ஒவ்வொரு ஆண்டும் சிறார்களுக்காக ஒரு நூலை எழுதுவது எனது வழக்கம்.
இந்த ஆண்டு முட்டாளின் மூன்று தலைகள் என்ற சிறார் நூலை எழுதியிருக்கிறேன்.
முட்டாள்கள் மட்டுமே வசிக்கும் ஒரு ஊரை மையமாக் கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது. அந்த ஊரில் தினம் ஒரு புதுச்சட்டம் கொண்டு வருகிறார்கள். இதனால் மக்கள் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்பதே கதையின் மையம்.
டிசம்பர் 25 மாலை ரஷ்யக் கலாச்சார மையத்தில் இந்நூல் வெளியிடப்படுகிறது.