Day: May 3, 2012

கல்விக்கு உதவுங்கள்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முன்மாதிரியான ஒன்று இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இந்த சாதனையை நிகழ்த்தியவர் பள்ளி ஆசிரியர் பிராங்கிளின், இது பற்றி இணையத்தில் நான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். தற்போது இப்பள்ளி விரிவுபடுத்தபடும் பணி நடைபெறுகிறது, அதற்கான நிதி உதவி கேட்டு பிராங்கிளின் ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார் நண்பர்கள் அனைவரும் அவசியம் இந்தப் பணிக்கு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன் •• மணல் சுமக்கும் அணில்களைத் தேடி… அன்புடையீர், வணக்கம். இராமம்பாளையம் பள்ளியிலிருந்து தங்களைத்தொடர்பு கொள்வதில் …

கல்விக்கு உதவுங்கள் Read More »

இரவிற்கு எல்லாம் தெரியும்

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிப்படையால் படுகொலை செய்யப்பட்ட யூதர்கள் குறித்து நிறைய ஆவணங்கள், புனைகதைகள், நாடகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன, அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது ஆனி பிராங்கின் நாட்குறிப்புகள், (The Diary of Anne Frank) பதிமூன்று வயதான யூதச்சிறுமி எழுதிய இந்த நாட்குறிப்புகள் வரலாற்றின் முக்கிய ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, ஆனி பிராங்க் டச்சு மொழியில் இந்த டயரியை எழுதியிருக்கிறாள் ஜுன் 14 1942ல் டயரி துவங்குகிறது, முதல் 22 நாட்கள் அவர்களின் இயல்பு வாழ்க்கையை …

இரவிற்கு எல்லாம் தெரியும் Read More »

வானெங்கும் பறவைகள்

கடந்த ஐந்து நாட்களாக திருச்சி எஸ்ஆர்வி பள்ளி நடத்திய மாணவர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொணடேன். இந்த முகாமில் எழுத்தாளர் வண்ணதாசன், எழுத்தாளர் தமிழ்செல்வன், பத்திரிக்கையாளர் ஞாநி, எழுத்தாளர் பவா.செல்லத்துரை, எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், கவிஞர் மனுஷ்யபுத்திரன், சரஸ்வதி மகால் நூலகர் பெருமாள், புகைப்படக்கலைஞர் வைட் ஆங்கிள் ரவிசங்கர், நாடக கலைஞர் பார்த்திபராஜா, ஒவியர் டிராட்ஸ்கி மருது, நடிகை ரோகிணி, பத்திரிக்கையாளர் கவின்மலர், கவிதா முரளிதரன், பெண்ணியசிந்தனையாளர் பத்மாவதி, விஜயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். பெரிய இலக்கியவிழா …

வானெங்கும் பறவைகள் Read More »