காலையின் சுழிப்பு.
புதிய சிறுகதை. ஜுன் 23. 2026 ஏழாவது செக்டார் முழுவதும் மரங்கள் நிரம்பியிருந்தன. அதுவும் கல்பனா ஸ்டோரை ஒட்டி வடக்காகத் திரும்பும் வீதியில் இரண்டு பக்கமும் மஞ்சள் கொன்றையும் வேம்பும் வாகையும் இருந்தன. பெரும்பாலும் தனிவீடுகள். விடிகாலை வெளிச்சத்தில் அந்த வீதியைப் பார்க்க வரையப்பட்ட சித்திரம் போலத் தோற்றமளிக்கும். அதற்காகவே நந்தகுமார் சூரிய உதயமானவுடன் நடக்க ஆரம்பிப்பார். அரசு எழுதுபொருள் விற்பனைக் கிடங்கில் பணியாற்றும் அவர் சமீபத்திலே அந்தப் பகுதிக்குக் குடிவந்திருந்தார். அவருக்குக் கடுமையான மூட்டுவலி மற்றும் …
