எழுத்தாளனின் கனவு.
அமெரிக்க எழுத்தாளரான சிந்தியா ஓசிக்கின் “பொறாமை; அல்லது, அமெரிக்காவில் யித்திஷ்” என்ற குறுநாவல் இரண்டு எழுத்தாளர்களுக்கிடையேயான பொறாமையைப் பேசுகிறது. யித்திஷ் மொழி எழுத்தாளரான ஆஸ்ட்ரோவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் புகழ்பெற்றுவிடுகிறார். அதே மொழியில் எழுதும் கவிஞர் எடெல்ஸ்டீனை யாரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. அத்தோடு யித்திஷ் மொழியில் கவிதை படிப்பவர்களும் வெகுவாகக் குறைந்து வருகிறார்கள். ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலம் உலகின் கவனத்தைப் பெற வேண்டுமா. அல்லது சொந்த மொழியில் எழுதி அந்த வட்டத்திற்குள் மட்டும் புகழ் அடைந்தால் …
