ஓவியம் வரையப்பட்ட கடிதம்.
ஹெர்மன் ஹெஸ்ஸேயிற்கும் தாமஸ் மானிற்கும் இடையில் எழுதப்பட்ட கடிதங்களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். ஹெஸ்ஸே ஒரு ஓவியர் என்பதால் அவரது கடிதங்களின் ஒரங்களிலும் தலைப்பிலும் தான் விரும்பியதை வரைந்து அனுப்பியிருக்கிறார். அழகான நீர்வண்ண ஓவியங்களுடன் எழுதப்பட்ட கடிதங்களை மான் வியந்து பாராட்டுகிறார். அவர்களுக்குள் இருந்த நட்புறவும் பரஸ்பர மரியாதையும் ஒருவருக்கொருவர் உதவிய விதமும் கடிதங்களில் வெளிப்படுகிறது. ஹெர்மன் ஹெஸ்ஸேயிற்குப் பல்வேறு விதங்களில் தாமஸ் மான் உதவி செய்திருக்கிறார். அது போலவே மானின் கட்டுரைகளை ஹெஸ்ஸேயும் அவரது மனைவியும் சேர்ந்து …
