admin

மனசாட்சியின் உதயம்

அம்ரும் திரைப்படத்தில் ஹில்லே என்ற பெண் ஹிட்லர் இறந்த சேதியை ரேடியோவில் கேள்விப்பட்டு மிகுந்த துயரம் அடைகிறாள். கர்ப்பிணியான அவள் ஆழ்ந்த மன அழுத்தத்தில் மூழ்கி எதையும் சாப்பிட மறுக்கிறாள். தங்களைக் காக்க வந்த கடவுளான ஹிட்லர் எப்படி இறந்து போவார் எனப்புலம்புகிறாள். அவர் இறந்தாலும் அவர் முன்னெடுத்த போரைத் தொடர வேண்டும் என்கிறாள். ஆனால் அதே வீட்டிலுள்ள அத்தை ஈனா ஹிட்லரின் புகைப்படத்தை அடுப்பிலிட்டு எரித்து இனி நாம் விடுதலை அடைந்தோம் என்கிறாள். இந்த இருவருக்கும் …

மனசாட்சியின் உதயம் Read More »

பயணியின் நிழல்

மார்க்கோ போலோவின் பயணநூலை விடவும் அது எழுதப்பட்டதன் பின்னுள்ள கதை அல்லது உண்மை வியப்பளிக்கிறது. கால்வினோ அதிலிருந்தே தனது புலப்படாத நகரங்கள் என்ற நாவலை எழுதியிருக்கிறார். அதில் வரும் மன்னர் குப்ளாய்கான் கற்பனையான நகரங்களை விவரிக்கத் துவங்குகிறார். அதுவும் போலோவின் உண்மை அனுபவங்களும் ஒன்றாக இணைகின்றன. இந்த இணைவு போன்றதே போலோவின் பயண நூல் எழுதப்பட்ட வரலாறும் போலோவின் நிழலாக அந்த நூலின் பின்னால் இருப்பவர் இத்தாலிய எழுத்தாளரான ரஸ்டிகெல்லோ டா பிசா. வீரசாகசக் கதைகளை எழுதும் …

பயணியின் நிழல் Read More »

கடல் காணாத சிறுவர்கள்

1935ல் வடக்கு ஸ்பெயினின் புர்கோஸ் மாகாணத்திலுள்ள சிறிய பள்ளிக்கூடம். அதற்குப் புதிய ஆசிரியராக அந்தோனி பெனாய்கெஸ் வருகை தருகிறார். தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் உஙகளில் எத்தனை பேர் கடலைப் பார்த்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். ஒருவரும் கடல் பார்த்ததில்லை. ஆனால் கடலைப் பற்றி நிறையக் கேள்விபட்டிருக்கிறார்கள். கடல் எப்படியிருக்கும் அவர்களாகக் கற்பனை செய்திருக்கிறார்கள். அவற்றை ஆசிரியர் எழுதித் தரச் சொல்கிறார். ஒவ்வொரு மாணவனும் தனது கற்பனையில் கடலைப் பற்றி எழுதித் தருகிறான். அவற்றைத் தொகுத்து சிறிய நூலாக …

கடல் காணாத சிறுவர்கள் Read More »

குபாஸின் வாக்குமூலம்

பிரேசிலிய எழுத்தாளர் மச்சடோ டி ஆசிஸ் எழுதிய  Epitaph of a Small Winner  நாவல் மாறுபட்ட கதை சொல்லும் முறையைக் கொண்டுள்ளது. 1881-ல் வெளியான இந்நாவல் The Posthumous Memoirs of Brás Cubas என்ற தலைப்பிலும் வெளியிடப்பட்டுள்ளது. பிராஸ் குபாஸ் என்பவரின் மரணத்திற்குப் பிந்தைய நினைவுகளைக் கூறும் இந்த நாவல் வாசகர்களுடன் புதிர் விளையாட்டினை நிகழ்த்துகிறது.  இதில் வரும் குபாஸ் தான் “இறந்து போன எழுத்தாளரில்லை. இறந்த பின்பு எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளன்“ என்று …

குபாஸின் வாக்குமூலம் Read More »

தேசம் இல்லாத இளவரசி.

