புத்தக கண்காட்சி2019

புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள்

தேசாந்திரி அரங்கு எண் 220, 221ல் இன்று நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன்.  அமெரிக்காவிலிருந்து வந்திருந்த  நம்பி நாராயணன் அவர்களைச் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. புத்தகக் கண்காட்சிக்குள் வாகனத்தில் போய் வருவது  ராணுவ முகாம் ஒன்றுக்குள் போய் வருவது போல அத்தனை கஷ்டமாக உள்ளது. எத்தனை தடுப்புகள். எவ்வளவு கெடுபிடிகள். குழந்தைகள் பெரியவர்களை அலையவிடுகிறார்கள். இத்தனை மோசமான வாகன வழித்தடைகள் இதன் முன்பு கண்டதேயில்லை. அதிலும் பாதுகாப்பு பணியில் நியமிக்கபட்டுள்ளவர்கள் பார்வையாளர்களை நடத்துகிற விதம் அராஜகம்.  …

புத்தகக் கண்காட்சி இரண்டாம் நாள் Read More »

புத்தகக் கண்காட்சியில் முதல்நாள்

புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் இரவு 7 மணிக்கு தான் அரங்கில் பார்வையாளர்கள் அனுமதிக்கபட்டார்கள். முதல்வர் வருகையை முன்னிட்டு காவல்துறையின் அதிக கெடுபிடி. பாதுகாப்பு சோதனைகள். ஏதோ சர்வதேச விமான நிலையத்திற்குள் போவது போலிருந்தது. நண்பர் பா.ராகவனின் யதி நாவலை தினமணி பினாகிள் பதிப்பக அரங்கில் வெளியிட்டேன். நண்பர்கள் அகரமுதல்வன். லட்சுமி சரவணக்குமார் ஹரன் பிரசன்னா   போன்றவர்களைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன்.  தேசாந்திரி அரங்கில் இருந்து ஸ்ருதி டிவி சிறிய நேரலை ஒன்றை செய்தது.   நன்றி கபிலன். …

புத்தகக் கண்காட்சியில் முதல்நாள் Read More »