admin

யாமம் / தெலுங்கில்

எனது யாமம் நாவல் தெலுங்கில் வெளியாகிறது. ஜில்லேல பாலாஜி மொழியாக்கம் செய்துள்ளார். பாலா புக்ஸ் இதனை வெளியிடுகிறார்கள்.

நடைத்துணை

புதிய சிறுகதை. ஏப்ரல் 19. 2026 அந்த மின்னஞ்சல் ஸ்பாமில் சென்று சேர்ந்திருந்தது. தற்செயலாகவே நான் அதைப் படிக்க நேர்ந்தது •• அன்பிற்குரிய பேராசிரியர் விமல் கற்கடம் அவர்களுக்கு, மேதகு மன்னர் ஜோசப் பெர்னார்ட் இமானுவேல் XXV ன் விசேச அழைப்பின் பெயரில் இந்த மின்னஞ்சலை எழுதுகிறோம். பெருமைக்குரிய எங்கள் மன்னர் மாசுபடாத இயற்கையில் நிதானமாக காலைநடை மேற்கொள்வதை விரும்புகிறவர். இந்த நடைப்பயணத்தில் தினமும் ஒரு புதியவருடன் நடக்க விரும்புகிறார். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தினம் ஒருவர் …

நடைத்துணை Read More »

ஆசையின் மூன்று பாதைகள்

Moscow Does not Believe in Tears சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்ற சோவியத் திரைப்படம். மனதைத் தொடும் சிறந்த திரைப்படம் 1979ல் வெளியான இப்படத்தை விளாடிமிர் மென்ஷோவ் இயக்கியுள்ளார். மூன்று இளம்பெண்களின் நட்பையும் வாழ்க்கை மாற்றங்களையும் பேசும் இப்படம் மாஸ்கோவிலுள்ள ஒரு தொழிலாளர் வசிப்பிடத்தில் துவங்குகிறது. அந்தக் கால மாஸ்கோ நகர வாழ்க்கை, குடியிருப்புகள், வணிகவீதிகள். புதிய தொலைக்காட்சி சேனல், தொழிற்சாலை விரிவாக்கம் என உருமாறிக் கொண்டிருந்த சோவியத் வாழ்க்கையைப் படம் பதிவு …

ஆசையின் மூன்று பாதைகள் Read More »

பிரபஞ்சத்தில் மனிதர்கள்

எனது புத்தகங்கள் நாற்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, மொத்தம் 27 மில்லயன் பிரதிகள் விற்பனையாகியுள்ளன என்கிறார்கள். அதனால் என்ன ? அவை அனைத்தும் வேகமாக மறைந்துவிடும், ஏனெனில் புதிய புத்தகங்களின் வெள்ளம் எல்லாவற்றையும் மூழ்கடித்து, முன்பே எழுதப்பட்டவற்றை வேகமாக அடித்துச் செல்கிறது. இன்று ஒரு புத்தகக் கடையில் உள்ள ஒரு புத்தகத்திற்கு, சிறிதளவு தூசி படிவதற்குக் கூட நேரம் கிடைப்பதில்லை. நாம் இப்போது நீண்ட காலம் வாழ்கிறோம் என்பது உண்மைதான் – ஆனால் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றின் ஆயுட்காலமும் …

பிரபஞ்சத்தில் மனிதர்கள் Read More »

வேர்ச்சொல் விழாவில்

நீலம் அமைப்பின் சார்பில் நடைபெறும் வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை 2026 விழாவில் கலந்து கொள்கிறேன். ஏப்ரல் 18 காலை நடைபெறும் அதன் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.

