சிறுகதை

சதுரங்க ராணி

புதிய சிறுகதை. ஜுலை 8 2026 செபாஸ்டியன் தனியே சதுரங்கம் ஆடிக்கொண்டிருந்தார். அதுவும் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் ஜேசி சாலையின் நடைபாதையில். ரயில் நிலையத்தின் தெற்குபக்கம் கிளைவிடும் சாலையது. அதன் வழியாகச் சென்றால் விக்டோரியா காம்ப்ளெக்ஸை அடையலாம் . அது தான் அந்தப் பகுதியின் அடையாளம். மிகப் பெரிய வணிக வளாகம். அந்தச் சாலையில் ரத்னா சலூனை ஒட்டிய நிழற்குடையினுள் அவர் அமர்ந்திருந்தார். அன்றாடம் வீட்டிலிருந்து மின்சார ரயிலில் பயணம் செய்து அங்கே வந்து சேருவார். …

சதுரங்க ராணி Read More »

அருவியால் முடியாதது

புதிய சிறுகதை. ஜுலை 1 2026 சேர்மக்கனி தனது வீட்டிலிருந்த நாய்களின் மீது பொறாமை கொண்டிருந்தான். அவற்றைப் பராமரிப்பதற்காகத் தனது சம்பளத்தை விடவும் முதலாளி அதிகம் செலவு செய்கிறாரே என்ற பொறாமையும், நாய்களுக்குக் கிடைப்பது போல அன்றாடம் கறிச்சோறு தனக்குக் கிடைப்பதில்லையே என்ற கோபமும் அவனுக்கிருந்தது. அந்தப் பங்களா குற்றாலத்திலிருந்தது. நேஷனல் மில் முதலாளியான காசிநாதன் கட்டிய பங்களா . ஆறாயிரம் சதுர அடி கொண்ட வீடு. சீசன் துவங்கியதும் காசிநாதன்  குடும்பத்தினர் ஒரு மாத காலம் …

அருவியால் முடியாதது Read More »

காலையின் சுழிப்பு.

புதிய சிறுகதை. ஜுன் 23. 2026 ஏழாவது செக்டார் முழுவதும் மரங்கள் நிரம்பியிருந்தன. அதுவும் கல்பனா ஸ்டோரை ஒட்டி வடக்காகத் திரும்பும் வீதியில் இரண்டு பக்கமும் மஞ்சள் கொன்றையும் வேம்பும் வாகையும் இருந்தன. பெரும்பாலும் தனிவீடுகள். விடிகாலை வெளிச்சத்தில் அந்த வீதியைப் பார்க்க வரையப்பட்ட சித்திரம் போலத் தோற்றமளிக்கும். அதற்காகவே நந்தகுமார் சூரிய உதயமானவுடன் நடக்க ஆரம்பிப்பார். அரசு எழுதுபொருள் விற்பனைக் கிடங்கில் பணியாற்றும் அவர் சமீபத்திலே அந்தப் பகுதிக்குக் குடிவந்திருந்தார். அவருக்குக் கடுமையான மூட்டுவலி மற்றும் …

காலையின் சுழிப்பு. Read More »

இரும்பின் ஆசி

புதிய சிறுகதை. ஜுன் 15. 2026 தனது வீட்டைக் கடந்து ஒரு போலீஸ் வேன் செல்வதை செல்லம்மாள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிச்சயம் இன்றைக்கு பெரிய கலவரம் நடக்கப்போகிறது.  காலையிலிருந்தே தெக்கம்பட்டி பரபரப்பாகியிருந்தது. கலெக்டர் வரப்போவதாகப் பேசிக் கொண்டார்கள்.  இரண்டு மூன்று அரசாங்க ஜீப்புகள் கிழக்கு  நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. செல்லம்மாவின் இளையமகன் முத்துக்காளை கூட வேடிக்கை பார்க்கப் போயிருந்தான். இத்தனை பேர் சேர்ந்து கொண்டு சின்னமாயனின் சாமியைப் பறிக்க முற்படுவது நியாயமில்லை. அவர்களா இத்தனை ஆண்டுகள் …

இரும்பின் ஆசி Read More »

திரையில் அமரும் ஈ

புதிய சிறுகதை. ஜுன் 9 .2026 மல்லிகாவிற்குச் சினிமாவில் வரும் திருமணக்காட்சியை மிகவும் பிடிக்கும். அதற்காகவே அவள் சினிமா பார்த்தாள். தனது பக்கத்துவீட்டுப் பையன்களிடம் எந்தத் தியேட்டரில் என்ன படம் ஒடுகிறது என்பதை விசாரிப்பதோடு அதில் கல்யாணக் காட்சி இருக்கிறதா என்றும் கேட்டுத் தெரிந்து கொள்வாள். “ இருக்கிறது“ என்று சொன்னால் “ கடைசிக்காட்சியிலா“ எனக்கேட்பாள். “ இல்லைக்கா..பாதியில வருது“ என்று சொல்லிவிட்டால் போதும் அடுத்த நாளே அந்தப்படத்திற்குப் போய்விடுவாள். சினிமா பார்ப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் …

