இயற்கை

நீரும் நிலமும்

Lakshmanrekha என்றொரு ஆவணப்படத்தைப் பார்த்தேன். நந்தன் சக்சேனா மற்றும் கவிதா பஹ்லி இயக்கியுள்ள இப்படம் ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள லபோடியா கிராமத்தின் நீர்வளத்தை லட்சுமன் சிங் எவ்வாறு மேம்படுத்தினார் என்பதை ஆவணப்படுத்தியுள்ளது. இந்த மாற்றம் லபோடியாவினைச் சுற்றியிருந்த 58 கிராமங்களின் விதியை மாற்றியது படத்தின் துவக்கக் காட்சியில் டெல்லியின் குடியிருப்பு ஒன்றில் ஆழ்துளைக் கிணறு போடுவதற்காக இயந்திரம் வருகிறது. போர் போடும் பணி துவங்குகிறது ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை.. நிலத்தடி நீர் முற்றிலும் வறண்டு போய்விட்டது. எங்கே போனது …

நீரும் நிலமும் Read More »

துறவின் பாதை

ரெட் பைன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் அமெரிக்க எழுத்தாளரான பில் போர்ட்டர் பௌத்தம் ஞானம் மற்றும் சீன இலக்கிய நூல்களை தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறார். குறிப்பாகத் தாவோயிசம் மற்றும் பௌத்த சூத்திரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டதில் இவரே முன்னோடி.. 1989 அவர் சீனாவில் விரிவாகப் பயணம் செய்தார். அப்போது சுங்கான் மலைகள் வழியாகப் பௌத்த துறவிகளைத் தேடி அலைந்து பெற்ற அனுபவத்தை Road to Heaven என்ற நூலாக எழுதியிருக்கிறார். இந்த நூல் …

துறவின் பாதை Read More »

ஆக்டோபஸின் தோழன்

My Octopus Teacher என்ற ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். இந்தப் படம் கிரக் ஃபாஸ்டர் என்று ஆழ்கடல் ஆய்வாளர் தனது கடலடி அனுபவத்தில் சந்தித்த ஒரு ஆக்டோபஸோடு எப்படி நெருங்கிப் பழகினார் என்பதை மிகச்சிறப்பாக விவரிக்கிறது. ஃபாஸ்டரோடு நாமும் கடலின் அடியில் பயணிக்கத் துவங்குகிறோம். ஃபாஸ்டரின் குரலில் தான் படம் துவங்குகிறது. அவரது கடந்தகால அனுபவம் முற்றிலும் மாறுபட்டது. ஒரு காலத்தில் ஆப்ரிக்கா வேட்டை பழங்குடிகளுடன் பழகி அவர்கள் எவ்வாறு விலங்குகளின் சுவடுகளின் வழியே …

ஆக்டோபஸின் தோழன் Read More »

இயற்கையின் வண்ணங்கள்

Life in Colour என்ற டேவிட் அட்டன்பரோவின் புதிய ஆவணத்தொடரைப் பார்த்தேன். இயற்கையின் வண்ணங்களை ஆராயும் இந்தத் தொடர் வியப்பூட்டும் காட்சிகளைக் கொண்டிருக்கிறது. இயற்கை ஒவ்வொரு உயிரினத்திற்குக் கொடையாக வழங்கியுள்ள வண்ணங்களையும் அதன் தனித்துவத்தையும் மிக அழகாக விவரிக்கிறார் அட்டன்பரோ. அவர் அளவிற்கு உலகெங்கும் சுற்றி இயற்கை வளங்களை, உயிரினங்களை, கடலை, கானகங்களைக் கண்டவரில்லை. புதிய தொழில்நுட்பத்துடன் அவர் இயற்கையின் வண்ணங்களைப் படமாக்கியுள்ள விதம் அபாரம். குறிப்பாக ஒரு நண்டின் பார்வையில் உலகம் எப்படித் தெரிகிறது என்பதைக் …

இயற்கையின் வண்ணங்கள் Read More »

நோய்மையிலிருந்து விடுதலை

துயில் – ஒரு வாசிப்பனுபவம் பாஸ்கர் தேவதாஸ் நோய்மைப் பற்றியும் அதன் ரகசியங்களையும் துயில் நாவல் மூலம் எஸ்ரா அவர்கள் மிக உன்னத படைப்பாக இந்த உலகிற்கு கொடுத்திருக்கிறார். ஒரு எளிய இலக்கியவாசகனாக இந்த நாவல் எனக்குள் உருவாக்கிய பாதிப்புகளை பதிந்திருக்கிறேன் மூன்று வழியாக தெக்கோடு என்ற கிராமத்து பயணமே இந்த நாவல், இது ஒரு TRIOLOGY SUBJECT போல் உள்ளது, KOKHER என்ற கிராமத்தை மையமாக வைத்து Abbas Kiarostami. மூன்று படங்களை  இயக்கியிருப்பார். அது …

