இசை

கரையும் உருவங்கள்

 ‘The Last Music Store’. என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். மேகா ராமசாமி இயக்கியுள்ளார் மும்பையின் புகழ்பெற்ற மியூசிக் ஸ்டோரான ரிதம் ஹவுஸ் பற்றிய இந்த ஆவணப்படம் அதன் கடந்தகாலத்தையும் இசைக்கலைஞர்கள் மற்றும் இசை ரசிகர்களையும் பற்றியது. ரிதம் ஹவுஸ் பற்றிய ஆவணப்படத்தைக் காணும் போது என் மனதில் லேண்ட்மார்க் புத்தகக்கடை மூடப்பட்ட கடைசிநாளில் அங்கே சென்று புத்தகங்கள் வாங்கியது தோன்றி மறைந்தது ரிதம் என்ற பெயர் கடைக்கு வைக்கப்பட்டதற்கான காரணம், அந்தக் கடைக்கு வருகை தந்த புகழ்பெற்ற …

கரையும் உருவங்கள் Read More »

சந்தோஷத்தின் தூதுவர்கள்

பல ஆண்டுகளாக மேற்கத்திய இசை மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை விரும்பிக் கேட்டு வருகிறேன். Beethoven, Mozart, Bach, Tchaikovsky, Joseph Haydn, Antonio Vivaldi. Georges Bizet, George Frideric Handel. Chopin, Franz Schubert ,Johannes Brahms, Niccolò Paganini இவர்களைத் தொடர்ந்து கேட்டிருக்கிறேன். ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் இசைவிழாக்களில் முக்கியக் கச்சேரிகளைக் கேட்பதும் வழக்கம். என்னை விடவும் எனது மனைவிக்கு இசையில் ஆர்வம் அதிகம். சமீபத்தில் நாங்கள் சஞ்சய் சுப்ரமணியன் கச்சேரிக்குப் போயிருந்தோம். …

சந்தோஷத்தின் தூதுவர்கள் Read More »

இசையின் சித்திரங்கள்

அழிசி வெளியீடாக வந்துள்ள ரா. கிரிதரன் எழுதியுள்ள காற்றோவியம் என்ற கட்டுரைத் தொகுப்பினைப் படித்தேன். மேற்கத்திய செவ்வியல் இசை, அதன் வகைகள் , இசைமரபு, இசையின் வரலாறு. இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் கர்நாடக இசைக்கலைஞர்களின் ஆளுமை என விரியும் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு.  தமிழில் இது போன்ற கட்டுரைகள் இதுவரை வந்ததில்லை. மேற்கத்திய இசையினை அறிந்து கொள்வதற்கும் ரசிப்பதற்கும் ஒரு கையேடு போலவே இக்கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. புனைவெழுத்திற்கு நிகரான சுவாரஸ்யத்துடன் இக் கட்டுரைகளை கிரிதரன் எழுதியிருக்கிறார். …

இசையின் சித்திரங்கள் Read More »

லாட்சோ டிரோம்

பல்வேறு நாடுகளிலுள்ள நாடோடி இசைக்கலைஞர்களைப் பற்றிய சிறந்த ஆவணப்படம் லாட்சோ டிரோம் டோனி கேட்லிஃப் இயக்கிய இந்தப் பிரெஞ்சு ஆவணப்படம் 1993 ஆம் ஆண்டு வெளியானது. ரோமானி என்று அழைக்கப்படும் ஜிப்சிகள் உலகெங்கும் வாழுகிறார்கள். இவர்களின் பூர்வீகம் இந்தியா எனவும், 11ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் என்றும் கருதுகிறார்கள் இந்தியாவின் தார் பாலைவனத்தில் தொடங்கி எகிப்து, துருக்கி, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் பிரான்ஸ் வழியாக நாடோடி இசைக்குழுவினர்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை விவரிக்கிறது இந்த …

லாட்சோ டிரோம் Read More »

மணிகௌல்

1983ம் ஆண்டு மணிகௌல் இயக்கிய மிகச்சிறந்த ஆவணப்படம் Dhrupad. ஹிந்துஸ்தானி இசையின் மேன்மையைச் சொல்லும் இந்தப்படம் மிகச்சிறப்பாக உருவாக்கபட்டுள்ளது. குறிப்பாக இதன் இசை மெய்மறக்க செய்கிறது துருபத் என்பது ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையின் மிகப் பழமையான வடிவமாகும், தலைமுறை தலைமுறைகளாகப் பாடிக்கொண்டிருக்கும் ஹிந்துஸ்தானி பாடகர்கள் இந்த மரபை அப்படியே தொடருகிறார்கள். தியானத்தின் போது நாம் அடையும் அமைதியை, சந்தோஷத்தை இந்தப்படமும் நமக்குத் தருகிறது

காற்றின் நறுமணம்.

