கடல் காணாத சிறுவர்கள்
1935ல் வடக்கு ஸ்பெயினின் புர்கோஸ் மாகாணத்திலுள்ள சிறிய பள்ளிக்கூடம். அதற்குப் புதிய ஆசிரியராக அந்தோனி பெனாய்கெஸ் வருகை தருகிறார். தனது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் உஙகளில் எத்தனை பேர் கடலைப் பார்த்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். ஒருவரும் கடல் பார்த்ததில்லை. ஆனால் கடலைப் பற்றி நிறையக் கேள்விபட்டிருக்கிறார்கள். கடல் எப்படியிருக்கும் அவர்களாகக் கற்பனை செய்திருக்கிறார்கள். அவற்றை ஆசிரியர் எழுதித் தரச் சொல்கிறார். ஒவ்வொரு மாணவனும் தனது கற்பனையில் கடலைப் பற்றி எழுதித் தருகிறான். அவற்றைத் தொகுத்து சிறிய நூலாக …
