அறிவிப்பு

Katha Vilasam: The Story Within

எனது கதாவிலாசம் கட்டுரைத் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது. மொழிபெயர்ப்பாளர்கள் பி.சி. ராமகிருஷ்ணா மற்றும் மாலினி சேஷாத்ரி. Katha Vilasam: The Story Within offers a path-breaking series of 50 articles by S. Ramakrishnan, published over the course of two years in the widely read Tamil magazine Ananda Vikatan, to a wider reading public through translation into English. The writing style is …

Katha Vilasam: The Story Within Read More »

காந்தி தொகை நூல்

Mahatma Gandhi in Indian Language Series என்றொரு வரிசையை காந்தி பவுண்டேஷன் வெளியிட்டுள்ளார்கள். அதில் தமிழில் காந்தி பற்றி வெளியான முக்கியப் படைப்புகளை எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் தொகுத்துள்ளார். த.கண்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். இந்தத் தொகுப்பில் எனது படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. சுனில் கிருஷ்ணன் மற்றும் த. கண்ணனுக்கு மனம் நிறைந்த நன்றி.

சலூன் நூலகம் நடத்தும் விழா.

பொன்மாரியப்பன் தூத்துக்குடியிலுள்ள தனது சலூனில் நூலகம் அமைந்து அனைவரின் பாராட்டினையும் பெற்றவர். ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் பொன்மாரியப்பனுடன் உரையாடி நூலகம் நடத்தி வருவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 500க்கும் மேற்பட்ட சிறந்த புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை சலூனில் வைத்திருக்கிறார். பொன்மாரியப்பன் எனது தீவிர வாசகர். இவரது சலூனில் எனது இலக்கிய உரைகளைத் தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வருகிறார். தற்போது புத்தக வாசிப்பை வளர்க்கும் விதமாக இலக்கிய வாசகர் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார். …

சலூன் நூலகம் நடத்தும் விழா. Read More »

தஸ்தாயெவ்ஸ்கியின் ஐந்து யானைகள்

A translation is not a caterpillar crawling from left to right, a translation always emerges from the whole. Do you understand? One has to make the text entirely one’s own. The Germans say “internalised” Svetlana Geier ரஷ்ய இலக்கியங்களை ஜெர்மனியில் மொழிபெயர்த்தவர் ஸ்வெட்லானா கேயர். தஸ்தாயெவ்ஸ்கியின் ஐந்து பெரிய நாவல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். இதற்காக 20 ஆண்டுகள் செலவிட்டிருக்கிறார். அந்த மொழிபெயர்ப்புகளை “ஐந்து …

தஸ்தாயெவ்ஸ்கியின் ஐந்து யானைகள் Read More »

கவிதையின் நிலவெளி

கவிஞர் Robert Bly தினமும் காலையில் ஒரு கவிதை எழுதும் பழக்கம் கொண்டிருக்கிறார். அவை தொகுக்கப்பட்டு Morning Poems என வெளியிடப்பட்டிருக்கின்றன இந்த நேர்காணலில் தனது கவிதைகள் மற்றும் கவிதையின் ஆதார விஷயங்கள் பற்றிச் சிறப்பாகப் பேசியிருக்கிறார்.

இருநூறு ஆண்டுகாலக் கதை

“யாமம்” வாசிப்பனுபவம் இர. மௌலிதரன். ஒரு ஊரின் வரைபடம் வேண்டும் என்றால் அந்த ஊரின் எழுத்தாளனை தான் நாம் கேட்க வேண்டும். ஏனெனில் அவன் ஒருவன் மட்டுமே அந்த ஊரை அங்குலம் அங்குலமாக அளந்தும், அனுபவித்தும், தனக்குள் ஆழமாகப் புதைத்து வைத்திருப்பான். இப்படி ஒரு கிராமமோ, ஒரு நகரமும் ஒருவன் நினைவில் இருந்தால் அது சாத்தியம். ஆனால் அதுவே ஒரு நாடு முழுவதும் ஒருவன் இப்படித் தனக்குள் வரைபடமாக வரைந்து வைத்திருக்கிறான் என்றால் அது அசாதாரணம். அப்படி …

இருநூறு ஆண்டுகாலக் கதை Read More »

அஞ்சலி

தமிழப்பெருந்தகை அய்யா நெல்லை கண்ணன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் குடும்ப உறவாக, என் மேல் பேரன்பு கொண்டவராய் விளங்கிய அய்யாவின் மறைவு பெருந்துயரத்தில் ஆழ்த்துகிறது.

நகுலனைக் கொண்டாடுவோம்

. நகுலன் நூற்றாண்டினைக் கொண்டாடும் விதமாக அருவம் உருவம் நகுலன் 100 என்ற நூற்தொகுப்பு ஒன்றைக் கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் கொண்டு வந்திருக்கிறார். நூல்வனம் இதனை வெளியிட்டுள்ளது. தொகுக்கப்படாத நகுலனின் சிறுகதைகள், நகுலன் எழுதிய ஆங்கிலக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு, அவரது ஆங்கிலச் சிறுகதையின் மொழியாக்கம், நகுலனின் வாக்குமூலத்தைச் சித்திரக் கதையாக வெளியிட்டிருப்பது, நகுலனின் பன்முகப் பங்களிப்பை மதிப்பிடும் சிறந்த கட்டுரைகள் என அரிய தொகுப்பாக வெளியாகியுள்ளது. நகுலனின் நூற்றாண்டினை இதைவிடச் சிறப்பாகக் கொண்டாட முடியாது. இந்நூல் நகுலனை …

நகுலனைக் கொண்டாடுவோம் Read More »