காருகுறிச்சியார் நூற்றாண்டுவிழாவிற்காக ஆனந்தவிகடனில் வெளியான சிறப்புக் கட்டுரை •• திருமண விழாக்களுக்கு ஊர் ஊராகச் சென்று மைக்செட் போடும் வேலாயுதம் எப்போதும் போடும் முதல் ரிக்கார்ட் காருகுறிச்சியின் நாதஸ்வரம் தான். அந்த மங்கள இசையை ஒலிக்க விட்டவுடன் தான் கல்யாணவீடு ஒளிரத்துவங்கும். உண்மையில் சந்தோஷத்தின் அடையாளமாகவே நாதஸ்வரம் ஒலிக்கிறது. அந்த வாத்தியம் கரிசல் மனிதனின் அன்பைப் போல வீரியமானது. உக்கிரமானது. நாட்டுப்பசுவின் பாலுக்கெனத் தனிருசியிருப்பது போலவே காருகுறிச்சியாரின் நாதஸ்வரத்திற்கும் தனிருசி இருக்கிறது. அந்த வேலாயுதம் மைக்செட் போடும் …

காற்றின் நறுமணம். Read More »

பன்னாலால் கோஷ்

பண்டிட் பன்னாலால் கோஷின் புல்லாங்குழலிசையை விரும்பிக் கேட்பேன். நிகரற்ற இசைக்கலைஞர். கிருஷ்ணகானம் என்பார்களே அது இவரது குழலில் பிறக்கிறது. எச்.எம்.வி வெளியிட்ட இவரது இசைநாடாக்களை வாங்கித் தொடர்ந்து கேட்டிருக்கிறேன் இணையத்தில் இவரது இசை நிறைய கிடைக்கிறது. இரவில் தனிமையில் கேட்கும் போது நாம் கரைந்து போய்விடுகிறோம். ரகசிய நதியொன்று புல்லாங்குழலில் இருந்து கசிந்து பெருகுகிறது. நிலவொளியைப் போல இசை பிரகாசிக்கிறது. ஆனந்தம் என்பதன் முழுமையான அர்த்தம் இது போன்ற இசையில் தானிருக்கிறது Pannalal Ghosh Hamsadhwani, Khamaj …

பன்னாலால் கோஷ் Read More »

கௌரிசங்கரின் கனவு

நாதஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம் நூற்றாண்டு விழா இந்த வருடம் ஏப்ரலில் துவங்குகிறது. இதற்காகச் சென்றவாரம் கோவில்பட்டி ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்விற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். சொந்தவேலையின் காரணமாக அதில் கலந்து கொள்ள இயலவில்லை ஆனால் 25ஆண்டுகளுக்கு முன்பாகக் கோவில்பட்டியில் காருகுறிச்சி அருணாசலம் அவர்களுக்கு ஒரு விழா நடைபெற்றது. அது எழுத்தாளர் கௌரிசங்கர் இயக்கிய காருகுறிச்சியார் பற்றிய ஆவணப்படத்தின் திரையிடல். அதில் நான் கலந்து கொண்டு …

கௌரிசங்கரின் கனவு Read More »

காலி நாற்காலி

பண்டிட் ரவிசங்கரின் இசை குறித்த தேடுதலின் போது இணையத்தில் தற்செயலாக A Chairy Tale என்ற குறும்படத்தைப் பார்த்தேன். நார்மன் மெக்லாரன் என்ற கனேடிய அனிமேஷன் இயக்குநர் உருவாக்கிய படம். இதற்கு ரவி சங்கர் இசையமைத்திருக்கிறார்.. அற்புதமான இசை. சதுர்லாலுடன் இணைந்து இந்த இசைக்கோர்வையை உருவாக்கியிருக்கிறார் ரவிசங்கர். பரவசமூட்டுகிறது இசை ஒன்பது நிமிஷங்கள் ஓடும் இந்தக் குறும்படம் 1957ல் உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஒரு நாற்காலியில் அமருவதற்காக ஒரு இளைஞன் முயல்கிறான். …

காலி நாற்காலி Read More »

வசந்தத்தில் ஓர் நாள்

திடீரென சில நாட்கள் காலையில் மனதில் ஒரு பாட்டு ஒடத்துவங்கிவிடுகிறது. அதை உடனடியாகக் கேட்க வேண்டும் என்ற உத்வேகம் உருவாகிறது. அப்படி இன்று காலை, வசந்தத்தில் ஓர் நாள் என்ற பாடல் மனதில் ஒடி மறைந்தது. அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கினேன். பாட்டு முடிந்து போகக்கூடாது என்பது போன்ற மனநிலை உருவானது. திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். அது எனது வழக்கம். சில நாட்கள் ஒரே பாடலை நாற்பது ஐம்பது முறை கேட்டிருக்கிறேன். பாடலின் வரிகள் மறைந்து. …

வசந்தத்தில் ஓர் நாள் Read More »