அறிவிப்பு

ஜாக் லண்டன் நாவல்

ஜாக் லண்டனின் ஒயிட் ஃபேங் நாவலை டாக்டர் சந்திரமௌலி தமிழாக்கம் செய்திருக்கிறார். தேசாந்திரி பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது ஜுலை 24 ஞாயிறு மாலை நான்கு மணிக்கு கோவை புத்தகக் கண்காட்சியின் தேசாந்திரி அரங்கில் இந்த நூல் வெளியிடப்படுகிறது. புதுமைப்பித்தன் மொழியாக்கம் செய்த அலெக்சாண்டர் குப்ரினின் யாமா நாவலையும், ஹெஸ்ஸேயின் சித்தார்த்த நாவலையும் தேசாந்திரி பதிப்பகம் பதிப்பித்துள்ளது. எனது சினிமா கட்டுரைகளின் தொகுப்பான சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் மறுபதிப்பினை தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கோவை புத்தகக் கண்காட்சியில்

கோவை புத்தகக் கண்காட்சி கொடீசியா அரங்கில் ஜுலை 22 முதல் 31 வரை நடைபெறுகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சியில் தேசாந்திரி பதிப்பகம் அரங்கு அமைத்துள்ளது அரங்கு எண் 136, ஜுலை 24 ஞாயிறு கோவை வருகிறேன். மாலை 4 மணி முதல் தேசாந்திரி அரங்கில் இருப்பேன். விருப்பமான நண்பர்கள். வாசகர்கள் சந்திக்கலாம் ஜுலை 25 திங்கள் மாலை ஆறு மணிக்கு “ஏன் நாவல்கள் படிக்க வேண்டும்“ என்ற தலைப்பில் புத்தகக் கண்காட்சி அரங்கில் உரையாற்றுகிறேன் திங்கள் கிழமையும் …

கோவை புத்தகக் கண்காட்சியில் Read More »

நேர் நோக்கும் கண்கள்.

இனிமையான பாடல். சிறப்பான காட்சிகள். கறுப்பு வெள்ளைக் காட்சிகள் மிகுந்த நெருக்கம் தருகின்றன. இந்தப் பாடலுக்குள் எத்தனையோ சொல்லப்படாத கதைகள் மறைந்திருப்பதை உணர முடிகிறது. Tony Allen – Go Back (feat. Damon Albarn) [Official Music Video] directed by Bernard Benant

கறுப்பும் வெள்ளையுமான வாழ்க்கை

– தமிழ்மதி நிமித்தம் நாவல் குறித்த விமர்சனம். தேவராஜ் எனும் சிறுவனுக்குத் தனது ஒன்பது வயதில் குளிர் காய்ச்சல் வந்ததில் இருந்து காது கேட்காது. அதனைத் தொடர்ந்து அவன் அனுபவிக்கும் தொடர் புறக்கணிப்புகளும், துரத்தும் அவமானங்களுமாக நித்தம் நித்தம் பெருங்கசப்பை அருந்தும் தேவராஜின் கதையே நிமித்தம். தன்னைச் சரிவரப் புரிந்து கொள்ளாத குடும்பம், தோசைக்கரண்டியால் அடிக்கும் தந்தை, இவர் தனது மூத்த மகனுக்கு மட்டும் பால்கோவா வாங்கி வருவார். காது கேட்க வேண்டி கோவில் கோவிலாக அலையும் …

கறுப்பும் வெள்ளையுமான வாழ்க்கை Read More »

அறியப்படாத வரலாறு

மறைக்கப்பட்ட இந்தியா – நூல் அறிமுகம் – சசிகலா ரகுராமன் “மகாத்மா” என்றால் காந்தியடிகள் மட்டுமே என நினைத்துக் கொண்டிருப்பவரா நீங்கள் ? இந்திய மன்னர்கள் கோட்டைகளையும் கோவில்களையும் கட்ட மட்டுமே ஆதரவு அளித்தார்கள் என்ற உங்களுடைய எண்ணம் சரிதானா ? வெள்ளைக்காரர்கள் வருகைதான் இந்தியாவில் அறிவியல் சிந்தனையை அறிமுகப்படுத்தியது என நினைக்கிறீர்களா ? எனில், நீங்கள் அவசியம் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய ‘மறைக்கப்பட்ட இந்தியா’ என்ற புத்தகத்தைப் படிக்க வேண்டும். இந்தியாவின் புதைக்கப்பட்ட அருமை …

அறியப்படாத வரலாறு Read More »

நிலோஃபர். நிஜாம்

துருக்கி அரசகுமாரி நிலோஃபர். நிஜாம் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பார்த்தேன். உடனடியாக அசோகமித்ரனின் நினைவு தான் வந்த்து. இந்த இளவரசியைப் பற்றி அவர் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். சிறிய பதிவு. ஆனால் அதற்குள் பெரிய கதை மறைந்திருக்கிறது நடைவெளிப் பயணம் நூலில் அசோகமித்ரன் நான் சிறுவனாக இருந்தபோது குடிசையிலிருந்து அரண்மனை வரை புகைப்படங்கள் இல்லாத வீடே இருக்காது. அன்று சுருள் ஃபிலிம் வரவில்லை. எல்லாம் ‘பிளேட்’ புகைப்படங்கள். ஆதலால் படத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மிகத் தெளிவாக …

நிலோஃபர். நிஜாம் Read More »

மலையாளத்தில்

எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவல் மலையாளத்தில் வெளியாகிறது. இதனை மாத்ருபூமி பதிப்பகம் வெளியிடுகிறது

மறைமலையடிகள் நாட்குறிப்புகள்

மறைமலையடிகள் 1898 முதல் 1950 வரையில் எழுதிய நாட்குறிப்புகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். இணையத்தில் இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் நூலின் தொகுப்பாசிரியர் மறை. திருநாவுக்கரசு, மறை. தி. ஆலங்காடன். தி. தாயுமானவன். இந்த நூலை ஆ.இரா. வேங்கடாசலபதி பதிப்பித்திருக்கிறார் தனித்தமிழ் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகள் இளமைப்பருவம் முதல் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார். ஆங்கிலத்தில் நல்ல புலமை கொண்டவர் என்பதால் தனது நாட்குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக உள்ள இந்த நாட்குறிப்புகளிலிருந்து தேர்வு …

மறைமலையடிகள் நாட்குறிப்புகள் Read More »