admin

திரைக்கதையின் திறவுகோல்

அகிரா குரோசேவாவின் சுயசரிதை அவரது திரைப்பட வாழ்வின் துவக்கத்தை மட்டுமே பதிவு செய்திருக்கிறது. ஆனால் “லாங் டேக்’“ குரோசாவாவின் எழுத்துக்கள், எழுத்தாளர் இனோயே ஹிசாஷி மற்றும் இயக்குநர் யமடா யோஜி ஆகியோருடனான அவரது உரையாடல்கள், மற்றும் அவரது மகள் குரோசாவா கசுகோவின் கட்டுரைகள் கொண்டதாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. அதில் செவன் சாமுராய் திரைக்கதை உருவாக்கத்தினைப் பற்றி விவரிக்கும் போது டால்ஸ்டாயைக் குறிப்பிடுகிறார் “செவன் சாமுராய் திரைக்கதையின் மையப்பகுதியாக டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும் (War and Peace ) நாவல் …

திரைக்கதையின் திறவுகோல் Read More »

தன்னை மறந்த புலி

கியூபாவைச் சேர்ந்த எழுத்தாளரான விர்ஜிலியோ பினேரா பெலிசாரியோ என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். இது பணக்காரப் பெண்ணை மணந்து கொண்ட ஒரு புலியைப் பற்றியது. கதையில் புலி மனிதனைப் போலத் தனக்கென ஒரு பெயர் கொண்டிருக்கிறது. அப் பெயர் தான் பெலிசாரியோ. பணக்கார வீட்டின் மருமகனான அப் புலிக்கு ஒரு உதவியாளர் இருக்கிறார். புலி தட்டச்சு இயந்திரத்தின் முன் அமர்ந்து பாரசீக மன்னருக்கு அவரது விருந்தில் கலந்து கொள்ள முடியாத நிலை குறித்து ஒரு கடிதம் எழுதுகிறது. தனது …

தன்னை மறந்த புலி Read More »

காலனியக் குற்றங்கள்

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதை நிகழும் தருணங்களுக்கு அருகில் தன் கதைகளைப் படைப்பவர் எஸ். ராமகிருஷ்ணன். அந்த அடிப்படையில் காலனிய காலத்துக் குற்றவாளிகளைப் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 25 கதைகள் கொண்ட ‘குற்றமுகங்கள்’ தொகுப்பை கவிதையின் அற்புத தருணங்களிலேயே நாயகர்கள், நாயகிகள் சஞ்சரிக்கும் காவியமென்றே வாசிக்க இயலும். எஸ். ராமகிருஷ்ணன் உருவாக்கிய காலனியகால குற்றவாளிகள் எல்லாரது வினோத நடவடிக்கைகளும் இந்த அடிப்படையிலேயே எனக்கு கவிதைகளாகத் தெரிகின்றன ஆண்கள், பெண்கள், பெண் வேடமிட்ட ஆண்கள் குற்றவாளிகளாக அலையும் குற்றமுகங்களில் கடைசி …

காலனியக் குற்றங்கள் Read More »

வீடு நடிக்கிறது

புதிய சிறுகதை ஜுலை 18 2026 நூற்றுப்பத்து வருஷங்களைக் கடந்த அவர்களின் வீடு சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தது. இது அவர்கள் வீட்டில் நடக்கும் பத்தாவது சினிமா படப்பிடிப்பு. விடிகாலை நான்குமணிக்கெல்லாம் படப்பிடிப்பிற்கான முன்தயாரிப்பு பணிகளைத் துவங்கியிருந்தார்கள். வீட்டுச்சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்கள் யாவும் அகற்றப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் நாற்காலிகளை அகற்றி பிரம்பு நாற்காலி போட்டிருந்தார்கள். கதாநாயகியின் வீடாகப் படத்தில் காட்டுகிறார்கள் என்பதை மட்டுமே சாம்பு தெரிந்து கொண்டிருந்தார். லோக்கல் மேனேஜர் வாசுதேவன் தான் அவரோடு தொடர்பில் இருந்தார். ஒரு நாளைக்குப் …

வீடு நடிக்கிறது Read More »

கதைப்பயணி 5

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் வெளியாகும் கதைப்பயணியின் ஐந்தாவது பகுதி வெளியாகியுள்ளது

இந்திய இலக்கியத்தின் முகம்

இந்திய இலக்கியத்தின் சிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் நாவல்வாசிகள் என்ற உங்களின் புத்தகத்தைப் படித்தேன். அற்புதமான நூல். இந்த ஒரு புத்தகத்தின் வழியாக இந்தியாவின் புகழ்பெற்ற முப்பது எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன். அவர்களின் நாவல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியிருப்பதையும் அந்த நாவல்களை ஏன் படிக்க வேண்டும் என்பதையும் அழகாக விவரித்துள்ளீர்கள். இந்த நூலை ஒரு பொக்கிஷம் போல போற்றி வைத்துக் கொள்வேன். உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துகிறேன் கே. சௌந்திரராஜன். தஞ்சாவூர். தேசாந்திரி பதிப்பகம் விலை ரூ …

இந்திய இலக்கியத்தின் முகம் Read More »

ஹைதராபாத் நிகழ்ச்சி

எனது யாமம் நாவலின் தெலுங்கு மொழியாக்க நூல் ஹைதராபாத்தில் வெளியிடப்படவுள்ளது. பாலா புகஸ் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்விற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஜுலை 26 மாலை பிரஸ் கிளப்பில் நடைபெறுகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் பால சாகித்ய சம்மேளனம் நிகழ்வில் நூல் குறித்த அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் நடைபெறுகிறது. இதில் மொழிபெயர்ப்பாளர் ஜிலேல பாலாஜி மற்றும் தெலுங்கின் முக்கிய எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்

கோவை புத்தகத் திருவிழாவில்

ஜுலை 17 முதல் 26 வரை கோவை கொடிசியா மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது, இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்க எண் 267 மற்றும் 268 ஜுலை 22 முதல் 26 வரை கோவையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள். வாசகர்கள் புத்தகத் திருவிழாவில் உள்ள தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம். ஜுலை 25 சனிக்கிழமை மாலை “ஒளிரும் வார்த்தைகள்“ என்ற தலைப்பில் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்

அஞ்சலி

எழுத்தாளர் பூமணி மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். வெக்கை, பிறகு. அஞ்ஞாடி, ரீதி, நொறுங்கல்கள் போன்ற சிறந்த படைப்புகளை தந்த தனித்துவமிக்க படைப்பாளி. நீண்ட கால நண்பர். கோவில்பட்டியில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். பூமணிமகாபாரதம் குறித்த நாவலை எழுதும் முயற்சியில் இருந்த நாட்களில் என்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மக்கள் மொழியில் மகாபாரதம் எழுதப்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தார். அந்த ஆசையின் வடிவமே அவரது கொம்மை நாவல். பூமணியின் மறைவு துயரமளிக்கிறது.

கதைப்பயணி 4

தேசாந்திரி யூடியூப் சேனல் சார்பில் வெளியாகும் கதைப்பயணியின் நான்காவது பகுதி வெளியாகியுள்ளது