Month: March 2026

இரண்டு ஊசிகள்

தனது என் சரித்திரம் நூலில் தமிழ்தாத்தா உ. வே. சாமிநாதையர் , தனது பாட்டனாரைப் பற்றி ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். வேங்கடாசலம் என்ற அந்தத் தாத்தா மரணத்தருவாயில் உ.வே.சாவின் அன்னையை அருகில் அழைத்து “ நீ எனக்கு எவ்வளவோ உபசாரம் செய்திருக்கிறாய் . நான் உன்னைப் பல சமயங்களில் கடிந்து பேசியிருக்கிறேன் . வருத்தப்படாதே. நீ நல்ல பெண் ” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய தலைமாட்டிலுள்ள சிறு மூட்டையை எடுத்து . அதில் போடப்பட்டிருந்த ஒரு முடிச்சை …

இரண்டு ஊசிகள் Read More »

உருமாறும் அன்றாடம்.

எரான் கொலிரின் இயக்கிய தி எக்ஸ்சேஞ்ச் என்ற இஸ்ரேலியத் திரைப்படம் நகரவாழ்வின் சலிப்பை, தனிமையை அழகாகச் சித்தரிக்கிறது. டெல் அவிவ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்யும் ஓடெட் ஒருநாள் தனது பையை வீட்டில் மறந்துவிட்டுச் செல்கிறான். அதை எடுப்பதற்காக வீடு திரும்பும் போது பகலில் தனது வீடு வேறு ஏதோ ஒரு தோற்றத்தில் இருப்பதாக உணர்கிறான். தனிமையாக வெறுமையாகவும் அமைதியாகவும் இருக்கும் ஒரு அந்நியனின் வீட்டிற்குள் நுழைந்தது போல் அவனுக்குத் தோன்றுகிறது அன்றாடம் காலை வேலைக்குப் போய்விட்டு …

உருமாறும் அன்றாடம். Read More »

நட்சத்திரத்தின் நிழல்

ஒருவர் உங்களை வானளாவப் புகழ்கிறார் என்றால் அது வெறும் பாராட்டாக மட்டுமிருக்காது. புகழ்பவர் மனதில் வேறு ஏதோ எண்ணங்கள் இருக்கக் கூடும். உங்கள் இடத்தை அடைவதற்குக் கூட அவர் உங்களைப் புகழக் கூடும். அபிமானியாக இருப்பவர் அப்பாவியில்லை. அவரது நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் நேரத்தில் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். அரசியலிலும் வணிகத்திலும் திரைத்துறையிலும் இது போன்ற அபிமானிகளை, ஆராதகர்களை நிறையவே காணலாம். பல்வேறு உண்மை நிகழ்வுகள் இப்படி நடந்துமிருக்கின்றன. ஆறு ஆஸ்கார் விருதுகளை வென்ற ஆல் …

நட்சத்திரத்தின் நிழல் Read More »

தங்கள் பொறுப்பு

புதிய சிறுகதை. மார்ச் 20, 2026 சக்கையன் தலையில் கட்டியிருந்த சிவப்புத் துண்டினை அவிழ்த்து கையில் ஏந்தியபடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் “ வானரூ இறந்துபோயிட்டாரு.. தானம் பண்ணுங்க“ என்று கேட்டுக் கொண்டிருந்தான். வானரூ யார் என எவரும் கேட்டுக் கொள்ளவில்லை ஒரு சிலர் சில்லறைக் காசுகளைத் துண்டில் போட்டார்கள். ஒருவர் பேண்ட் பாக்கெட்டிலிருந்து மணிபர்ஸை வெளியே எடுத்துத் திறந்து பார்த்துவிட்டு இல்லை என்று கையை விரித்தார். சென்னையிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்னும் வரவில்லை. …

தங்கள் பொறுப்பு Read More »

ஜெர்மன் மொழியாக்கம்

தமிழின் சிறந்த 16 சிறுகதைகளைத் தேர்வு செய்து ஜெர்மன் மொழியில் Meereswellen und andere Geschichten எனத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார்கள். ஹேம் மகேஷ் மற்றும் சேரலாதன் இதன் மொழிபெயர்ப்பாளர்கள். கிறிஸ்டியன் வெயிஸ் இதன் வெளியீட்டாளர். Draupadi Verlag பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சென்னை சர்வதேசப் புத்தகத் திருவிழாவின் நிதிநல்கையுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தொகுப்பில் எனது சிறுகதை திருடனின் மூன்று அற்புதங்கள் இடம் பெற்றுள்ளது,