திரையில் அமரும் ஈ Read More »

மறையாத சிரிப்பு

புதிய சிறுகதை. மே 30 2026 காலையிலிருந்தே கையில் அந்த லட்டை வைத்துக் கொண்டு தெருத்தெருவாகச் சுற்றிக் கொண்டிருந்தான் முருகேசன். பனிரெண்டு வயது முடியப்போகிறது என்றாலும் எட்டு வயதுப் பையன் போல மெலிந்த தோற்றம் கொண்டிருந்தான். ஒட்ட வெட்டிய கிராப். அரைக்கால் டவுசர். கட்டம் போட்ட சட்டை. காலில் ரப்பர் செருப்பு. அவன் படித்த பள்ளிக்கூடத்தில் திங்கள் மற்றும் வெள்ளி மட்டுமே யூனிபார்ம் அணிந்துவர வேண்டும். மற்ற நாட்கள் எந்த உடையும் அணிந்து கொள்ளலாம். அன்றைக்குச் சனிக்கிழமை …

மறையாத சிரிப்பு Read More »

இன்னொரு பயணம்

புதிய சிறுகதை மே 18 2026 “என்னோட நீம் டூத்பேஸ்டை எடுத்து வச்சிக்கிட்டேன். உன் பேஸ்டை வச்சிட்டயா“ என மனைவியிடம் கேட்டார் தீர்த்தகிரி. “நான் ஹெர்பல் பொடில பல் தேய்க்கிறேன். அதை மாற்ற முடியாது. ஒரு டப்பா எடுத்து வச்சிருக்கேன். போதும்லே“ எனக்கேட்டாள் பவானி. அவர்கள் மும்பையில் உள்ள மகனின் வீட்டிற்குச் செல்வதற்கான பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ராஜேஷ் பிளைட் டிக்கெட் அனுப்பி வைத்தவுடன் பயணம் போக வேண்டியது தான். அறுபத்தியெட்டு வயதான தீர்த்தகிரி முந்திய நாளே …

இன்னொரு பயணம் Read More »

முணுமுணுப்புக் கட்டணம்

புதிய சிறுகதை. மே 10 2026 ராஜாராமன் அந்தப் பாடலை மெதுவாக முணுமுணுத்துக் கொண்டார். சில நாட்களாகவே பழைய சினிமா பாடல் ஒன்றின் வரிகள் மனதில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. குளிக்கும் போதும், நடைப்பயிற்சியின் போதும், சலூனில் காத்திருக்கும் போதும், பால்கனியிலிருந்தபடி காகங்களை வேடிக்கை பார்க்கும் போதும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டார். அப்படி முணுமுணுக்கும் போது அது யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். தண்ணீரின் மேற்பரப்பிற்கு வரும் மீன்குஞ்சினைப் போல எதற்காக அந்தப் பாடல் …

முணுமுணுப்புக் கட்டணம் Read More »

வீட்டில் ஒருத்தி.

புதிய சிறுகதை. ஏப்ரல் 30 2026 “நாளைக்கு வான்மதியை நிச்சயம் பண்ண வர்றாங்க. நீங்க வந்து இருந்து நடத்தித் தரணும்மா“ என்று சொன்னாள் வடிவு வெள்ளித் தட்டிலிருந்த தோசையைப் பிய்த்து எள்ளுப்பொடி தொட்டுச்சாப்பிட்டபடியே டாக்டர் அனுசுயா கேட்டாள். “மாப்பிள்ளை எந்த ஊர்“ ஐம்பத்தைந்து வயதைக் கடந்த அனுசுயா செம்மஞ்சள் வண்ணப் புடவை கட்டியிருந்தாள். காதில் வைரக்கம்மல். பெரிய பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி. இடது கையில் தங்க வளையல்கள். “திருச்சி.. அவ கூட இந்தூர்ல வேலை பாக்குறவர்.. …

வீட்டில் ஒருத்தி. Read More »

நடைத்துணை

புதிய சிறுகதை. ஏப்ரல் 19. 2026 அந்த மின்னஞ்சல் ஸ்பாமில் சென்று சேர்ந்திருந்தது. தற்செயலாகவே நான் அதைப் படிக்க நேர்ந்தது •• அன்பிற்குரிய பேராசிரியர் விமல் கற்கடம் அவர்களுக்கு, மேதகு மன்னர் ஜோசப் பெர்னார்ட் இமானுவேல் XXV ன் விசேச அழைப்பின் பெயரில் இந்த மின்னஞ்சலை எழுதுகிறோம். பெருமைக்குரிய எங்கள் மன்னர் மாசுபடாத இயற்கையில் நிதானமாக காலைநடை மேற்கொள்வதை விரும்புகிறவர். இந்த நடைப்பயணத்தில் தினமும் ஒரு புதியவருடன் நடக்க விரும்புகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தினம் ஒருவர் …

நடைத்துணை Read More »