வரையப்பட்ட கனிகள்
செசான் வரைந்த ஆப்பிள்களும் ஆரஞ்சு பழங்களும் ஓவியத்தைக் காணும் போது என்ன நடக்கிறது. நாம் காணுவது பழங்களை மட்டுமல்ல. மௌனத்தை. அதுவும் சிவப்பு வண்ண உருவம் கொண்ட மௌனத்தை. உண்ணுவதற்கான பொருள் என்பதிலிருந்து விலகி பழம் அழகான வடிவத்துடன், ஒளிர்தலுடன். அசையாத நிலையில் இருப்பதைக் காண முடிகிறது. ஆப்பிள்களுக்குள் சிறியது பெரியது என வேறுபாடு இருந்தாலும் அவை ஒன்றிணைந்துள்ள விதத்தில் சமநிலை காணப்படுகிறது. மனிதன் உருவாக்கிய குவளையும் இயற்கையின் பரிசான பழங்களைப் போலவே சித்தரிக்கபடுகிறது. குவளைக்கும் பழங்களுக்கும் …