விக்டோரியா மகாராணியின் பேத்தியான இளவரசி மேரி லூயிஸ் தனது வாழ்க்கை வரலாற்றை My Memories of Six Reigns என எழுதியிருக்கிறார். தனது எண்பது ஆண்டுகளுக்கும் மேலான வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் விதமாக இதனை எழுதியிருக்கிறார். தனது பாட்டியின் ஆலோசனைப் படி இந்நூலை எழுதியதாக முன்னுரையில் குறிப்பிடுகிறார். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் நினைவுகள் என்பதால் அந்தக் கால அரண்மனை வாழ்க்கையும் அன்றாட நிகழ்வுகளும் வெகு துல்லியமாக, நுணுக்கமாக விவரிக்கபட்டுள்ளன. வரலாற்றின் சில முக்கிய முடிவுகள். நிகழ்வுகள் …

தேசம் இல்லாத இளவரசி. Read More »

தெலுங்கு மொழியாக்கம்

எனது முணுமுணுப்புக் கட்டணம் சிறுகதை தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் அவினேனி பாஸ்கர். ஆந்திர ஜோதி இதழில் வெளியாகியுள்ளது

பஞ்சாபியில்

சிறந்த இந்தியச் சிறுகதைகளைத் தேர்வு செய்து பஞசாபியில் தொகைநூலாக வெளியிடுகிறார்கள். இந்தத் தொகுப்பில் எனது கேள்வியின் நிழல் சிறுகதை இடம் பெற்றுள்ளது. இதனை ராதிகா மொழியாக்கம் செய்துள்ளார்.

மறையாத சிரிப்பு

புதிய சிறுகதை. மே 30 2026 காலையிலிருந்தே கையில் அந்த லட்டை வைத்துக் கொண்டு தெருத்தெருவாகச் சுற்றிக் கொண்டிருந்தான் முருகேசன். பனிரெண்டு வயது முடியப்போகிறது என்றாலும் எட்டு வயதுப் பையன் போல மெலிந்த தோற்றம் கொண்டிருந்தான். ஒட்ட வெட்டிய கிராப். அரைக்கால் டவுசர். கட்டம் போட்ட சட்டை. காலில் ரப்பர் செருப்பு. அவன் படித்த பள்ளிக்கூடத்தில் திங்கள் மற்றும் வெள்ளி மட்டுமே யூனிபார்ம் அணிந்துவர வேண்டும். மற்ற நாட்கள் எந்த உடையும் அணிந்து கொள்ளலாம். அன்றைக்குச் சனிக்கிழமை …

மறையாத சிரிப்பு Read More »

மகிழ்ச்சியின் திறவுகோல்.

மசாகி கோபயாஷி இயக்கிய பியூட்டிஃபுல் டேஸ் திரைப்படத்தில் மலர்களை விற்பனை செய்யும் வயதான பெண்ணிற்கும் ஓய்வு பெற்ற தொழிலதிபரான ஷிகாகிக்கும் இடையில் உருவாகும் நட்பு மிக அழகாக விவரிக்கபட்டுள்ளது. ஓசுவின் படங்களை நினைவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. படத்தின் மையக்கதை இவர்களைச் சுற்றி நடக்கிறது. அவர்கள் மகிழ்ச்சியை உருவாக்கும் திறவுகோல்கள். முதியவர்களான இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்ளும் காட்சிகள் மிக அழகாக எழுதப்பட்டுள்ளன. ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதும், மழையில் நனைந்து கொண்டு வரும் முதியவரின் விளையாட்டுதனமான பேச்சு. …

மகிழ்ச்சியின் திறவுகோல். Read More »

வரையப்பட்ட கனிகள்

செசான் வரைந்த ஆப்பிள்களும் ஆரஞ்சு பழங்களும் ஓவியத்தைக் காணும் போது என்ன நடக்கிறது. நாம் காணுவது பழங்களை மட்டுமல்ல. மௌனத்தை. அதுவும் சிவப்பு வண்ண உருவம் கொண்ட மௌனத்தை. உண்ணுவதற்கான பொருள் என்பதிலிருந்து விலகி பழம் அழகான வடிவத்துடன், ஒளிர்தலுடன். அசையாத நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. ஆப்பிள்களுக்குள் சிறியது பெரியது என வேறுபாடு இருந்தாலும் அவை ஒன்றிணைந்துள்ள விதத்தில் சமநிலை காணப்படுகிறது. மனிதன் உருவாக்கிய குவளையும் இயற்கையின் பரிசான பழங்களைப் போலவே சித்தரிக்கபடுகிறது. குவளைக்கும் பழங்களுக்கும் …

வரையப்பட்ட கனிகள் Read More »