சுதந்திர எழுச்சி
ராமநாதபுரம் ஜில்லாவில் 1942ல் ஏற்பட்ட சுதந்திர எழுச்சியை அன்றைய ஆங்கிலேய அரசு எப்படி ஒடுக்கியது என்பதைப் பற்றிய சிறுநூல் ஒன்றை வாசித்தேன். ஏ.வி.திருப்பதிரெட்டியார் என்ற தியாகி இதை எழுதி வெளியிட்டிருக்கிறார். இப் புத்தகத்தைப் பிரிட்டீஷ் அரசு தடைசெய்திருக்கிறது அதிலிருந்து சில பகுதிகள் தேசதலைவர்களைக் கைது செய்த செய்தி 1942 ஆகஸ்ட் 9ம் தேதி ரேடியோ மூலம் அறிவிக்கபட்டது. இதைத் தொடர்ந்து வியாபாரிகள் கடைகளை அடைத்தார்கள். தொழிலாளர்களுக்கும் வேலைக்குப் போகவில்லை. பள்ளி மாணவர்கள் கூடப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். எங்கும் …