Month: February 2026

வரைபடமில்லாத பயணம்.

மவுண்டன்ஸ் ஆஃப் தி மூன் திரைப்படம் நைல்நதியின் தோற்றுவாயைக் கண்டறிவதற்காகப் பிரிட்டீஷ் ஆய்வாளர் ரிச்சர்ட் பர்டன் மற்றும் ஸ்பீக் மேற்கொண்ட நெடும்பயணத்தை விவரிக்கிறது. இப்படத்தைப் பாப் ரஃபெல்சன் இயக்கியுள்ளார் ரோஜர் டீகன்ஸின் கேமிரா படத்தின் பெரும்பலம். கிழக்கு ஆப்ரிக்காவின் முடிவற்ற நிலவெளியில் பர்டனின் குழு பயணிக்கும் போது கேமிரா அவர்களைப் பருந்தெனப் பின்தொடர்கிறது. இரவுக்காட்சிகளை ரோஜர் டீக்கன்ஸ் படமாக்கியுள்ள விதம் அற்புதம். குறிப்பாக மெழுகுவர்த்தி ஒளியில் பர்ட்டன் தனது காதலி இசபெலின் நிர்வாண உடலைக் காணும் போது …

வரைபடமில்லாத பயணம். Read More »

அஞ்சலி

பெருமதிபபிற்குரிய தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நூற்றாண்டு கண்ட தியாகச் செம்மல் . பொதுவாழ்வில் அவர் காட்டிய தீரமும் அறமும் போற்றுதலுக்குரியது.

நீரறியா அன்னங்கள்

புதிய சிறுகதை. பிப்ரவரி 24, 2026 டர்க்கி டவலால் அன்னம் செய்வது அவளது வேலை. ஜேசி டவர்ஸ் ஹோட்டலில் அறுபத்து நான்கு அறைகளிருந்தன. அதில் ஆடம்பர அறைகள் எட்டு. அந்த அறைகளுக்கு மட்டும் வெண்ணிற டர்க்கி டவலால் அன்னம் செய்து வைக்க வேண்டியது ராஜதிலகத்தின் வேலை. ஜோடி அன்னங்கள் செய்து இதய வடிவில் படுக்கையில் வைக்க வேண்டும். அறையில் தங்குகிறவர்களில் குழந்தைகள் இருப்பார்கள் எனில் அவர்களுக்கெனக் குட்டியானை அல்லது முயலை டவலில் செய்து வைப்பது வழக்கம். டர்க்கி …

நீரறியா அன்னங்கள் Read More »

சி. சு. செல்லப்பா உரை.

நேற்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் சி. சு. செல்லப்பா குறித்து உரையாற்றினேன். ஒரு மணி நேர விரிவான உரை. தமிழ்மொழித்துறை மாணவர்களும் ஆய்வுமாணவர்களும், பேராசிரியர்களும் நிறைந்த அவை. சி.சு.செல்லப்பாவின் பேரன் கார்த்திக் சுப்ரமணியன் பெங்களூரிலிருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அந்த உரையில் செல்லப்பாவின் சுதந்திரப் போராட்ட அனுபவங்கள், அவரது, சிறுகதைகள் , புதுக்கவிதை உருவான விதம், அவர் முன்னெடுத்த அமெரிக்க இலக்கிய விமர்சன முறை, அவரது இலக்கிய நண்பர்கள், செல்லப்பாவின் …

சி. சு. செல்லப்பா உரை. Read More »

இரண்டு முடிவுகள்

பாவ்லோ ஸோரன்டினோ இத்தாலிய சமகால இயக்குநர்களில் முக்கியமானவர். இவரது சமீபத்திய திரைப்படம் லா கிராசியா, 2025ல் வெளியானது. இத்தாலியின் ஜனாதிபதியான மரியானோ டி சாண்டிஸ் தனது பதவிக்காலம் முடியும் தருவாயில் இரண்டு முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் தவிக்கிறார். ஒன்று கருணைக்கொலை தொடர்பான சட்டம். அதில் கையெழுத்து இடுவதன் வழியாகத் திருச்சபை மற்றும் எதிர்க்கட்சிகள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை நினைத்துத் தயங்குகிறார். ஆகவே அதனை நீண்டகாலமாகவே கையெழுத்துப் போடாமல் தவிர்த்து வருகிறார். இரண்டு மரணதண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு …

