படித்தவை

எஸ். ராமகிருஷ்ணன் தன்னுடைய தொடர்ந்த வாசிப்பில் தான் வாசிக்கும்முக்கியப் புத்தகங்களைப் பற்றி இங்கே பதிவு செய்கிறார்

உருமாறும் புத்தகங்கள்

இத்தாலிய எழுத்தாளர் உம்பர்தோ ஈகோவும் பிரெஞ்சு எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான ஜீன் கிளாட் கேரியரும் சந்தித்துப் புத்தகங்கள் குறித்து உரையாடிதன் தொகுப்பாக வெளிவந்துள்ளது This is Not the End of the Book. இரண்டு அறிவுஜீவிகளின் சந்திப்பும் உரையாடலும் எத்தனை ஆழமானதாக, விரிந்த தளத்தில் இருக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு உதாரணம். இருவரது பேச்சின் பொதுவிஷயமாக அமைத்திருப்பது நூலகமும் அரிய நூல்களும். இருவருமே முதன்முதலாக அச்சு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட 1500 காலகட்டத்தைச் சேர்ந்த அரிய …

உருமாறும் புத்தகங்கள் Read More »

சுதந்திர எழுச்சி

ராமநாதபுரம் ஜில்லாவில் 1942ல் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியை அன்றைய ஆங்கிலேய அரசு எப்படி ஒடுக்கியது என்பதைப் பற்றிய சிறுநூல் ஒன்றை வாசித்தேன். ஏ.வி.திருப்பதிரெட்டியார் என்ற தியாகி இதை எழுதி வெளியிட்டிருக்கிறார். இப் புத்தகத்தைப் பிரிட்டீஷ் அரசு தடைசெய்திருக்கிறது அதிலிருந்து சில பகுதிகள் தேசதலைவர்களைக் கைது செய்த செய்தி 1942 ஆகஸ்ட் 9ம் தேதி ரேடியோ மூலம் அறிவிக்கபட்டது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை அடைத்தார்கள். தொழிலாளர்களுக்கும் வேலைக்குப் போகவில்லை. பள்ளி மாணவர்கள் கூடப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எங்கும் …

சுதந்திர எழுச்சி Read More »

வாழ்வின் சில உன்னதங்கள்

பழைய புத்தகக் கடைகளுக்கும் எனக்குமான தொடர்பு முப்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்டது, எந்த ஊருக்குப் போனாலும் அங்கே பழைய புத்தகக் கடை இருக்கிறதா எனத் தேடுவது எனது வழக்கம், அப்படித் தேடி நிறையப் பொக்கிஷங்களை வாங்கியிருக்கிறேன், பழைய புத்தகங்களை விற்பவர்கள் தனிரகத்தை  சேர்ந்தவர்கள், அவர்களின் மனப்போக்கினை நாம் முடிவு செய்யவே முடியாது, சில வேளைகளில் ஐம்பது பக்க அளவுள்ள புத்தகத்திற்கு இருநூறு கேட்பார்கள், சில நேரம் ஆயிரம் பக்க நூலை பத்து ரூபாய்க்குத் தந்துவிடுவார்கள், நன்றாக சிரித்துப் பேசுவார்கள், …

வாழ்வின் சில உன்னதங்கள் Read More »

தேநீர்கலை

ஒககூரா எழுதிய ஜப்பானிய நூலான The Book of tea யை வாசித்துக் கொண்டிருந்தேன், தேநீரைப்பற்றி எவ்வளவு நுட்பமாக, கவித்துவமாக, அற்புதமாக எழுதியிருக்கிறார் என்ற வியப்பு அடங்கவேயில்லை, கவிதை நூல்களை வாசிப்பதைப் போல சொல் சொல்லாக ருசித்து வாசிக்க வேண்டிய புத்தகமிது புத்தகத்தை வாசிக்க வாசிக்க உடனே டீக்குடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது, ஜப்பானியர்கள் டீக்குடிப்பதை மகத்தான தியானம் என்கிறார்கள், டீ தயாரிப்பதும், பரிமாறப்படுவதும் கலைவெளிப்பாடாகும், எனது வெளிநாட்டுப் பயணத்தில் ஜப்பானிய தேநீர்கடைகளில் தேநீர் குடித்திருக்கிறேன், உண்மையில் …

தேநீர்கலை Read More »

ஒவியன் வாங்ஃபோ

மார்கெரித் யூர்ஸ்னார் (Marguerite Yourcenar) நவீன பிரெஞ்ச் இலக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். இவரது சிறுகதைகளின் தொகுப்பு கீழை நாட்டுக்கதைகள் என்ற பெயரில் க்ரியா வெளியீடாக தமிழில் வெளியாகி உள்ளது. யூர்ஸ்னார் பிரெஞ்ச் கலை இலக்கிய அகாதமியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முதல் பெண் எழுத்தாளர். முக்கிய நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், இவரது எழுத்துகள் குறித்து இன்றளவும் தொடர்ந்து சர்சைகள் இருந்து வருகின்றன தொன்மங்களையும் பழங்கதைகளையும் கொண்டு உருவாக்கபடும் இவரது நவீன சிறுகதைகள் கதை சொல்லும் …

