admin

தேவராஜின் உலகம்

நிமித்தம் நாவல் – வாசிப்பு அனுபவம்: மரு. நோயல் நடேசன் கிராமங்களில் புறம் கூறுபவனைப் பற்றிச்சொல்லும்போது, “அவன் ஒரு சகுனி” என்பார்கள். அதேபோல், அதிகம் உண்பவனை பீமன் என்றும், ஒழுக்கமான ஆணை ராமனைப்போல் என்றும் சொல்வார்கள். அன்றாட வாழ்வில் படிக்காத மக்களிடம் புழங்கும் சொலவடைகள் இவை. இதிகாசங்கள் எமது சமூகத்தின் கலாச்சாரத்தின் ஒரு கூறாக காலம் காலமாகத் தொடர்வதன் காரணம், அங்குள்ள பாத்திரங்களின் வடிவமைப்புத்தான். இதிகாசங்களை எழுதியவரின் கற்பனையா இல்லை, நடந்த சம்பவத்தின் உண்மையான சாரமா என …

தேவராஜின் உலகம் Read More »

ஓவியக் கண்காட்சியில்

ஓவியர் ரவி பேலட்டின் ஓவியக் கண்காட்சியில் இன்று மாலை கலந்து கொள்கிறேன் ரவி பேலட் மதுரையைச் சேர்ந்தவர். அவரது வண்ணத்தேர்வும் கோடுகளும் தனித்துவமானவை. மினிமலிசம் பாணியில் அவர் வரைந்த ஓவியங்கள் சிறப்பானவை. தற்போது டிஜிடல் ஓவியக் கண்காட்சியை சென்னையில் நடத்தி வருகிறார்.

பறவைகளின் வீடு

கே. பாஸ்கரன். பகலின் சிறகுகள் என்ற எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய சிறுகதையைப் படித்தேன். படிக்கப் படிக்க சினிமா பார்ப்பது போலவே இருந்தது. இதனை அப்படியே சினிமாவாக எடுக்கலாம். கொரோனா காலத்தில் கூண்டு பறவைகள் விற்கும் பெண் அத்தனை பறவைகளையும் தன்னுடைய அபார்ட்மெண்டிற்குக் கொண்டு வந்து பாதுகாக்கிறாள்.  கொரோனா வந்துவிடுமோ என்ற பயத்தில் மக்கள் பறவைகளை வெறுக்கிறார்கள். அதே அடுக்குமாடிக்குடியிருப்பில் பறவைகளின் இன்னிசையைக் கேட்டு நம்பிக்கை கொள்ளும் வாட்ச்மேன் இருப்பதைச் சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார். இந்தச் சிறு கதையில் வரும் அப்பாவைப் போலவே கொரோனா துவங்கும் போது இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நானும் நினைக்கவில்லை. அப்பா ஆட்கள் யாருமில்லாத …

பறவைகளின் வீடு Read More »

கரூர் – உரை

கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் நடைபெறும் சிந்தனைமுற்றம் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் நாள் : செப்டம்பர் 24 ஞாயிறு நேரம் : காலை 10.30

பழைய மனிதர்

புதிய குறுங்கதை பூங்காவில் அந்த நபரைப் பார்த்தேன். ஐம்பது வயதிருக்கும். வெளிர் பச்சை நிற கதர் வேஷ்டி. கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார். அவர் அணிந்திருந்த கண்ணாடியின் இடது பக்கப் பிடி உடைந்திருந்தது. அதை நூலால் கட்டியிருந்தார். வழக்கமாகப் பூங்காவிற்கு வருகிறவராகத் தெரியவில்லை. இன்றைக்குத் தான் முதன்முறையாகப் பார்க்கிறேன். அவரது கையில் ஒரு நியூஸ் பேப்பர் இருந்தது. அந்த செய்தித்தாளை விரித்து ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்தார். பேப்பரின் முதற்பக்கத்தில் சத்தியவாணி முத்து மரணம் எனத் தலைப்பு செய்தி …

பழைய மனிதர் Read More »