நோய்மையிலிருந்து விடுதலை Read More »

இயற்கையின் குரல்

David Attenborough: A Life On Our Planet என்ற புதிய ஆவணப்படம் ஒன்றைப் பார்த்தேன். வாழ்வில் சிலரைத் தான் அதிர்ஷ்டசாலிகள் என்று நான் நினைப்பேன். அவர்களில் ஒருவர் டேவிட் அட்டன்பரோ. உலகில் அவர் கால்படாத இடமேயில்லை. காடுகள் பனிமலைகள் குகைகள் பாலைவனம் என்று இந்தப் பூமியில் அவர் சுற்றித்திரியாத இடமேயில்லை. அவர் தயாரித்த புவிவாழ்க்கை குறித்த ஆவணப்படங்கள் மிகச்சிறப்பானவை. ஒருவர் தான் வாழ்நாள் முழுவதும் இப்படி அரிய உயிரினங்களைத் தேடி, இயற்கையின் வனப்புகளைத் தேடி பயணம் …

இயற்கையின் குரல் Read More »

மண் விழித்துக்கொள்கிறது

The Biggest Little Farm என்ற ஆவணப்படத்தைப் பார்த்தேன். கிளாசிக் நாவல்களை வாசிக்கையில் ஏற்படும் மன எழுச்சிக்கு நிகரான உணர்வினை அடைந்தேன். ஒரு டாகுமெண்டரி திரைப்படம் என்பதைத் தாண்டி இயற்கையோடு இணைந்து வாழுவதற்கான ஆதார பாடம் என்றே இதனைக் கூற வேண்டும். கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் வசித்து வந்த ஜான் மற்றும் மோலி செஸ்டர் நகரவாழ்க்கையிலிருந்து விலகி புதிய  பாதையில் பயணிக்க முயன்றார்கள். இதற்கு முக்கியமான காரணம் அவர்களின் வளர்ப்பு நாய் டோட். ஜான் ஒரு ஒளிப்பதிவாளர். …

மண் விழித்துக்கொள்கிறது Read More »

கர்நாடகப் பயணம்

கடந்த பதினைந்து நாட்களாக கர்நாடகாவின் கூர்க்கில் இருந்தேன். விட்டு விட்டுப் பெய்யும் மழை. இதமான காற்று.    காபித்தோட்டத்தின்  நடுவே அமைந்த விடுதி. மிகவும் அமைதியானது.  பரபரப்பான நகரவாழ்விலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டேன். குஷால் நகர் எனும் பகுதியில் 4 கி.மீ தாண்டி ‘பைலகொப்பா’ எனும் இடத்தில் அமைந்திருக்கும்  பௌத்த தங்கக் கோயிலை காணச் சென்றிருந்தேன்.  சீன ஆக்ரமிப்பு காரணமாக திபெத்தை விட்டு வெளியேறி அகதிகளாக வந்தவர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அதில் இரண்டாவது பெரிய திபெத்திய …

கர்நாடகப் பயணம் Read More »

திரை எழுத்து -1

அகிரா குரசேவாவின் திரைப்படங்கள் இயக்குனர் பாலு மகேந்திரா மிகச்சிறந்த திரைப்பட நூல்களைத் தனது நூலகத்தில் வைத்திருந்தார். ஒருமுறை அவரிடம் எந்தப் புத்தகத்தை மிகவும் அதிகமான தடவை வாசித்திருக்கிறார் என்று கேட்டபோது அவர் Hitchcock -François Truffaut என்று சொல்லி அதன் பிரதியைக் கையில் கொடுத்தார். அது ஹிட்ச்காக்கோடு பிரெஞ்சு இயக்குனர் பிரான்சுவா த்ருபோ நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. அதை வாசித்திருக்கிறேன் என்று பாலுமகேந்திராவிடம் சொன்னேன். அவர் உற்சாகத்துடன் அதே நூலின் இரண்டு மூன்று பிரதிகள் தன்னிடமிருக்கின்றன. வீட்டில், …

திரை எழுத்து -1 Read More »

விஷமாகும் காய்கனிகள்

காரைக்காலில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். வழியில் வாரச் சந்தையொன்றைக் கண்டேன். காரை விட்டு இறங்கி சந்தைக்குச் சென்றேன். காலையில் பறித்து வந்த பசுமையான காய்கறிகள். பழவகைகள். மிகப்பெரிய சந்தையது. மக்கள் பைநிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு போனார்கள். புதுச்சேரி மாநிலத்தில் வாரச்சந்தைகள் முறையாக நடைபெறுகின்றன. விவசாயிகள் நேரடியாக வணிகம் செய்கிறார்கள். தமிழகத்தில் திட்டமிட்டு உழவர்சந்தை அழிக்கபட்டது. கலைஞர் ஆட்சி கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தை. அதன் பயன் நேரடியாக மக்களுக்குக் கிடைத்தது. …

விஷமாகும் காய்கனிகள் Read More »