admin

டி.ஹெச். லாரன்ஸின் ஒவியங்கள்.

    எழுத்தாளர்களில் பலருக்கும் எழுதுவதற்கு இணையாக பல்வேறு தனித் திறன்கள் இருப்பதை அறிந்திருக்கிறேன். குறிப்பாக ஒவியத்தில் நாட்டமும் தனித்திறனும் கொண்ட எழுத்தாளர்கள் பலர் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். தமிழில் நான் அறிந்தவரை எழுத்தாளர் வண்ணதாசன், விட்டல்ராவ், கவிஞர்கள் தேவதச்சன், ஆனந்த், வைத்தீஸ்வரன், போன்றவர்கள் சிறப்பாக ஒவியம் வரையக்கூடியவர்கள். ஆனால் அதை முழுமையாக அவர்கள் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. யூமா வாசுகி ஒவியக்கலைப் பயின்றவர். தேர்ந்த ஒவியர்.  அவரது எழுத்திலும் அதே தீவிரமும் தனித்துவமும் உள்ளது. கவிஞர் பிரம்மராஜன் …

டி.ஹெச். லாரன்ஸின் ஒவியங்கள். Read More »

நூறு சிறந்த புத்தகங்கள்

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு கலந்துரையாடல் நிகழ்விற்குச் சென்ற போது பெரும்பான்மையினர் கேட்ட கேள்வி. எந்தப் புத்தகங்கள் முக்கியமானவை. எதை நாங்கள் படிக்க வேண்டும். அது பற்றிய பட்டியல் ஏதாவது இருக்கிறதா என்பதே. முன்பு ஒருமுறை இது போன்றதொரு விருப்பபட்டியல் ஒன்றினை வெளியிட்டு இருக்கிறேன். தற்போதைய தேவையை முன்னிட்டு  கட்டயாம் வாசிக்கபட வேண்டும் என்று நான் விரும்பும் 100 சிறந்த புத்தகங்களின் பட்டியல் ஒன்றினை வாசகர்களுக்குச் சிபாரிசு செய்கிறேன். இவை முதன்மையாக படைப்பிலக்கியம் சார்ந்தவை. 1)அபிதாம சிந்தாமணி …

நூறு சிறந்த புத்தகங்கள் Read More »

டோனி மாரிசன்

நியூயார்க்கர் இதழ் சென்ற ஆண்டு அமெரிக்காவில்கடந்தஇருபத்தைந்து வருடங்களில் வெளியான சிறந்த நாவல் எது என்று  ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி அதில் நோபல்பரிசு பெற்ற எழுத்தாளரான டோனி மாரிசனின்  Beloved நாவலைத் தேர்வு செய்தது. அப்போது இதை மறுபடியும் படிக்க வேண்டும்என்று நினைத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்பாக அதைத் திரும்ப வாசிக்க நேர்ந்தது. 1987ல் வெளியான இந்த நாவலைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை படித்திருக்கிறேன். அப்போது எனக்கு நாவலின் மையமாகப் பட்டது முக்கியப் பெண்கதாபாத்திரம் மற்றும் …

டோனி மாரிசன் Read More »

ஏழு கவிதைகள்

 கடந்த சில நாட்களில் நான் வாசித்தவற்றில் எனக்குப் பிடித்தமான கவிதைகள்.    This is a Photograph of Me –   Margaret Atwood   It was taken some time ago. At first it seems to be a smeared print: blurred lines and grey flecks blended with the paper;   then, as you scan it, you see in the left-hand corner a …

ஏழு கவிதைகள் Read More »

உதறிச் செல்லும் அடையாளம்

தீவிர சினிமாவின் இன்றைய இலக்கு வாழ்வைக் காண் நிலையில் அப்படியே பிரதி பலிப்பது மட்டுமல்ல. மாறாக வாழ்வின் முக்கியப் பிரச்சனை யாகக்  கருதும் ஒன்றை நுணுகி ஆராய்வதும், அதன் அக மற்றும்புறத்தளங்களில் ஏற்படும் சலனங்களைஅவதானித்து வெளிப்படுத்துவதுமேயாகும் . சமகால உலக சினிமாவில் பெரும்பான்மை குடும்பம் என்ற அமைப்பு சார்ந்த பிரச்சனைகளையே மையப் பொருளாக  கொண்டுள்ளது. குறிப்பாக குடும்பத்தை  உருவாக்குவதிலும் கட்டிக் காப்பதிலும் ஆண் பெண் இருவரும் என்ன பங்கு வகிக்கிறார்கள். ஆண் பெண் இருவருக்குமான பால் இச்சைகளின் …

உதறிச் செல்லும் அடையாளம் Read More »

யாமம் நாவலுக்கு விருது

            கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற இலக்கிய அமைப்பு ஆண்டு தோறும் தமிழ் எழுத்துலகில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு இயல் விருது அளித்துக் கௌரவப்படுத்துகிறது. இந்த நிகழ்வின் ஒருபகுதியாக சிறந்த நாவல் ஒன்றினைத் தேர்வு செய்து பரிசளிக்கிறார்கள். இந்த ஆண்டு யாமம் நாவல் தேர்வு பெற்று பாராட்டுச் சான்றிதழும் 500 டாலர் பரிசும் பெறுகிறது.

