கதைப்பயணி 12
கதைப்பயணி தொடரின் 12 வது பகுதி வெளியாகியுள்ளது
ஃபிரான்ஸ் காஃப்கா தனது குறுங்கதை ஒன்றில் விசித்திரமான விலங்கு ஒன்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார். A Crossbreed என்ற கதையில் வரும் விலங்கு பூனையின் தலையும் ஆட்டுக்குட்டியின் உடலும் கொண்டிருக்கிறது. ஆட்டுப்பூனை என்று அதனைக் குறிப்பிடலாமா. இந்த விலங்கு அவரது தந்தையிடமிருந்து பாரம்பரியமாகக் கிடைத்ததாகக் காஃப்கா குறிப்பிடுகிறார். ஆட்டுக்குட்டியைப் போல உடல் கொண்டிருந்தாலும் அது ஆட்டுக்குட்டி போல நடந்து கொள்ளவில்லை. அது போலவே பூனையின் தலை கொண்டிருந்தாலும் எலியைத் துரத்தவில்லை. சில நேரம் ஆடு போல அங்குமிங்கும் ஒடுகிறது. …
சிறந்த நூல்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு ஆண்டு தோறும் படைப்பு குழுமம் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான படைப்பு சங்கமத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கு வழங்கப்படுகிறது விருது வழங்கும் விழா செப்டம்பர் 26 மாலை சென்னை அருங்காட்சியக கலையரங்கில் நடைபெறுகிறது
காரைக்குடி அழகப்பா பல்கலைகழக வளாகத்திலுள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்து பலரும் நின்றபடியே உரையை கேட்டார்கள். திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகம் பிரம்மாண்டமாக உருவாக்கபட்டிருக்கிறது. மூன்று தளங்கள். இரண்டு லட்சம் புத்தகங்கள் வைத்துக் கொள்ளும்படியான இடம். வாசிப்பதற்கு ஏற்ற இருக்கைகள். நிறைய நூல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூலகதின் இணையதளம், மின்நூலாக்கம் மற்றும் அரிய நூல்களை ஆவணப்படுத்தும் நிகழ்வை ப.சிதம்பரம் அவர்கள் துவக்கி வைத்தார். வாசகர் வட்ட …
நாளை 28.8.26 காரைக்குடி அழகப்பா பல்கலைகழக வளாகத்திலுள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகத்தில் உரையாற்றுகிறேன். மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது அன்னையின் நினைவாக இந்த நூலகத்தை உருவாக்கியுள்ளார். நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் நிகழ்வு நடைபெறுகிறது. அனைவரும் கலந்து கொள்ளலாம். அன்புடன் அழைக்கிறேன்
‘ஸ்வார்ட் ஆஃப் தி பீஸ்ட்’ திரைப்படம் தலைமறைவாக வாழும் சாமுராயின் வாழ்வைப் பேசுகிறது. செவன் சாமுராய் போன்ற படங்களில் நாம் காணும் சாமுராய்களிலிருந்து மாறுபட்டவர்கள் இதில் இடம் பெறும் சாமுராய்கள். இவர்கள் அங்கீகாரமில்லாதவர்கள். சாமுராய்கள் என்ற பெயரில் சிலர் ஏமாற்றுவேலைகள் செய்கிறார்கள். தனது இனத்திற்கான அங்கீகாரம் மற்றும் பெருமையைத் தர மறுத்த ஆலோசகரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக வாழுகிறான் கென்னோசுகே. அது ஒரு சதிச்செயல் . அவனுடன் துணை நின்றவர்கள் கொல்லப்படுகிறார்கள். கென்னோசுகே தப்பியோடுகிறான். அவனது பயணத்தில் …
காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தினுள் அமைந்துள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகத்தின் வாசகர் வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன் இந்த நூலகத்தை மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தனது அன்னையின் நினைவாக உருவாக்கியுள்ளார். ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு தொல்காப்பியர் அரங்கில் நிகழ்வு நடைபெறுகிறது மாணவர்கள் மற்றும் வாசகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெறவுள்ளது அனைவரும் கலந்து கொள்ளலாம்.
அமெரிக்க எழுத்தாளரான சிந்தியா ஓசிக்கின் “பொறாமை; அல்லது, அமெரிக்காவில் யித்திஷ்” என்ற குறுநாவல் இரண்டு எழுத்தாளர்களுக்கிடையேயான பொறாமையைப் பேசுகிறது. யித்திஷ் மொழி எழுத்தாளரான ஆஸ்ட்ரோவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் புகழ்பெற்றுவிடுகிறார். அதே மொழியில் எழுதும் கவிஞர் எடெல்ஸ்டீனை யாரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அத்தோடு யித்திஷ் மொழியில் கவிதை படிப்பவர்களும் வெகுவாகக் குறைந்து வருகிறார்கள். ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் உலகின் கவனத்தைப் பெற வேண்டுமா. அல்லது சொந்த மொழியில் எழுதி அந்த வட்டத்திற்குள் மட்டும் புகழ் அடைந்தால் …