன்.

 குறுங்கதை அந்த ஊரில் ஒரு குளமிருந்தது. அதில் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கான மீன்கள் வசித்தன. எங்கிருந்தோ தினமும் ஒரு கொக்கு அங்கே பறந்து வந்து மீன்களைப் பிடித்துத் தின்னத் துவங்கியது. அந்தக் கொக்கு  அலகில்  மீனைப் பிடித்து வைத்துக் கொண்டு கொல்வதற்கு முன்பு கடுமையாக பரிகாசம் செய்வதுண்டு. உங்களை ஏன் கொல்கிறேன் தெரியுமா. உங்களால் ஒரு நாளும் வானத்தில் பறக்க முடியாது. இந்தக் குளத்தைத் தாண்டி வெளிஉலகம் தெரியாது. காடுகள், மலைகள் நகரங்கள் என எதையும் கண்டதேயில்லை. …

சிறுமீன். Read More »

இரண்டு குறுங்கதைகள்

காதல்மேஜை. முள்கரண்டி ஒன்று வெள்ளியால் ஆன ஸ்பூன் ஒன்றை நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருந்தது. இருவரும் மிக நெருக்கமாக ஒரே மேஜையில் இருந்தபோதும் ஸ்பூன் தான் ஒரு பேரழகி என்ற பெருமிதத்தில் முள்கரண்டியை  பெரிதாக கண்டு கொள்ளவேயில்லை முள்கரண்டி தீராத காதலின் ஏக்கத்துடன் ஸ்பூனை பார்த்து சொன்னது .”தேனில் கிடந்து ஸ்பூன்களின் குரலும் கூட இனிப்பான இருக்கிறது. அதற்காகவே காதலிக்க விரும்புகிறேன்.” மாறாக ஸ்பூன் சொன்னது .”முள்கரண்டிகள் அருவருப்பானவை. அவை எதையும் லாவகமாக கையாளுவதேயில்லை. குத்தி கிழிப்பது …

இரண்டு குறுங்கதைகள் Read More »