இசை

குல்சாரின் நினைவுகள்

1940ம் வருடம் பழைய டெல்லியிலுள்ள ரோஷனாரா பாக். அங்கே  ஒரு ஸ்டோர் ரூம். மின்சார வசதி கிடையாது. அதில் பனிரெண்டு வயது சிறுவன் இரவில் தனியே இருக்கிறான். அவன் பிறந்த சில மாதங்களிலே அவனது அம்மா இறந்துவிட்டார். அம்மாவின் முகம் எப்படியிருக்கும் என்று கூட அவனுக்குத் தெரியாது. அம்மாவிற்கு புகைப்படம் கூட கிடையாது. அப்பா வேறு திருமணம் செய்து கொண்டார். அந்தக் குடும்பம் பாகிஸ்தானிலிருந்து டெல்லிக்கு துணி வியாபாரம் செய்வதற்காக குடியேறியிருந்தது. பஜாரில் துணிப்பைகள் மற்றும் தொப்பி …

குல்சாரின் நினைவுகள் Read More »

இசையே வாழ்க்கை

நகலிசைக் கலைஞன் என்ற நூலை நண்பர் ஒருவர் நேற்று பரிசாக அனுப்பியிருந்தார். அதை நேற்றிரவு வாசித்தேன் எங்கள் பகுதியில் ஊருக்கு ஊர் பொருட்காட்சி நடைபெறும். அதன் சிறப்பே மிகச்சிறந்த மெல்லிசை நிகழ்ச்சிகள். எம்.எஸ்.வி. சங்கர் கணேஷ், கங்கை அமரன் துவங்கி உள்ளுர் கலைஞர்கள் வரை பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரபலமான பாடகர்களும் வருதுவண்டு. ஏழு மணிக்கு துவங்கி இரவு பனிரெண்டரை வரை கச்சேரி நடைபெறும். சில நாட்கள் கச்சேரி நீண்டு மூன்று மணியாகியிருக்கிறது. மக்கள் …

இசையே வாழ்க்கை Read More »

திருலோக சீதாராம்

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் திருலோக சீதாராம். சிறப்பான மொழியர்ப்பு. 1962 ஆகஸ்ட் 9ம் தேதியன்று ஹெஸ்ஸே காலமான செய்தியை ரேடியோவில் கேள்விபட்ட திருலோகம் தனது உறவினர்களில் ஒருவர் இறந்து போனது போலப் பதறிப்போயிருக்கிறார் அதைக்கண்ட மனைவி யாரு இறந்து போனது எனக்கேட்டதற்கு, என் சொந்தம். உனக்கு இதுல தீட்டு இல்லை என்று சொல்லிவிட்டு ஹெஸ்ஸேயிற்க்காக தான் தீட்டு காக்கவில்லை என்றாலும் உடனே ஒரு முழுக்கு போட …

திருலோக சீதாராம் Read More »

தும்பி வா

நேற்றைய தி இந்து  நாளிதழில்  ஓ.என்.வி. குரூப்பிற்கான அஞ்சலியாக ஆதி வள்ளியப்பன் ஒரு அற்புதமான கட்டுரையை எழுதியிருக்கிறார். இப்பாடல் எனக்கு மிகவும் விருப்பமானது.  இளையராஜாவின் இசை சாதனைகளில் ஒன்றான இப்பாடலை பாலுமகேந்திரா மிகச்சிறப்பாக படமாக்கியுள்ளார். இக்கட்டுரையை எழுதிய ஆதி வள்ளிப்பனுக்கும் வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள். •••• நினைவலைகள்: ‘தும்பி வா’ தந்த ஓ.என்.வி. குரூப் – ஆதி வள்ளிப்பன் மலையாளம் – தெரியாது ஓ.என்.வி. குரூப் – தெரியாது பாலுமகேந்திராவின் ‘ஓளங்கள்’ – தெரியாது …

தும்பி வா Read More »

காதலின் சங்கீதம்

வாங் கார் வாயின் IN THE MOOD FOR LOVE படத்தில் இடம் பெற்றுள்ள Yumeji’s theme கேட்டிருக்கிறீர்களா. காதலைக் கொண்டாடும் மிகச்சிறந்த பின்னணி இசைக் கோர்வை. மனம் சலித்துப்போகும் நேரமெல்லாம் இதை திரும்பத் திரும்ப கேட்கிறேன். வாங் கார் வாயின் “IN THE MOOD FOR LOVE ஆசிய சினிமாவின் சாதனை. ஹாங்காங்கில் 1960களில் நடைபெறுகிற மாறுபட்ட காதல் கதை. ஒளிப்பதிவாளர் Christopher Doyle, வண்ணங்களை பயன்படுத்தும் வித்திலும் காட்சிக்கோணங்களிலும் புதியதொரு அனுபவத்தை உருவாக்கி தருகிறார், …

