குறுங்கதை 25 பாவம் மனிதன்.
மலைகள் ஒன்றையொன்று “சகோதரா“ என அழைத்துக் கொண்டன. நீர்வீழ்ச்சி பாறைகளைப் பார்த்து “என் அன்பே“ எனச் செல்லமாகக் கூப்பிட்டது. மரங்களோ சீறிப்பாய்ந்தோடும் ஆற்றினை “நண்பனே“ என்று அழைத்தன. ஆறு தன்னில் நீந்திவிளையாடும் மீன்களை “என் செல்வங்களே“ என்றது. மீன்களோ ஆமைகளைப் பார்த்து “அண்ணா“ என்று அழைத்தன. ஆமைகள் பாதிக் கண்களைத் திறந்தபடியே முதலையைப் “பெரியப்பா சுகம் தானா“ என்று கேட்டன. முதலை கசிந்த கண்களுடன் ஆற்றின் கரையிலிருந்த யானையைப் பார்த்து “சௌக்கியமா மாமா“ என்றது. யானையோ வானில் …