ஒவியன் வாங்ஃபோ Read More »

வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை

‘வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை’ என்ற பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதை நூல் சமீபத்தில் வெளியான புத்தகங்களில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று, காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது, சீனாவின் மரபு இலக்கியக் கவிதைகள் நேரடியாக சீன மொழியில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை, ஐரோப்பிய இலக்கியங்கள், ருஷ்ய இலக்கியங்கள் அறிமுகமான அளவிற்கு தமிழில் சீன இலக்கியங்கள் அறிமுகமானதில்லை, லூசுன் சிறுகதைகள், லாவோட்சூவின் தாவோ மொழியாக்கம், கன்ப்யூசியஸின் தத்துவங்கள், இளைஞன் ஏர்கையின் திருமணம். பெருஞ்சுவருக்குப் பின்னே. மிதந்திடும் …

வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை Read More »

பியர் பூர்தியு

பியர் பூர்தியு (Pierre Bourdieu) பிரெஞ்சின் முக்கியமான சமூகவியல் சிந்தனையாளர்,  தொலைக்காட்சியின் செயல்பாட்டின் பின்னுள்ள அரசியலை, பார்வையாளனின் உளவியலை, பொறுப்புணர்வைக் குறித்து எழுதியுள்ள  தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம் என்ற புத்தகம் மிக முக்கியமான ஒன்று, இந்திய மொழிகளில் தமிழில் மட்டும் தான் இந்த நூல் வெளியாகி உள்ளது, பிரெஞ்சில் இருந்து நேரடியாக இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் வெ.ஸ்ரீராம், க்ரியா பதிப்பகம் 2004ல் வெளியிட்டுள்ளது, சராசரியாக ஒரு பார்வையாளன் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து மணி நேரங்களாவது தொலைக்காட்சி …

பியர் பூர்தியு Read More »

ரயிலேறிய கிராமம்

எதிர்பாராமல் வாசிக்க கிடைக்கும் நல்லபுத்தகம் மனதை மிகுந்த உற்சாகம் கொள்ள வைத்துவிடும்,  டெல்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் தற்செயலாக வாங்கிய THIRD CLASS TICKET என்ற Heather Wood ன் புத்தகத்தை வாசித்து முடித்தபோது இத்தனை நாள் இதை எப்படித் தவறவிட்டிருந்தேன், அற்புதமான புத்தகம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. இது ஒரு உண்மைச் சம்பவம் என்பது கூடுதலாகப் புத்தகத்தின் மீது மதிப்பு வரும்படியாக செய்திருந்தது, கடந்த இரண்டு நாட்களாகவே இதைப்பற்றி சந்திக்க வரும் நண்பர்கள் பலருடன் பேசிக் …

ரயிலேறிய கிராமம் Read More »

படித்ததும் பார்த்ததும்

What I Talk About When I Talk About Running என்ற ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமியின் புத்தகம் அவரது ஒட்டப்பந்தய அனுபவங்களை விவரிக்கிறது, முராகமி மராத்தன் ஒட்டத்தில் ஈடுபாடு கொண்டவர், தனது மத்திய வயதில் ஒட்டப்பந்தயங்களில் ஆர்வமாகிய முராகமி அதை ஒரு விளையாட்டு என்பதை தாண்டிய ஆன்மீக அனுபவமாக விவரிக்கிறார், ஒட்டப்பந்தயத்தில் ஒருவன் அடையும் வெற்றி என்பது அவன் எவ்வளவு நிமிசங்களுக்கு ஒடி வெற்று பெறுகிறான் என்பது மட்டுமில்லை, மனிதர்களின் உடல் எவ்வளவு வேகமாக …

படித்ததும் பார்த்ததும் Read More »

ஒநாய்கள் காத்திருக்கின்றன

உலக இலக்கியத்தின் போக்கினை ஒவ்வொரு பத்தாண்டுகாலமும் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகை திசைமாற்றம் செய்கிறது. ஆப்ரிக்க இலக்கியங்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள், அமெரிக்காவின் நான்லீனியர் எழுத்து, பின்நவீனத்துவக் கதையாடல் என்று மாறிவந்த சூழலில் இரண்டாயிரத்துக்கு பிறகான இலக்கியப் போக்கினை மாற்றம் கொள்ளச் செய்திருப்பது ஆசியாவின் சமகால இலக்கியங்களே. குறிப்பாக சீனா, ஜப்பான், லெபனான், கொரியா, இந்தியா, துருக்கி, இஸ்ரேல், கம்போடியா,  ஆர்மீனியா என்று ஒவ்வொரு தேசமும் தனக்கான தனித்துவமான இலக்கியப் பங்களிப்பையும் முன்னில்லாத புதிய கதைசொல்லும் முறைகள், …

ஒநாய்கள் காத்திருக்கின்றன Read More »