சிறுகதை

பனிக்கரடியின் கனவு

புதிய சிறுகதை. மே 2023. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைப் பார்வையிட டெல்லியிலிருந்து மத்திய குழுவினர் வருகிறார்கள் என்ற தகவல் கிடைத்த நாளிலிருந்து அந்த அலுவலகம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாறிமாறி தொலைபேசி அழைப்புகள். உயரதிகாரிகளின் அவசர உத்தரவுகள், இதன் காரணமாக வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றிய தயாபரன் பதற்றமாகியிருந்தார். அவரது ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாகி பின் மண்டை மற்றும் புருவங்கள் வலிக்க ஆரம்பித்திருந்தன. வழக்கமாகச் சாப்பிடும் பிரஷர் மாத்திரையை வாயிலிட்டுத் தண்ணீர் குடித்துக் கொண்டார். …

பனிக்கரடியின் கனவு Read More »

இரவுக்காவலாளியின் தனிமை

புதிய சிறுகதை. அந்திமழை ஏப்ரல் 2023 இதழில் வெளியானது. மாநகரில் தன்னைப் போல ஆயிரம் பேர்களுக்கு மேலாக இரவுகாவலாளிகள் இருக்கக் கூடும் என்று ஜோசப் நினைத்துக் கொண்டான். மற்றவர்களுக்கும் அவனுக்குமான வேறுபாடு முக்கியமானது. அவன் ஒரு தேவாலயத்தின் இரவுக்காவலாளியாக இருந்தான். கர்த்தருக்கும் திருடனுக்கும் நடுவே தானிருப்பதாக உணர்ந்தான். புனித மரியன்னை தேவலாயம் நூற்றாண்டு பழமையானது. கோவிலின் பெரிய கோபுரம் நூற்று இருபது அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதியில் எட்டு பெரிய சாளரங்கள் இருந்தன. அவற்றில் நிறப்பதிகைக் …

இரவுக்காவலாளியின் தனிமை Read More »

முகமது அலியின் கையெழுத்து

புதிய சிறுகதை. (உயிர்மை ஏப்ரல் 2023 இதழில் வெளியானது) அவனுக்கு முப்பது வயதிருக்கும். தூக்கமில்லாத கண்கள். கலைந்த தலையும் வெளிறிய உதடுகளும் கொண்டிருந்தான். அரைக்கை சட்டை. அதுவும் சாம்பல் நிறத்தில். அதற்குப் பொருத்தமில்லாது ஊதா நிற பேண்ட் அணிந்திருந்தான். காலில் ரப்பர் செருப்பு அதன் ஒரங்கள் தேய்ந்து போயிருந்தன. கையில் ஒரு துணிப்பை. அதற்குள் அரிய பொருள் எதையோ வைத்திருப்பவன் போல மடியில் கவனமாக வைத்திருந்தான் தாலுகா அலுவலகத்தில் இப்படியானவர்களை அன்றாடம் காண முடியும் என்பதாலோ என்னவோ …

முகமது அலியின் கையெழுத்து Read More »

நீலாம்பூர் சென்றவன்

1980களில் இது நடந்திருக்கலாம். அவரது பெயர் ஜெகநாதராவ். அவருக்கு அலங்கார விளக்குகள் மற்றும் கண்ணாடி பொருட்கள் விற்பனை செய்தவகையில் மூன்று லட்சத்து அறுபத்தி மூவாயிரம் ரூபாய் பாக்கியிருந்தது. அந்தப் பணத்தை வசூல் செய்ய யாராலும் முடியவில்லை. நீண்டகாலப் பாக்கியை வசூல் செய்வதற்காக அவனை நீலாம்பூர் அனுப்பி வைத்தார்கள். .•• அவனது பெயரை தெரிந்து கொள்ளும் முன்பு, அவன் ஏன் நீலாம்பூருக்கு செல்ல விரும்பினான் என்பதைத் தெரித்துக் கொள்வது முக்கியம். சில மாதங்களுக்கு முன்பு விடிகாலையில் அவனுக்கு ஒரு …

நீலாம்பூர் சென்றவன் Read More »

தலைகள் இரண்டு

புதிய சிறுகதை பிப்ரவரி 16 2023 குளோபல் செக்யூரிட்டி சிஸ்டம் நிறுவனத்தில் மனோகர் வேலை செய்து கொண்டிருந்தான். கண்காணிப்புக் கேமிரா பொருத்துவது தான் அவனது பணி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக குளோபல் செக்யூரிட்டி சிஸ்டத்தில் வேலை கிடைத்தது. மூன்று மாத பயிற்சி கொடுத்தார்கள். அதன்பிறகு நேரடியாகக் கண்காணிப்புக் கேமிரா பொருத்தும் பணியில் ஈடுபடத் துவங்கிவிட்டான் அவனது நிறுவனம் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது. அவர்கள் கண்காணிப்பு கேமிராவை பொருத்தி தருவதுடன் அதன் பராமரிப்பு பணியினையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதால் …

தலைகள் இரண்டு Read More »