கரைக்க முடியாத நிழல்

பஷீர் பற்றிய ஆவணப்படம் வைக்கம் முகமது பஷீரின் நூற்றாண்டுவிழாவை முன்னிட்டு அவரைப்பற்றிய ஆவணப்படம் Basheer – The Man சென்னையில் திரையிடப்பட்டது. ஆனால் அதைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனது நண்பர்களில் ஒருவர் தனது சேமிப்பில் இருந்த பஷீரைப்பற்றிய ஆவணப்படத்தின் பிரதியொன்றை எனக்காகத் தந்து அனுப்பினார். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக எடுக்கபட்ட ஆவணப்படம் என்ற போதும் இன்றும் அதன் அழகுணர்வும் தேர்ந்த உருவாக்கமும் அதை ஒரு முன்மாதிரி படமாகவே வைத்திருக்கிறது. பஷீர் கதைகளை தமிழில் வாசிப்பதற்கும் மலையாளத்தில் …

கரைக்க முடியாத நிழல் Read More »

ஆட்ரி ஹெபர்னைக் காதலிப்பவர்கள்.

            அறுபது வயதைக்கடந்த பலரது நினைவிலும் இன்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை ஆட்ரி ஹெபர்ன் (Audrey Hepburn)  தீராக்காதலியாகவே இருக்கிறாள். ஹாலிவுட் திரைப் படங்களை பற்றி வயதானவர்களுடன் பேசத் துவங்கியதுமே அவர்கள் முகத்தில் ஆட்ரி ஹெபர்ன் மீதான காதல் ஒளிவீசுவதை பலரிடமும் காண முடிந்திருக்கிறது. உலகமெங்கும் வயதானவர்கள் இந்த ஒரு விஷயத்தில் மாறாமலே யிருக்கிறார்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது. சமீபத்தில் எனது நண்பரின் அப்பாவோடு பேசிக் கொண்டிருந்த போது அவர் ஆட்ரி …

ஆட்ரி ஹெபர்னைக் காதலிப்பவர்கள். Read More »

காமத்துக்கு ஆயிரம் உடைகள்

எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி – ஜெயமோகன் மரணம் அதுவரை வாழ்க்கைக்கு இல்லாதிருந்த ஓர் அர்த்தத்தை அளிக்கிறது என்று அல்பேர் காம்யூவின் புகழ்பெற்ற வரி ஒன்று உண்டு. பல நாவல்கள் இவ்வரியின் நீட்சியாக நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. குறிப்பிடத்தக்கவை இரண்டு. டாக்டர் சிவராம காரந்தின் அழிந்த பிறகு என்ற கன்னட நாவல் அதில் ஒன்று.[தமிழில் சித்தலிங்கையா. தேசிய புத்தக நிறுவனம் வெளியீடு] சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள் இன்னொன்று. இரண்டுமே இறந்துபோன ஒருவரை நினைவுகள் மற்றும் தடையங்கள் மூலம் தேடிப்போய் …

காமத்துக்கு ஆயிரம் உடைகள் Read More »

காந்தியின் நினைவில்.

            தமிழகத்தின் பல இடங்களில் காந்தி வந்த இடம், காந்தி பேசிய மைதானம் என்று  உள்ளன. சில ரயில் நிலையங்களில்அப்படிபெயர்பலகைகளைக் கண்டிருக் கிறேன். விருதுநகர் ரயில் நிலையத்தின் வெளியே காந்தி விருதுநகருக்கு வந்த நாளின் நினைவாக ஒரு கல்வெட்டு காணப்படுகிறது. காந்தியை பார்த்தவர்கள், காந்திக்காக தன் அணிந்திருந்த நகைகளை கழட்டி தந்தவர்கள் என்று பலரது நினைவுகளை என் சிறுவயதில் கேட்டிருக்கிறேன். காந்தியின் கையைத் தொட்டவர்கள் கடவுளின் கையைத் தொட்டது போன்ற …

காந்தியின் நினைவில். Read More »