வகுப்பறை
காரைக்கால் கீழையூர் அரசுப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் விசாகன் மாணவர்களுக்கான புத்தக அறிமுக நிகழ்வில் டோட்டோ சான் பற்றிய எனது உரையை வகுப்பறையில் ஒளிபரப்பியிருக்கிறார். யூடியூப்பில் உள்ள எனது காணொளியை இது போல வகுப்பறையில் ஒளிபரப்பியது பாராடிற்குரிய முயற்சி. இந்நிகழ்வில் நூறு மாணவர்களும் எட்டு ஆசிரியர்களும் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியைக் காணும் போது சந்தோஷமாகயிருக்கிறது. விசாகனுக்கு எனது அன்பும் நன்றியும்