கு.அழகிரிசாமியின் நாட்குறிப்புகள்

எழுத்தாளர் கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகளை ஆய்வாளர் பழ. அதியமான் தொகுத்துப் பதிப்பித்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிடுகிறது. இதற்கான வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறுகிறது, ஏப்ரல் 5 ஞாயிறு மாலை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அரங்கில் விழா நடைபெறுகிறது அதில் கலந்து கொண்டு கு. அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் குறித்து உரையாற்றுகிறேன்

வாசகன் எனும் கதாபாத்திரம்

டேவிட் மார்க்சன் (David Markson) தனித்துவமான அமெரிக்க எழுத்தாளர். இவரது நாவல்கள் மேற்கோள்கள், தகவல்கள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டவை தீவிர வாசகன் ஒருவனின் சிதறுண்ட குறிப்புகளாக நீளும் இந்த வகை நாவல் புதிதானது. மரபான நாவல்களைப் போல இவரது படைப்பு ஒரு கதாபாத்திரத்தின் வழியே நிகழ்வுகளை விவரிப்பதில்லை. வாசகன் தான் இவரது புனைவின் மையக் கதாபாத்திரம். வாசகன் மனதில் பதிந்து போன இலக்கியம் மற்றும் கலை சார்ந்த நிகழ்வுகள். வரலாற்று தகவல்களைச் …

வாசகன் எனும் கதாபாத்திரம் Read More »

சிறிய நகரத்திலிருந்து ஒரு குரல்

Spring in a Small Town 1948ல் வெளியான சீனத் திரைப்படமாகும். சீனாவின் மகத்தான திரைப்படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது ஜியாங்னான் பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் ஒரு பாழடைந்த குடும்ப வளாகத்தில் கதை நடைபெறுகிறது படம் ஒரு பெண்ணின் குரலில் துவங்குகிறது. பதினெட்டு நிமிஷங்கள் நீளும் காட்சிகள் முழுவதும் யுவென் என்ற இளம்பெண்ணின் குரலில் விவரிக்கபடுகின்றன. போருக்குப் பிந்திய இடிபாடுகள் கொண்ட நகரச் சுவரில் நின்றபடி யுவென் தனது வாழ்வினை விவரிக்கிறாள் கையில் காய்கறிக்கூடையும் கணவனுக்குத் …

சிறிய நகரத்திலிருந்து ஒரு குரல் Read More »

நிழலானை

புதிய சிறுகதை. மார்ச் 13. 2026 அவர்கள் ராய பூபதிக்காகக் காத்திருந்தார்கள். ஐமீன் பங்களா என்று அழைக்கபடும் ராயவிலாசம் மிகப்பெரிய வீடு. ஒரு காலத்தில் அந்த வீட்டில் ஐந்து குடும்பங்கள் ஒன்றாகக் குடியிருந்தார்கள். ராய பூபதியின் அண்ணன் புகழ்மாற பூபதி தற்கொலை செய்து கொண்டு இறந்தபின்பு ஆளுக்கு ஒரு பக்கமாகப் பிரிந்து போய்விட்டார்கள். குடும்பச் சொத்திற்காக நடந்த வழக்கில் பூபதிக்கு இந்த மாளிகையும் கொஞ்சம் நிலமும் மட்டுமே கிடைத்தது. குடும்பத்திற்குச் சொந்தமான கோவிலை நிர்வாகம் செய்யும் பொறுப்பும் …

நிழலானை Read More »

துறவியின் கவலை

மறுபிறவி எடுத்த புத்த துறவியாகக் கருதப்படும் சிறுவனைப் பற்றியது Becoming Who I Was ஆவணப்படம். இந்தக் கொரிய ஆவணப்படத்தை மூன் சாங்-யோங் இயக்கியுள்ளார். துறவிகளுக்கு கவலையிருக்குமா. இப்படத்தில் தன்னை வாழும் புத்தனாக அங்கீகரிக்க வேண்டி ஒரு இளந்துறவி கவலைப்படுகிறான். அந்த அங்கீகாரம் கிடைப்பது எளிதாகயில்லை. துறவியின் கண்ணீர் துளியைப் படத்தில் காணுகிறோம். திபெத்திய பௌத்த மரபில் மறுபிறவிக்கு முக்கிய இடமிருக்கிறது. லாமாக்களை அப்படித் தான் தேர்வு செய்கிறார்கள். இன்றைய தலாய் லாமா கூடத் தனது முற்பிறவி …

துறவியின் கவலை Read More »