Month: December 2025

சாய்ந்தாடும் குதிரை

எனது புதிய சிறுகதைகளின் தொகுப்பு சாய்ந்தாடும் குதிரை. டிசம்பர் 25 மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் வெளியாகிறது. தேசாந்திரி பதிப்பகம் சார்பில் நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

நாவல்வாசிகள்

டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறுகிறது. அதில் ஐந்து புதிய நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் நடத்தும் இந்த வெளியீட்டுவிழாவில் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன் மகத்தான இந்திய நாவல்களைக் கொண்டாடும் நாவல்வாசிகள் இந்து தமிழ்திசை நாளிதழில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

பொம்மைகளின் பேரரசன்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 வியாழன் மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எனது ஐந்து நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. பொம்மைகளின் பேரரசன் சிறார்களுக்கான புனைகதை. இதில் வரும் பொம்மைகளின் பேரரசன் முடிவில்லாத பயணத்தை மேற்கொள்கிறான். அவன் சொல்லும் கதைகளின் வழியே விசித்திரமான வாழ்க்கையும் மனிதர்களும் அறிமுகமாகிறார்கள். நட்சத்திரங்களின் வீட்டைத் தேடும் ஆடும். கதை கேட்கும் மீன்களும், முதலையை வரையும் ஓவியனும். எரிமலைக்குள் கதை சொல்லும் பூர்வகுடிகளும் …

பொம்மைகளின் பேரரசன் Read More »

மஞ்சள் தருணங்கள்

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 வியாழன் மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எனது ஐந்து நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. அயல்மொழித் திரைப்படங்கள் குறித்து எனது இணைய தளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் 50 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

கவிதைகள் : சில பார்வைகள்

எனது கவிஞனும் கவிதையும் நூல் குறித்து மதிப்பிற்குரிய வெ. இறையன்பு IAS தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். ராணி வார இதழில் அவர் எழுதி வரும் தொடரின் ஒரு பகுதியாக இக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. இறையன்பு அவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி. நன்றி வாராந்திரி ராணி.

டிசம்பர் 25 புதிய புத்தக வெளியீடு

எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா டிசம்பர் 25 வியாழன் மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் எனது ஐந்து நூல்கள் வெளியாகின்றன. தேசாந்திரி பதிப்பகம் இதனை வெளியிடுகிறது. குற்றமுகங்கள் குற்றம் என்பது ஒரு ரகசிய முகமூடி. அதை யார் எப்போது அணிந்து கொள்வார்கள் என்று தெரியாது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் காலனிய குற்றப்புனைவுகள் என்று வரையறுக்கலாம். காலனிய ஆட்சியின் போது நடைபெற்ற பல்வேறு குற்றங்களைப் புனைவின் வழியே புதிய கதைகளாக்கியிருக்கிறேன்.

ரயில் கடவுளிடம் ஒரு பிரார்த்தனை

The Most Precious of Cargoes என்ற பிரெஞ்சு அனிமேஷன் திரைப்படம் ஆஷ்விட்ஸ் யூதப் படுகொலையை மையமாகக் கொண்டது. ஆனால் வதைமுகாமின் துயரக் கதையைச் சொல்வதில்லை. முற்றிலும் மாறுபட்ட ஒரு நிகழ்வின் வழியாக யூத வெறுப்பு அந்த நாளில் எப்படி வேரோடியிருந்தது என்பதையும் நம்பிக்கையின் அடையாளமாக விளங்கிய இருவரையும் பற்றி விவரிக்கிறது. மரபான தேவதைக் கதையைப் போலத் துவங்கும் திரைப்படம் வரலாற்றின் இருண்டபக்கத்தை ஆராய்கிறது அனிமேஷன் திரைப்படத்தின் மூலம் வரலாற்றையும் அதன் அறியப்படாத உண்மைகளையும் பேச முடியும் …

ரயில் கடவுளிடம் ஒரு பிரார்த்தனை Read More »

அன்றும் இன்றும்.

தி நியூயார்க்கர் இதழின் நூற்றாண்டினை முன்னிட்டு அது கடந்த வந்த காலத்தை ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார்கள். மார்ஷல் கரி  இதனை இயக்கியுள்ளார். நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை ஒட்டி இதுவரை தி நியூயார்க்கரில் வெளியான சிறுகதைகளிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த ஆவணப்படம் நியூயார்க்கர் இதழ் யாரால் எப்படித் துவங்கப்பட்டது. அதன் பிரபலமான ஆசிரியர்கள் மற்றும் தேர்வு முறை, வெளியீட்டில் காட்டும் துல்லியம் குறித்து விரிவாகப் பதிவு செய்துள்ளது. நியூயார்க்கர் அமெரிக்க உயர்குடியின் ரசனைக்குரியது என்ற விமர்சனத்தையும் கூட …

அன்றும் இன்றும். Read More »

மலர்களை நேசிக்கும் காளை.

அமெரிக்க எழுத்தாளர் முன்ரோ லீஃப் எழுதிய தி ஸ்டோரி ஆஃப் ஃபெர்டினாண்ட் குழந்தைகளுக்கான சிறந்த கதைப் புத்தகம். மலர்களை நேசிக்கும் ஒரு காளையின் கதையைச் சொல்லும் இந்நூல் அனிமேஷன் திரைப்படமாகவும் வந்துள்ளது இளம் காளையான ஃபெர்டினாண்ட் மற்ற காளைக் கன்றுகளைப் போல மோதவும், குதிக்கவும், மற்ற காளைகளோடு சேர்ந்து விளையாடவும் விரும்பாமல் தனிமையில் அமர்ந்து கொண்டு பூக்களை ரசிக்கிறது. அதற்கு. பூக்களை மிகவும் பிடிக்கும், தனிமையும் பிடிக்கும். மலர்களின் நறுமணத்தை அனுபவிக்கிறது. இதற்கென ஒரு மரத்தடி நிழலினையும் …

மலர்களை நேசிக்கும் காளை. Read More »

மழையை ருசிக்கும் சிறுமி

தெலுங்குச் சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். 1973ல் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டது. அதில் எழுத்தாளர் திரிபுரநேனி கோபிசந்த் எழுதிய பாசம் என்ற கதை விவசாயி ஒருவரின் வாழ்க்கையை விவரிக்கிறது. திரிபுரநேனி  கோபிசந்த் சிறந்த தெலுங்கு எழுத்தாளர். பத்து நாவல்கள், பன்னிரண்டு நாடகங்கள்,  நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ளார். ஜோகய்யா என்ற விவசாயிக்கு மூன்று மகன்கள். பேரன் பேத்தி எனப் பெரிய குடும்பம்.. அவரது மனைவி நோயாளியாக மரணப் படுக்கையில் கிடக்கிறார். ஜோகய்யாவிற்கு நிறைய நிலமிருக்கிறது. …

மழையை ருசிக்கும் சிறுமி Read More »