குறுங்கதை – 1 அரசனின் தூண்டில்
ஆண்டுக்கு ஒருமுறை மன்னன் மீன்பிடிப்பதற்காக நளா ஆற்றிற்குச் செல்வது வழக்கம். புதிய மன்னராகப் பதவியேற்றுக் கொண்டபிறகு துங்கன் மீன்பிடிப்பதற்கு ஆர்வம் காட்டவேயில்லை. தனது எல்லையற்ற அதிகாரத்தை உலகம் அறியும்படியாக அவன் குரூரமான தண்டனைகளை அறிவித்து வந்தான். மக்களுக்குத் துங்கனின் பெயரைக் கேட்பதே அச்சம் தருவதாகியிருந்தது. துங்கனின் மூன்று மனைவிகள் ஒரே நேரத்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள். கள்ள உறவு குறித்த சந்தேகம் தான் காரணம் என்றார்கள். அவனது விருப்பத்திற்காக ஆண்டு முழுவதும் அவனது மாளிகை மீது மழை …