இரண்டு முடிவுகள் Read More »

வார்த்தைகளின் இல்லம்

The Book of Embraces எட்வர்டோ கலியானோவின் முத்தொகுதிகளில் ஒன்று இந்த நூல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றை மையமாகக் கொண்டது. ஆய்வாளர்கள் வரலாற்றை உயரிய கோபுரமாகக் கட்ட முயலும் போது படைப்பாளிகள் அவற்றை நீருற்று போலவோ, பனி உருகியோடுவது போலவே மாற்ற முயலுகிறார்கள். வரலாற்றின் சிறுதுண்டுகளையே எடுவர்டோ கலியானோ உருவாக்குகிறார். கூழாங்கல்லைப் போன்ற அழகிய உருவம் கொண்ட அந்தச் சிறுகுறிப்புகள். குறுங்கதைகள், அசாதரண நிகழ்வுகள் வசீகரமாக விளங்குகின்றன. கலைடாஸ்கோப்பினுள் உடைந்த கண்ணாடித்துண்டுகள் ஒன்று சேர்ந்து புதிய …

வார்த்தைகளின் இல்லம் Read More »

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில்

9வது நெல்லை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்கிறேன். பிப்ரவரி 20 வெள்ளிக்கிழமை மாலை எழுத்தாளர் அ.மாதவையா வாழ்வும் எழுத்தும் குறித்து உரையாற்றுகிறேன். அ. மாதவையா தமிழின் முன்னோடி நாவலாசிரியர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியைத் திருநெல்வேலியில் படித்திருக்கிறார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்றவர் Salt Inspector ஆகப் பணியாற்றியுள்ளார். முத்துமீனாக்ஷி, பத்மாவதி சரித்திரம், கிளாரிந்தா போன்ற நாவல்களை எழுதியுள்ளார் இந்தியாவின் புகழ்பெற்ற கானுயிர் புகைப்படக் கலைஞரும் சுற்றுச்சூழல் ஆய்வாளருமான எம். கிருஷ்ணன் …

திருநெல்வேலி புத்தகத் திருவிழாவில் Read More »

சி.சு. செல்லப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறை சார்பில் நடைபெறும் எழுத்தாளர் சி.சு. செல்லப்பா நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன். மெரினா வளாக அரங்கில் 18.2.26 புதன்கிழமை மதியம் 2.30 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

ஷேக்ஸ்பியரின் மகன்

அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளரான மேகி ஓ’ஃபாரலின் ஹாம்னெட் நாவல் ஷேக்ஸ்பியரின் மனைவி பார்வையில் ஹாம்னெட்டின் இறப்பு மற்றும் அதன் விளைவுகளை விவரிக்கிறது. ஷேக்ஸ்பியரின் ஒரே மகன் ஹாம்னெட். இதில் ஆக்னஸ் எதிர்காலத்தை உணரும் இயற்கைக்கு அப்பாற்பட்ட திறனையும் கொண்ட மருத்துவராகச் சித்தரிக்கபடுகிறாள். கிரேக்க தேவதைகளில் ஒருவரைப் போலவே ஆக்னஸ் உருவாக்கபட்டுள்ளார் ஷேக்ஸ்பியரின் மனைவியைப் பற்றிய புதிய கண்ணோட்டத்தை விவரிக்கும் இந்த நாவலை Nomadland திரைப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்ற இயக்குரான Chloé Zhao திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்த …

ஷேக்ஸ்பியரின் மகன் Read More »

காற்றில் மிதக்கிறோம்

புதிய சிறுகதை. பிப்ரவரி 9 2026. அப்பாவும் அம்மாவும் மராத்தானில் ஓடிக் கொண்டிருந்தார்கள். இருவரும் ஒரே போலக் கறுப்பு நிற டிராக் பேண்ட். மஞ்சள் நிற காலர் இல்லாத டீசர்ட். கழுத்தில் போட்டியில் தரப்பட்ட அடையாள அட்டை. காலில் ஸ்போர்ட்ஸ் ஷு. மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்த மினி மாரத்தான் போட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பத்துகிலோமீட்டர் தூர ஓட்டமது. அப்பாவும் அம்மாவும் சாலையில் ஓடிக் கொண்டிருப்பதை யார் வீடியோ எடுத்தார்கள் எனத் தெரியவில்லை. இருவரும் சீராக …

காற்றில் மிதக்கிறோம் Read More »