Day: July 13, 2026

கோவை புத்தகத் திருவிழாவில்

ஜுலை 17 முதல் 26 வரை கோவை கொடிசியா மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது, இதில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது. அரங்க எண் 267 மற்றும் 268 ஜுலை 22 முதல் 26 வரை கோவையில் இருப்பேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள். வாசகர்கள் புத்தகத் திருவிழாவில் உள்ள தேசாந்திரி அரங்கில் என்னைச் சந்திக்கலாம். ஜுலை 25 சனிக்கிழமை மாலை “ஒளிரும் வார்த்தைகள்“ என்ற தலைப்பில் புத்தகத் திருவிழாவில் உரையாற்றுகிறேன்

அஞ்சலி

எழுத்தாளர் பூமணி மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். வெக்கை, பிறகு. அஞ்ஞாடி, ரீதி, நொறுங்கல்கள் போன்ற சிறந்த படைப்புகளை தந்த தனித்துவமிக்க படைப்பாளி. நீண்ட கால நண்பர். கோவில்பட்டியில் அவரை பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். பூமணிமகாபாரதம் குறித்த நாவலை எழுதும் முயற்சியில் இருந்த நாட்களில் என்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மக்கள் மொழியில் மகாபாரதம் எழுதப்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்தார். அந்த ஆசையின் வடிவமே அவரது கொம்மை நாவல். பூமணியின் மறைவு துயரமளிக்கிறது.