முணுமுணுப்புக் கட்டணம்
புதிய சிறுகதை. மே 10 2026 ராஜாராமன் அந்தப் பாடலை மெதுவாக முணுமுணுத்துக் கொண்டார். சில நாட்களாகவே பழைய சினிமா பாடல் ஒன்றின் வரிகள் மனதில் கொப்பளித்துக் கொண்டிருந்தன. குளிக்கும் போதும், நடைப்பயிற்சியின் போதும், சலூனில் காத்திருக்கும் போதும், பால்கனியிலிருந்தபடி காகங்களை வேடிக்கை பார்க்கும் போதும் அந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டார். அப்படி முணுமுணுக்கும் போது அது யாருக்கும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். தண்ணீரின் மேற்பரப்பிற்கு வரும் மீன்குஞ்சினைப் போல எதற்காக அந்தப் பாடல் …
