சிறுகதை

மறையாத சிரிப்பு

புதிய சிறுகதை. மே 30 2026 காலையிலிருந்தே கையில் அந்த லட்டை வைத்துக் கொண்டு தெருத்தெருவாகச் சுற்றிக் கொண்டிருந்தான் முருகேசன். பனிரெண்டு வயது முடியப்போகிறது என்றாலும் எட்டு வயதுப் பையன் போல மெலிந்த தோற்றம் கொண்டிருந்தான். ஒட்ட வெட்டிய கிராப். அரைக்கால் டவுசர். கட்டம் போட்ட சட்டை. காலில் ரப்பர் செருப்பு. அவன் படித்த பள்ளிக்கூடத்தில் திங்கள் மற்றும் வெள்ளி மட்டுமே யூனிபார்ம் அணிந்துவர வேண்டும். மற்ற நாட்கள் எந்த உடையும் அணிந்து கொள்ளலாம். அன்றைக்குச் சனிக்கிழமை …

மறையாத சிரிப்பு Read More »

இன்னொரு பயணம்

புதிய சிறுகதை மே 18 2026 “என்னோட நீம் டூத்பேஸ்டை எடுத்து வச்சிக்கிட்டேன். உன் பேஸ்டை வச்சிட்டயா“ என மனைவியிடம் கேட்டார் தீர்த்தகிரி. “நான் ஹெர்பல் பொடில பல் தேய்க்கிறேன். அதை மாற்ற முடியாது. ஒரு டப்பா எடுத்து வச்சிருக்கேன். போதும்லே“ எனக்கேட்டாள் பவானி. அவர்கள் மும்பையில் உள்ள மகனின் வீட்டிற்குச் செல்வதற்கான பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ராஜேஷ் பிளைட் டிக்கெட் அனுப்பி வைத்தவுடன் பயணம் போக வேண்டியது தான். அறுபத்தியெட்டு வயதான தீர்த்தகிரி முந்திய நாளே …

இன்னொரு பயணம் Read More »

முணுமுணுப்புக் கட்டணம்

புதிய சிறுகதை. மே 10 2026 ராஜாராமன் அந்தப் பாடலை மெதுவாக முணுமுணுத்துக் கொண்டார். சில நாட்களாகவே பழைய சினிமா பாடல் ஒன்றின் வரிகள் மனதில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. குளிக்கும் போதும், நடைப்பயிற்சியின் போதும், சலூனில் காத்திருக்கும் போதும், பால்கனியிலிருந்தபடி காகங்களை வேடிக்கை பார்க்கும் போதும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டார். அப்படி முணுமுணுக்கும் போது அது யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். தண்ணீரின் மேற்பரப்பிற்கு வரும் மீன்குஞ்சினைப் போல எதற்காக அந்தப் பாடல் …

முணுமுணுப்புக் கட்டணம் Read More »

வீட்டில் ஒருத்தி.

புதிய சிறுகதை. ஏப்ரல் 30 2026 “நாளைக்கு வான்மதியை நிச்சயம் பண்ண வர்றாங்க. நீங்க வந்து இருந்து நடத்தித் தரணும்மா“ என்று சொன்னாள் வடிவு வெள்ளித் தட்டிலிருந்த தோசையைப் பிய்த்து எள்ளுப்பொடி தொட்டுச்சாப்பிட்டபடியே டாக்டர் அனுசுயா கேட்டாள். “மாப்பிள்ளை எந்த ஊர்“ ஐம்பத்தைந்து வயதைக் கடந்த அனுசுயா செம்மஞ்சள் வண்ணப் புடவை கட்டியிருந்தாள். காதில் வைரக்கம்மல். பெரிய பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி. இடது கையில் தங்க வளையல்கள். “திருச்சி.. அவ கூட இந்தூர்ல வேலை பாக்குறவர்.. …

வீட்டில் ஒருத்தி. Read More »

நடைத்துணை

புதிய சிறுகதை. ஏப்ரல் 19. 2026 அந்த மின்னஞ்சல் ஸ்பாமில் சென்று சேர்ந்திருந்தது. தற்செயலாகவே நான் அதைப் படிக்க நேர்ந்தது •• அன்பிற்குரிய பேராசிரியர் விமல் கற்கடம் அவர்களுக்கு, மேதகு மன்னர் ஜோசப் பெர்னார்ட் இமானுவேல் XXV ன் விசேச அழைப்பின் பெயரில் இந்த மின்னஞ்சலை எழுதுகிறோம். பெருமைக்குரிய எங்கள் மன்னர் மாசுபடாத இயற்கையில் நிதானமாக காலைநடை மேற்கொள்வதை விரும்புகிறவர். இந்த நடைப்பயணத்தில் தினமும் ஒரு புதியவருடன் நடக்க விரும்புகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தினம் ஒருவர் …

நடைத்துணை Read More »

திரைக்கு முன்னால்.