காதலின் சங்கீதம் Read More »

காற்றினிலே வெறும் காற்றினிலே

துலாபாரம் படத்தில் இடம்பெற்ற இப்பாடலை இன்றெல்லாம் திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். தேவராஜன் மாஸ்டர் இசையில் ஜேசுதாஸின் குரல் மனதை என்னவோ செய்கிறது ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது, யாரிடத்தில் கேள்வி கேட்பது ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும் வேறுபட்டால் என்ன செய்வது தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம், இறைவனுக்கு வேஷமென்னவோ? ஆடவைத்து பாடுவான் மூடுதிரை போடுவான் மேடை அவன் மேடையல்லவோ வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ பாடலின் வரிகள்  மனதை மேலும் …

காற்றினிலே வெறும் காற்றினிலே Read More »

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் சிரித்தது எனைப் பார்த்து என்ற வேதா இசையில் சுசிலா, டிஎம்எஸ் பாடிய நான்குகில்லாடிகள் படப் பாடலை காலையிலிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறேன், திடீரென இப்படி ஏதாவது ஒரு பாடல் நினைவில் வந்துவிடும், அன்று முழுவதும் அந்தப்பாடலைக் கேட்டுக் கொண்டேயிருப்பேன், வீட்டில் உள்ளவர்கள் அலுத்துப் போய் ,கேட்டது போதும் அணைத்துவிடுங்கள் என்று திட்டும் போதும் பாட்டை முழுமையாகக் கேட்ட திருப்தி வராது எதற்காக இப்படி ஒரே பாடலை மாறி மாறி கேட்டுக் கொண்டிருக்கிறேன் என எனக்கே …

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் Read More »

சுசீலா ராமன்

சுசீலா ராமன்  எனக்கு விருப்பமான பாடகி, அவரது கிறக்கமூட்டும் குரலுக்கு நிகரேயில்லை,  சுசீலாவின் சால்ட் ரெய்ன் இசைத்தொகுப்பு  அற்புதமானது,  தஞ்சாவூரைப் பூர்வீகமாக கொண்ட சுசீலா பிரிட்டனில் பிறந்தவர், அவரது நான்கு வயதில் பெற்றோர் ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்தார்கள், அங்கு மேற்கத்திய இசையும் கர்நாடக சங்கீதமும் கற்றுக் கொண்டவர் சுசீலா ராமன்,  கல்லூரி நாட்களிலே தனக்காக ஒரு இசைக்குழுவை உருவாக்கி கொண்டு கர்நாடக சஙகீதத்தை ஜாஸ் இசையோடு இணைந்து புதியதொரு இசை எழுச்சியை உருவாக்கினார், இன்று உலகப்புகழ்பெற்ற பாடகியாக சுசீலாராமன் …

சுசீலா ராமன் Read More »

அழகே அழகு

சில திரையிசைப் பாடல்கள் கேட்ட முதல்நாளில் இருந்து இன்று வரை அதன் ஈர்ப்பை அப்படியே வைத்திருக்கின்றன, அதில் ஒன்று ராஜபார்வை படத்தில் இடம் பெற்ற ஜேசுதாஸ் பாடியுள்ள அழகே அழகு தேவதை பாடல் கவியரசர்  கண்ணதாசன் எழுதிய இப்பாடல் பாதாதி கேசம் பெண்ணை வர்ணிக்கும் மரபில் உருவானது, பாடலை ரசித்து அழகாக எழுதியிருக்கிறார் கவியரசர், எளிமையும், வியப்பும் ஒருங்கே கொண்ட பாடலது, கண்ணை மூடிக் கொண்டுவிட்டால் மனதில் ஒரு பெண்உருவம் தோன்றி பாடல் கேட்பவரை தன்வசமாக்குகிறது, ராஜபார்வை …

அழகே அழகு Read More »

ஆக்காட்டி ஆக்காட்டி

சேரனின் தவமாய் தவமிருந்து படத்திற்காக படமாக்கபட்ட ஆக்காட்டி ஆக்காட்டி என்ற இப்பாடல் படத்தில் இடம் பெறவில்லை, இப்பாடல் நாட்டுபுறப் பாடலை அடிப்படையாகக் கொண்டது, வலையென்ன பெரும் கனமா அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா என நம்பிக்கையூட்டும் விதமாக இதை மாற்றி எழுதியவர் தோழர் எஸ்ஏபெருமாள், பாடலை மேடைகளில் பாடி புகழ்பெறச் செய்தவர் டாக்டர் கே. ஏ.குணசேகரன் படத்திற்காக இந்தப் பாடலை நாடக இயக்குனர் பிரளயன் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார், பாடலும் படமாக்கபட்ட விதமும் அற்புதமாக உள்ளது இதை …

ஆக்காட்டி ஆக்காட்டி Read More »