நன்றி

எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்கள். வாசகர்கள். பத்திரிக்கையாளர்கள். படைப்பாளர்கள், திரைத்துறையினர், குடும்ப உறவுகள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. நண்பர்கள் அகரமுதல்வன். செந்தில் ஜெகனாதன். வாசு முருகவேல். வேடியப்பன், மணிகண்டன் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். அவர்களின் ஏற்பாட்டில் கேக் வெட்டிப் பிறந்த நாளைக் கொண்டாடினேன். தூத்துக்குடி சலூன் நூலகம் மாரியப்பன் பிறந்தநாளை முன்னிட்டு தனது நூலக மனிதர்கள் அமைப்பின் சார்பில் சிறப்பான முன்னெடுப்புகளைச் செய்திருந்தார். வாழ்த்துச் சுவரொட்டிகள். வாசகர்களுக்கு …

நன்றி Read More »

கவிஞனின் நாட்கள்.

கொலம்பிய இயக்குநர் சைமன் மேசா சோட்டோ இயக்கி 2025 ல் வெளியான A Poet திரைப்படம் ஆஸ்கர் ரெஸ்ட்ரெபோ என்ற கவிஞரைப் பற்றியது. தன் தாயின் ஓய்வூதியத்தில் வாழும் ஐம்பது வயதான கவிஞரும், குடிப்பழக்கம் மற்றும் கசப்புணர்வு கொண்டவருமான ஆஸ்கர், மனைவி, மகளைப் பிரிந்து வாழுகிறார். அவரது தோற்றத்திலே அவரது தற்போதைய நிலை தெளிவாக உணர்த்தப்படுகிறது. போதுமான வருவாயில்லை. தகுந்த வேலையில்லை. தனது பல இரவுகளை உள்ளூர் மதுக்கடையில் குடித்துக் கழிக்கிறார். அங்கே, தனக்கு விருப்பமான கவிஞரான …

கவிஞனின் நாட்கள். Read More »

திரைக்கு முன்னால்.

புதிய சிறுகதை. ஏப்ரல் 13. 2026 அந்தப் பெண்கள் இருவரும் கையில் கோன்ஐஸ்கிரீம் வைத்திருந்தார்கள்.. ஆர்கேஎஸ் தியேட்டரில் கோன் ஐஸ்கிரீம் மிகுந்த சுவையாக இருக்கும். வழக்கமாகச் சபாபதியும் அவனது மனைவி தனசங்கரியும் படம் ஆரம்பிக்கும் முன்பாகவே கோன் ஐஸ் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு தான் தியேட்டருக்குள் செல்வார்கள். அன்றைக்கு அவர்கள் டைட்டானிக் படத்தினைக் காணுவதற்காக வந்திருந்தார்கள். கோன்ஐஸை நோக்கித் தனது நாக்கை நீட்டிய ஆரஞ்சு வண்ண சுடிதார் அணிந்த பெண்ணிற்கு முப்பத்தைந்து வயதிருக்கக் கூடும். அருகில் நின்றவளின் வயது …

திரைக்கு முன்னால். Read More »

சலிப்பு நிறமற்றது

செகாவின் சிறுகதைகளில் சலிப்பு ஒரு முக்கியக் கருப்பொருள். சலிப்புற்ற கதாபாத்திரங்களின் மனஉணர்வுகளை, செயல்களைத் துல்லியமாக எழுதியிருக்கிறார். சலிப்பை எழுதுவது எளிதானதில்லை. அது எழுதுவதற்கான கருப்பொருளுமில்லை. அப்படியே எழுதினாலும் அது வாசிப்பிற்கு விருப்பமானதாகயிருக்காது. சலிப்பை இவ்வளவு சுவாரஸ்யமான விஷயமாகச் செகாவால் மட்டுமே மாற்ற முடிகிறது தனது மாறாத இடம் மற்றும் இருப்பு குறித்து ஆணிகள் சலிப்படைவதில்லை. மாறாகத் தான் உறுதியின் துணைவன் என்பதாகத் தன்னை உணருகின்றன. இயற்கையில் சலிப்பு என்பதேயில்லை. ஒரே செயல் நாம் அறியாத பலநூறு நுண்மாற்றங்களுடன் …

சலிப்பு நிறமற்றது Read More »