அப்பாவின் பெயர்

புதிய சிறுகதை பிப்ரவரி 9 2023 பேராசிரியர் அருண்சர்மா தொலைபேசியில் அவளை அழைத்தபோது இரவு ஒன்பது மணியிருக்கும். அவரது குரலில் அவசரம் தெரிந்தது “சகுந்தலா உங்கப்பா வீட்டுக்கு வந்துட்டாரா“ “இல்லை. ஏதோ மீட்டிங் இருக்குனு வெளியே போயிருக்கார் இன்னும் வரலை“ “அவர் ஐசிஎல் அவார்ட் செலக்சனுக்குப் போயிருக்கார். அதுல உன் பேரு இருக்கு. அவர் இதைப் பற்றி ஒண்ணும் சொல்லலையா“ “இல்லையே. “ “மூணு நடுவர்ல உங்கப்பாவும் ஒருத்தர். நிச்சயம் உனக்கு அவார்ட் கிடைக்கும்னு நினைக்குறேன்“ “லிஸ்ட்ல …

அப்பாவின் பெயர் Read More »

தர்மகீர்த்தியின் மயில்கள்

புதிய சிறுகதை பிப்ரவரி 7 2023 இந்தக் கதையில் நடக்கும் நிகழ்வுகள் ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நடந்திருக்கக்கூடும். அல்லது அந்த நூற்றாண்டில் பல்லவ இளவரசனாக இருந்த தர்மகீர்த்தி பற்றியதாக இருக்கவும் கூடும். தர்மகீர்த்தி ஒரு சிறுகாப்பியம் எழுதியிருக்கிறார். அதன் பெயர் தர்மகீர்த்தியாணம். முடிமன்னர்கள் கவிஞராக மாறுவதும் கவிதைகள் எழுதி அங்கீகாரம் கேட்பது தமிழ் கவிதை மரபின் விசித்திரம். தன்னிடம் இல்லாத எந்த அங்கீகாரத்தைக் கவிதையின் வழியே மன்னர் அடைய முற்படுகிறார் என்பது புரியாதது.. தோல்வி தான் மன்னர்களைக் …

தர்மகீர்த்தியின் மயில்கள் Read More »

வலது கன்னம்

புதிய சிறுகதை. பிப்ரவரி 3. 2023 வீட்டுச் சாமான்கள் முழுவதையும் வேனில் ஏற்றியிருந்தார்கள். அந்த வேன் முதுகில் வீட்டை தூக்கிச் செல்லும் பெரியதொரு நத்தையைப் போலிருந்தது ஒரு வீட்டிற்குள் இவ்வளவு பொருட்கள் எப்படியிருந்தன என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். அவனுக்குப் பதிநான்கு வயது நடந்து கொண்டிருந்தது. ஆனால் பத்துவயது பையன் போல மெலிந்த தோற்றம் கொண்டிருந்தான். போலீஸ் கட்டிங் போல வெட்டப்பட்ட தலை. கழுத்து எலும்புகள் சற்றே துருத்திக் கொண்டிருந்தன. முதன்முறையாக அவர்கள் வேனில் பயணம் …

வலது கன்னம் Read More »

கோபத்தின் எடை

புதிய சிறுகதை. 2023 ஜனவரி 28. நீண்டநேரம் பேருந்தில் அமர்ந்து வந்தது பிரேமாவிற்குக் கால் சூகை பிடித்துக் கொண்டது. பேருந்து கோவில்பட்டி வந்து சேர்ந்த போது இரவு மணி பதினோறு இருபதைத் தாண்டியிருந்தது பஸ்ஸை விட்டு இறங்கி காலை உதறிக் கொண்டாள். தலையில் போடப்பட்ட முக்காட்டினை விலக்கி சேலையைச் சரிசெய்து கொண்டாள். மூக்குக்கண்ணாடியில் படித்த தூசியைச் சேலை நுனியால் துடைத்துக் கொண்டாள். மனதில் கோபம் நிரம்பிவிட்டால் ஏனோ கால் வீங்கிவிடுகிறது. வீட்டிலிருந்த போதும் இதை உணர்ந்திருக்கிறாள். பேருந்து …

கோபத்தின் எடை Read More »

ஞாபகக் கல்

புதிய சிறுகதை அரூ இணைய இதழில் வெளியானது •••சிறிய அலுமினிய டப்பா ஒன்றினுள் ஒரு கல்லையும் மூன்று சொற்கள் கொண்ட ஒரு துண்டு சீட்டினையும் அம்மா விட்டுச் சென்றிருந்தாள். இந்தப் பெட்டி அவளது பட்டுப்புடவைகளுக்குள் மறைத்து வைக்கபட்டிருந்தது. அம்மா இறந்தபிறகு அவளது பொருட்களை அப்படியே பீரோவில் வைத்துப் பூட்டி அதன் சாவியை அப்பா வைத்திருந்தார். அதை நாங்கள் திறக்கவேயில்லை கோடை விடுறைக்கு அமெரிக்காவிலிருந்து லீலா தனது பிள்ளைகளுடன் வந்திருந்த நாளில் அவள்தான் அப்பாவிடம் கேட்டு பீரோ சாவியை …

ஞாபகக் கல் Read More »