எனது தபால்பெட்டி எழுதிய கடிதம் சிறார் நூலை வாசித்துவிட்டு தங்ககோபி என்ற மாணவன் அஞ்சல் அட்டை அனுப்பி வைத்திருக்கிறான். அதில் முதன்முறையாக தான் தபால் பெட்டியை பார்த்த அனுபவம் பற்றி எழுதியுள்ளான். படிக்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

தபால்பெட்டி எழுதிய கடிதம் நூலிற்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராட்டுக் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்கள். தற்போது அந்நூல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் வெளியாகும்

தபால் பெட்டி எழுதிய கடிதம் நூலை காமிக்ஸ் புத்தகமாக கொண்டு வர வேண்டும் என்பதே எனது ஆசை.
••