காரைக்குடி வாசகர் வட்ட நிகழ்வு
காரைக்குடி அழகப்பா பல்கலைகழக வளாகத்திலுள்ள திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகம் சார்பில் நடைபெற்ற கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் நிறைந்து பலரும் நின்றபடியே உரையை கேட்டார்கள். திருமதி லட்சுமி வளர்தமிழ் நூலகம் பிரம்மாண்டமாக உருவாக்கபட்டிருக்கிறது. மூன்று தளங்கள். இரண்டு லட்சம் புத்தகங்கள் வைத்துக் கொள்ளும்படியான இடம். வாசிப்பதற்கு ஏற்ற இருக்கைகள். நிறைய நூல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நூலகதின் இணையதளம், மின்நூலாக்கம் மற்றும் அரிய நூல்களை ஆவணப்படுத்தும் நிகழ்வை ப.சிதம்பரம் அவர்கள் துவக்கி வைத்தார். வாசகர் வட்ட …

