ஈரோடு புத்தகத் திருவிழாவில்
நேற்று மாலை ஈரோடு புத்தகத் திருவிழாவில் உரையாற்றினேன். அரங்கு நிறைந்திருந்தது. பெரியசாமி தூரன் மற்றும் ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாவல்கள் குறித்தும், காந்தியரான ரொனால்டு டங்கன் பற்றிய அறிமுகத்தையும் உரையில் வழங்கினேன். மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்டாலின் குணசேகரன் சிறப்பாக செய்திருந்தார். நிகழ்வில் விஜயா பதிப்பகம் வேலாயுதம் அவர்கள் சிறந்த பதிப்பாளருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
