admin

தெய்வம் தந்த வீடு

இரண்டு பெண்களை பலவருடமாக நான் என் நினைவிலே தேக்கி வைத்திருக்கிறேன். அவர்கள் என் கனவிலும் தனிமையிலும் எப்போதும் சப்தமின்றி இலை அசைவதை போல அசைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒன்று புத்தரின் மனைவி யசோதரா. மற்றவள் சங்க இலக்கியத்தின் கவிதாயிணி வெள்ளிவீதியார். அவர் எழுதியதில் நான்கோ ஐந்தோ பாடல்கள் மட்டுமே  சங்க இலக்கியத்தில் வாசிக்க கிடைக்கின்றன. ஆனால் அந்த பாடலின் ஊடாக வெளிப்படும் காமம் தொடர்பான அவளது ஏங்குதலும் உணர்ச்சி வெளிப்பாடும் வெகு அலாதியானது. கையில்லாத ஊமை கண்ணால் காவல் …

தெய்வம் தந்த வீடு Read More »

நகுலன் இல்லாத பொழுது.

  நினைவு ஊர்ந்து செல்கிறது  பார்க்க பயமாக இருக்கிறது  பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை நகுலன் பூனை இல்லை ஆனால் அதன் சிரிப்பு மட்டும் மறையாமல் இருந்து கொண்டேயிருந்தது என்று ஒரு வாக்கியம் ஆலீஸின் அற்புத உலகம் நாவலில் வருகிறது. நகுலனின் மரணம் பற்றிய தகவல் அறிந்த போது என் மனதில் தோன்றி மறைந்தது இந்த வரி.  பல வருடமாகவே நகுலனை போல சாவை உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்தவர் வேறு எவருமேயில்லை . வீட்டுப்பூனையை போல சாவு அவரை …

நகுலன் இல்லாத பொழுது. Read More »