டால்ஸ்டாயின் காலடிச்சப்தம்

யூ.ஜி.அருண்பிரசாத் மண்டியிடுங்கள் தந்தையே நாவல் குறித்த விமர்சனம். •• எஸ்ராவின் இந்த நாவலை டால்ஸ்டாயின் பிறந்த செப்டம்பர் மாதத்தில் அவரது நினைவாக வாசிக்கத் துவங்கினேன். இந்த நாவல் மூலம் எஸ்ரா நம்மை ரஷ்யா அழைத்துச் செல்கிறார். பனி படர்ந்த ரஸ்யாவில் நான் பார்த்த காட்சிகள் வியப்பளிக்கின்றன . டால்ஸ்டாயிக்கு சொந்தமான யஸ்னயா போல்னயா பண்ணை, ஒரு ஆள் ஒளிந்து கொள்ளும் அளவுள்ள எல்ம் மரம், டால்ஸ்டாயின் பெரிய குடும்பம், அங்குள்ள பண்ணையில் வேலை செய்பவர்கள், வசந்த காலத்தில் …

டால்ஸ்டாயின் காலடிச்சப்தம் Read More »

ஓவியம் சொல்லும் கதை

லண்டனிலுள்ள நேஷனல் கேலரி பற்றிய ஆவணப்படத்தைப் பார்த்தேன். ஃபிரடெரிக் வைஸ்மேன் இயக்கியுள்ளார் இந்தக் கேலரியில் 2400 அரிய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. காட்சியகத்தில் உள்ள ஓவியங்களின் சிறப்பு மற்றும் அவற்றை எவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள் ஓவியங்களை மறுசீரமைப்பு செய்யும் பணி எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து விரிவாக விளக்குகிறார்கள் லியனார்டோ டா வின்சியைப் பற்றிய சிறப்புக் கண்காட்சிதான் படத்தின் முக்கியப் பகுதியாக உள்ளது. ரெம்ப்ரான்ட்டின் உருவப்படத்தை மீட்டெடுப்பவர்கள் காட்டும் கவனமும் அக்கறையும் வியப்பளிக்கிறது. பார்வையற்றவர்கள் எவ்வாறு ஓவியத்தை ரசிப்பது என்பதற்கான …

ஓவியம் சொல்லும் கதை Read More »

ஆறு சித்திரங்கள்

1920 களின் ரஷ்ய கவிதையுலகம் மற்றும் கவிஞர்களின் வாழ்க்கை குறித்து வாசிக்கும் போது அவர்கள் ஒரு விசித்திரக் கனவுலகில் உலவியதை அறிய முடிகிறது. கவிஞர் விளாடிஸ்லாவ் கோடாசெவிச் அந்தக் காலக் கட்டத்தின் ஆறு முக்கியக் கவிஞர்கள் குறித்த தனது நினைவுக் குறிப்பினை NECROPOLIS என்ற நூலாக எழுதியிருக்கிறார். புஷ்கின் மட்டுமே தனது ஆதர்சம் எனும் கோடேசெவிச் அன்றைய குறியீட்டுக் கவிதை இயக்கத்தின் முக்கியக் கவிஞராக இருந்தார். குறியீட்டு வாதம் என்பது ஒரு தனித்துவமான கருத்தைத் தெரிவிக்க, ஒரு …

ஆறு சித்திரங்கள் Read More »

கர்னலின் நாற்காலி – அறிமுகவுரை

எனது கர்னலின் நாற்காலி குறுங்கதைகள் தொகுப்பு குறித்து விரிவான அறிமுகவுரையை நிகழ்த்தியிருக்கிறார் முனைவர். சு.வினோத். இவர் சிவகாசியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இந்த நிகழ்வு சங்க இலக்கிய ஆய்வு நடுவத்தில் நடைபெற்றிருக்கிறது. சிறப்பாக உரையாற்றிய பேராசிரியர் வினோத்திற்கு எனது அன்பும் நன்றியும். இதனைக் கவனப்படுத்திய சாத்தூர் ஆறுமுகசாமிக்கு அன்பான நன்றி. தேசாந்திரி பதிப்பகம்ரூ 350