Month: September 2025

காஃப்காவின் நிழல்

பெஞ்சமின் பாலிண்ட்டின் Kafka’s Last Trial: The Case of a Literary Legacy புத்தகத்தைப் படிக்கும் போது அது காஃப்காவின் விசாரணை நாவலைப் போலவே இருப்பதை உணர முடிகிறது. காஃப்காவின் படைப்புகள் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த நீதிமன்ற வழக்கு பற்றிய இப்புத்தகம் ஜெருசலேமில் ஒரு கோடை காலத்தின் காலை நேரத்தில் முற்றிலும் கறுப்பு நிறத்தில் உடையணிந்த 82 வயதான ஈவா ஹோஃப், இஸ்ரேலிய உச்ச நீதிமன்றத்தின் வளைந்த மர பெஞ்சில் தனது கைகளைப் பற்றிக் …

காஃப்காவின் நிழல் Read More »

குற்றமுகங்கள் 23 தாம்பே

குற்றத்தின் காரணவியல் என்ற புத்தகத்தை எழுதிய டாக்டர் ஆர்.ஜே. பிராங் இந்தியாவில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அதில் இரண்டு ஆண்டுகள் தென்னிந்தியாவில் களஆய்வு செய்ததாக நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இவரது ஆய்வின் நோக்கம் எந்தப் பருவ காலத்தில் எது போன்ற குற்றங்கள் அதிகமாகின்றன என்பதைக் கண்டறிவதாகும். அவர் தனது கள ஆய்வில் விசித்திரமான பல உண்மைகளைக் கண்டறிந்தார். இந்தியாவில் அதிகபட்ச கொலைகள் வெப்பமான மாதங்களில் நடைபெறுகின்றன ஆகஸ்ட் மாதத்தில், கிராமப்புற தீ விபத்துகள் அதிகமாகின்றன. அக்டோபர் முதல் …

குற்றமுகங்கள் 23 தாம்பே Read More »

குற்றமுகங்கள் 22 தகையார்

சிறாக்குடியில் வசித்த தகையாருக்கு எழுபது வயதிருக்கும். ஆறரை அடி உயரம். நெற்றியில் குங்குமம் வைத்திருப்பார். உறுதியான உடற்கட்டு. நரைத்த தலைமயிர். நெய் தடவி வளர்த்த அடர்த்தியான மீசை. தாடி. இடது காதில் இரண்டு மயிர் நீண்டிருந்தது. எருமைத்தோல் செருப்பு அணிந்திருப்பார். இடுப்பில் ஒரு குறுவாள் சொருகப்பட்டிருக்கும். தகையார் தானாக எதையும் திருட மாட்டார். யாராவது திருடித் தரும்படி வேண்டுகோள் வைத்தால் மட்டுமே திருடுவார். அதுவும் அந்த வேண்டுகோள் நியாயமாக இருக்கும் பட்சத்தில் தான் திருடுவார். அப்படித் திருடிக் …

குற்றமுகங்கள் 22 தகையார் Read More »

கார்லோஸின் பொய்கள்

கிளாடியா ரெய்னிக்கே இயக்கிய ரெய்னாஸ் Reinas (Queens) திரைப்படம் 2024ல் வெளியானது. இப்படம் பதின்வயதுப் பெண்ணின் மனநிலையை, உணர்ச்சிகளை, ரகசியங்களை மிகவும் அழகாகப் பதிவு செய்துள்ளது. பதின்வயது பெண்ணான அரோரா தனது தோழிகளுடன் உரையாடும் விதம். தங்கை லூசியாவிடம் ரகசியத்தைப் பகிர்ந்து கொள்வது. அம்மாவிற்கும் மகளுக்கும் வரும் சண்டை. உணவகத்தில் சாப்பிடும் விதம் எனப் படம் நிஜமான உணர்ச்சிகளை, நிஜமான விதத்தில் வெளிப்படுத்தியுள்ளது. அரோரா மற்றும் லூசியா இருவரும் அழகான கதாபாத்திரங்கள். 1992 ஆம் ஆண்டு லிமா …

கார்லோஸின் பொய்கள் Read More »

இஸ்தான்புல்லின் கண்

அரா குலார் (Ara Güler) துருக்கியின் தலைசிறந்த புகைப்படக்கலைஞர். இவர் தன்னை Visual Historian என்றே அடையாளப்படுத்துகிறார். 2018ல் காலமான  இவரது புகைப்படங்களை வரலாற்று ஆவணங்களாகக் கருதுகிறார்கள்.  இஸ்தான்புல்லின் கண் என்று இவரைக் கொண்டாடுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஓரான் பாமுக் இஸ்தான்புல் குறித்த தனது நூலில் இவரைக் குறிப்பிடுகிறார். அத்துடன் இவரது புகைப்படங்களையும் பயன்படுத்தியிருக்கிறார். புகழ்பெற்ற ஆளுமைகளை மட்டுமின்றி தினசரி வாழ்க்கை காட்சிகளையும் அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறார். பிக்காசோ, டாலி உள்ளிட்ட புகழ்பெற்ற ஓவியர்களையும் …

இஸ்தான்புல்லின் கண் Read More »

செய்தியும் கதையும்

தமிழக அரசால் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் அழைப்பில் நேற்று அங்கே சென்று செய்தியும் கதையும் என்ற தலைப்பில் உரையாற்றினேன். கதையும் செய்தியும் எப்படி வேறுபடுகிறது, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களான ஹெமிங்வே, மார்க்வெஸ் போன்றவர்கள் எப்படிப் பத்திரிக்கையுலகிலிருந்து எழுத்தாளர்களாக உருவானார்கள். பாரதியார், காந்தியடிகள் நடத்திய பத்திரிக்கைகள். தமிழ் இலக்கியத்தின் தனித்துவமான விஷயங்கள். டிஜிட்டில் உலகில் செய்தியின் இடம் மற்றும் தரம். இளம் பத்திரிக்கையாளர் பயில வேண்டிய அடிப்படைகள் விஷயங்கள் எவை என்பது குறித்து …

செய்தியும் கதையும் Read More »

தி காட் ஃபாதர் / சிறப்புக் காட்சி.

தி காட் ஃபாதர் படத்தின் சிறப்புக் காட்சிகள் சென்னையின் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன. நேற்று இரவு அதனைக் காணுவதற்காகச் சென்றிருந்தேன். அரங்கு நிறைந்த கூட்டம். பெரிதும் இளைஞர்கள். அதிலும் திரைத்துறையில் பணியாற்றும் இளைஞர்கள். தி காட் ஃபாதர் படத்தை எல்டி, ப்ளூ ரே டிஸ்க் வழியாகப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆயினும் அதனைத் திரையில் காணுவது பரவசமளிக்கும் அனுபவம். 1972ல் வெளியான இப்படம் ஐம்பது ஆண்டுகளைக் கடந்ததை முன்னிட்டு 2022ல் சிறப்புக்காட்சிகளைத் திரையிட்டார்கள். அன்றும் இதே அளவு …

தி காட் ஃபாதர் / சிறப்புக் காட்சி. Read More »

திரைப்பயணி -10

இங்மர் பெர்க்மென் இயக்கிய தி விர்ஜின் ஸ்பிரிங் (The Virgin Spring) திரைப்படம் குறித்து திரைப்பயணி தொடரில் உரையாற்றியுள்ளேன்