
தனது சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்புகளின் வழியே தமிழ் இலக்கிய உலகினை வளப்படுத்தி வரும் அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.
கிரேக்க மற்றும் இந்தியத் தொன்மங்கள், சீனாவின் புராணங்கள், இஸ்லாமிய மற்றும் பௌத்த சமயத்தில் இடம்பெற்றுள்ள கற்பனையான விலங்குகள் எனப் பல்வகையான கற்பனா ஜீவராசிகளைக் குறித்த ஒரு கையேட்டினை உருவாக்கியதன் மூலம் புனைவின் விசித்திரங்களை அடையாளப்படுத்துகிறார் போர்ஹெஸ்.
மொழிபெயர்ப்பதற்குப் பெரும் சவாலான இந்தப் புத்தகத்தை மிகுந்த கவனத்துடன், நுட்பத்துடன் கார்த்திகை பாண்டியன் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
சிறப்பாக நூலை வெளியிட்டுள்ள எதிர் வெளியீட்டிற்கும் என் மனம் நிரம்பிய பாராட்டுகள்
**