புதிய சிறுகதை. ஏப்ரல் 13. 2026 அந்தப் பெண்கள் இருவரும் கையில் கோன்ஐஸ்கிரீம் வைத்திருந்தார்கள்.. ஆர்கேஎஸ் தியேட்டரில் கோன் ஐஸ்கிரீம் மிகுந்த சுவையாக இருக்கும். வழக்கமாகச் சபாபதியும் அவனது மனைவி தனசங்கரியும் படம் ஆரம்பிக்கும் முன்பாகவே கோன் ஐஸ் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தான் தியேட்டருக்குள் செல்வார்கள். அன்றைக்கு அவர்கள் டைட்டானிக் படத்தினைக் காணுவதற்காக வந்திருந்தார்கள். கோன்ஐஸை நோக்கித் தனது நாக்கை நீட்டிய ஆரஞ்சு வண்ண சுடிதார் அணிந்த பெண்ணிற்கு முப்பத்தைந்து வயதிருக்கக் கூடும். அருகில் நின்றவளின் வயது …

திரைக்கு முன்னால். Read More »

பழகிக் கொள்.

புதிய சிறுகதை. ஏப்ரல் 2. 2026 சுதர்சனம் வீட்டின் முன்கேட்டைத் திறக்க முடியாதபடி அந்த பஸ் நின்றிருந்தது. அது ஏதோ போராட்டத்திற்காக வெளியூர் ஆட்களை ஏற்றி வந்த தனியார் பஸ். அதன் முகப்பில் பெரிய துணிபேனர் வைத்திருந்தார்கள். யார் அவர்கள், என்ன போராட்டம் என எதுவும் தெரியவில்லை. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் சுதர்சனத்திற்கு இல்லை. காரணம் அவர்கள் தெருவை ஒட்டிய திடலை சில ஆண்டுகளாகப் போராட்ட மைதானமாக மாற்றி விட்டிருந்தார்கள். அதற்குக் கேசிஆர் திடல் எனப் …

பழகிக் கொள். Read More »

தங்கள் பொறுப்பு

புதிய சிறுகதை. மார்ச் 20, 2026 சக்கையன் தலையில் கட்டியிருந்த சிவப்புத் துண்டினை அவிழ்த்து கையில் ஏந்தியபடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் “ வானரூ இறந்துபோயிட்டாரு.. தானம் பண்ணுங்க“ என்று கேட்டுக் கொண்டிருந்தான். வானரூ யார் என எவரும் கேட்டுக் கொள்ளவில்லை ஒரு சிலர் சில்லறைக் காசுகளைத் துண்டில் போட்டார்கள். ஒருவர் பேண்ட் பாக்கெட்டிலிருந்து மணிபர்ஸை வெளியே எடுத்துத் திறந்து பார்த்துவிட்டு இல்லை என்று கையை விரித்தார். சென்னையிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்னும் வரவில்லை. …

தங்கள் பொறுப்பு Read More »

நிழலானை

புதிய சிறுகதை. மார்ச் 13. 2026 அவர்கள் ராய பூபதிக்காகக் காத்திருந்தார்கள். ஐமீன் பங்களா என்று அழைக்கபடும் ராயவிலாசம் மிகப்பெரிய வீடு. ஒரு காலத்தில் அந்த வீட்டில் ஐந்து குடும்பங்கள் ஒன்றாகக் குடியிருந்தார்கள். ராய பூபதியின் அண்ணன் புகழ்மாற பூபதி தற்கொலை செய்து கொண்டு இறந்தபின்பு ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிரிந்து போய்விட்டார்கள். குடும்பச் சொத்திற்காக நடந்த வழக்கில் பூபதிக்கு இந்த மாளிகையும் கொஞ்சம் நிலமும் மட்டுமே கிடைத்தது. குடும்பத்திற்குச் சொந்தமான கோவிலை நிர்வாகம் செய்யும் பொறுப்பும் …

நிழலானை Read More »

நீரறியா அன்னங்கள்

புதிய சிறுகதை. பிப்ரவரி 24, 2026 டர்க்கி டவலால் அன்னம் செய்வது அவளது வேலை. ஜேசி டவர்ஸ் ஹோட்டலில் அறுபத்து நான்கு அறைகளிருந்தன. அதில் ஆடம்பர அறைகள் எட்டு. அந்த அறைகளுக்கு மட்டும் வெண்ணிற டர்க்கி டவலால் அன்னம் செய்து வைக்க வேண்டியது ராஜதிலகத்தின் வேலை. ஜோடி அன்னங்கள் செய்து இதய வடிவில் படுக்கையில் வைக்க வேண்டும். அறையில் தங்குகிறவர்களில் குழந்தைகள் இருப்பார்கள் எனில் அவர்களுக்கெனக் குட்டியானை அல்லது முயலை டவலில் செய்து வைப்பது வழக்கம். டர்க்கி …

நீரறியா அன்னங்கள் Read More »