அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டில் உங்கள் கனவுகள் யாவும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
நேரிலும் தொலைபேசியிலும் மின்னஞ்சல் மூலமும் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
••
புத்தாண்டின் துவக்கமாக இன்று மாலை (1.1.2010 ) தஸ்தாயெஸ்கியின் நாட்குறிப்புகள் குறித்து உரை நிகழ்த்துகிறேன்
ஜனவரி மூன்றாம் தேதி மாலை அடையாறு ஒடிசி புத்தக கடையில் எனது சிறுகதை தொகுப்பான போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில் அறிமுக விழா மாலை ஆறுமணிக்கு நடைபெறவுள்ளது
ஜனவரி ஐந்தாம் தேதி இக்சா மையத்தில் யாவரும் பதிப்பகத்தின் 11 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு நூல்களை வெளியிடுகிறேன்
ஜனவரி ஏழாம் தேதி தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் நடைபெறவுள்ள பயிலரங்கில் உரை நிகழ்த்துகிறேன்
ஜனவரி 9 ம் தேதி முதல் 21 வரை புத்தகக் கண்காட்சி. தேசாந்திரி அரங்கில் இருப்பேன்.
ஜனவரி 20 பாரதி புத்தகாலய நூல் வெளியீட்டில் கலந்து கொள்கிறேன்.
ஜனவரி 28 சென்னை பல்கலைகழகத்தில் உரை நிகழ்த்துகிறேன்
••
பிப்ரவரியில் மும்பையில் நடைபெறவுள்ள கேட்வே லிட்பெஸ்டிவலுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருக்கிறேன்