2019ன் சிறந்தபுத்தகங்கள்–11

நைஜீரியா எழுத்தாளர் அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதிய Season of Crimson Blossoms நாவலின் தமிழாக்கமே தீக்கொன்றை மலரும் பருவம் நைஜீரியாவில் 2015ல் வெளியான இந்நாவலை லதா அருணாசலம் மொழியாக்கம் செய்திருக்கிறார். இவர் பல ஆண்டுகள் நைஜீரியாவில் வசித்தவர் என்பதால் நாவலின் நுட்பங்களை மிகச்சிறப்பாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஜீரோ டிகிரி பதிப்பகம் இதனை வெளியிட்டுள்ளது

Season of Crimson Blossoms 2016 ஆம் ஆண்டிற்கான நைஜீரியாவின் உயரிய இலக்கிய விருதினை வென்றிருக்கிறது.

நாவலின் கதை 2009 மற்றும் 2015க்கு இடையில் நடைபெறுகிறது. அபுஜாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பிந்த்தா ஜுபைரு என்ற 55 வயதுப் பெண்ணை மையமாகக் கொண்ட கதை, ஹஸன் ’ரெஸா என்ற போதைப் பொருள் விற்பவனுடன் அவளுக்கு எதிர்பாராத உறவு ஏற்படுகிறது. இந்த உறவின் பின்புலத்தில் சமகால அரசியல் நிகழ்வுகள். போதை மருந்து கடத்தல் என நைஜீரியாவின் சமகால வாழ்வையும் விசித்திரமான காதலின் மூர்க்கத்தையும் இணைத்து விவரிக்கிறது இந்நாவல்.

0Shares
0