admin

விநோதமான மனிதர்களின் உலகம்

  இர.மௌலிதரன் 25 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து இலக்கிய உலகில் கதைகள் எழுதும் ஒரு எழுத்தாளருக்கு இந்த 2025-லும் எழுதுவதற்கு என்ன இருந்துவிட போகிறது ? என்ற கேள்வி கொடுத்த ஆர்வத்தில் தான் இந்த தொகுப்பை தேர்ந்தெடுத்தேன் . ஒவ்வொரு முறையும் ஒரு அனுபவமிக்க எழுத்தாளரின் சமகால படைப்பை வாசிக்கும்பொழுது அ .முத்துலிங்கம் அவர்களின் ஒரு வரி எங்கிருந்தாலும் வந்து என் மனதில் அமர்ந்துவிடும் . 100 நாற்காலிகளை செய்த ஒரு தச்சனுக்கு 101 ஆவது நாற்காலி செய்வது …

விநோதமான மனிதர்களின் உலகம் Read More »

பறக்கத் தெரிந்த யானை

புதிய சிறுகதை. நவம்பர் 6. 2025 திவான் பூந்தானம் அந்தக் கடிதத்தைத் திரும்பவும் படித்துப் பார்த்தார். கொச்சியிருந்து ரெசிடெண்ட் வில்லியம் டக்ள்ஸ் அதனை அனுப்பியிருந்தார். அதில் இந்தியாவின் பேரரசியும் இங்கிலாந்தின் மகாராணியுமான விக்டோரியா கால்மூட்டு வீக்கத்தால் அதிகம் வலியை அனுபவித்து வருவதாகவும் அதற்கு வைத்தியம் செய்வதற்காக நெல்லியடி ஆசான் மாடப்பனை உடனே லண்டன் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூடவே. தேவையான பச்சிலைகள் மற்றும் உதவியாளர்களை அனுப்ப வேண்டும். அவசரக் காரியம். என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நெல்லியடி எங்கேயிருக்கிறது …

பறக்கத் தெரிந்த யானை Read More »

சென்னை : வரலாறும் வாழ்க்கையும்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் சார்பில் துவங்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்கா சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைந்துள்ளது. நவம்பர் 7 வெள்ளிக்கிழமை மாலை ஐந்தரை மணிக்குப் புத்தகப் பூங்கா அரங்கில் சென்னை : வரலாறும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறேன். இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

விநோத ஒப்பந்தம்.

புகழ்பெற்ற டேனிஷ் எழுத்தாளர் ஈசக் டினேசன் (கரேன் ப்ளிக்சன்) வாழ்வினை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட திரைப்படம் The Pact. Bille August இதனை இயக்கியுள்ளார். இவரது Out of Africa புகழ்பெற்ற நாவலாகும். இப்படம் இரண்டு எழுத்தாளர்களுக்குள் ஏற்படும் நட்பு மற்றும் விநோத ஒப்பந்தம் பற்றியது. 1948ல் கதை நடக்கிறது. ஆப்ரிக்காவில் வாழ்ந்து திரும்பிய கரேன் தற்போது டென்மார்க்கில் வாழ்கிறார். வசதியான வாழ்க்கை. பெரிய மாளிகை. பணியாளர்கள். அவரது வீடு இலக்கியச் சந்திப்புகள் நடக்கும் மையம் போலச் …

விநோத ஒப்பந்தம். Read More »

வான்கோவை வரைதல்

துருக்கிய கலைஞர் கரிப் அய் வான்கோவின் புகழ்பெற்ற ஓவியமான விண்மீன்கள் நிறைந்த இரவைத் தண்ணீரில் வரைகிறார். நம் கண் முன்னே மாயம் உருவாகிறது.இது “Ebru” என்று அழைக்கப்படும் ஒருவகை ஒட்டோமான் கலை, துருக்கியில் மிகவும் பரவலாக உள்ளது என்கிறார்கள் Van Gogh on Dark Water

மற்ற பாதி

புதிய சிறுகதை கையில் மாத்திரைகளை வைத்துக் கொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார் ரத்னசபாபதி. மறதி வந்துவிட்டது. மாத்திரை சாப்பிட்டோமா இல்லையா என்று சில நாட்கள் குழப்பம் வந்துவிடுகிறது. பெரும்பாலும் அந்தக் குழப்பம் இரவு நேரம் தான் ஏற்படுகிறது. இதனால் ஒரு நாள் இரண்டுமுறை மாத்திரை சாப்பிட்டு விட்டார். மறுநாள் முழுவதும் தலைசுற்றலாக இருந்தது. ஆகவே தேதி நேரத்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பழக்கத்தைத் துவங்கினார். மாத்திரை போட்டோமா எனச் சந்தேகம் வந்தால் இந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் …

மற்ற பாதி Read More »

மருந்தாகும் பாடல்கள்

கறுப்பு வெள்ளைப் பாடல்களின் மீதான பித்து என்பது வெறும் ஏக்கம் மட்டுமில்லை. அது ஒரு நினைவுமீட்சி. யூடியூப்பில் உள்ள பழைய பாடல்களுக்குக் கீழே பின்னூட்டம் எழுதியவர்களைத் தேடிப் படிப்பது சுவாரஸ்யமானது. பலரும் உணர்ச்சிப் பெருக்குடன் கண்ணீர் மல்கப் பாடலை ரசித்திருக்கிறார்கள். சிலர் அந்தப் பாடல் இடம்பெற்ற படம் வெளியான நாள் யாருடன் எங்கே பார்த்தோம் என்பதைத் துல்லியமாக எழுதியிருக்கிறார்கள். வியப்பூட்டும் சில பதிவுகளும் உண்டு. இந்தப் பாடல்கள் லட்சக்கணக்கான முறை கேட்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நபர் …

மருந்தாகும் பாடல்கள் Read More »

இருள் இனிது

எனது மகன் ஹரி பிரசாத் இயக்கியுள்ள புதிய குறும்படம் இருள் இனிது. எனது சிறுகதை ஒன்றை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கபட்டுள்ளது. பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருது பெற்றுள்ள இந்தக் குறும்படத்தின் அறிமுகவிழா நவம்பரில் நடைபெறவுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை மீடியா சயின்ஸ் படித்துள்ள ஹரி பிரசாத் NFDC யில் திரைப்பட படத்தொகுப்பு பயின்றுள்ளான். தற்போது தேசாந்திரி யூடியூப் சேனலை நடத்தி வருவதுடன். White Knights என்ற டிஜிட்டில் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றையும் …

இருள் இனிது Read More »

கல்பனாவின் வியாழக்கிழமை

புதிய சிறுகதை. சதாசிவம் வீட்டின் முன்பு வந்து கல்பனா நின்றபோது மணி நாலு இருபத்தியாறு ஆகியிருந்தது. அவளாகத் தேர்வு செய்து எடுத்து வந்திருந்த வுதரிங் ஹைட்ஸ் நாவலை கையில் வைத்திருந்தாள். நிச்சயம் அவருக்குப் பிடிக்கக் கூடும் என்று தோன்றியது. சதாசிவம் வீட்டினை சேர்மன் ஹவுஸ் என்று அழைத்தார்கள். சதாசிவத்தின் அப்பா நகராட்சியின் சேர்மனாக இருந்தவர். அவர் யானை சின்னத்தில் நின்று தேர்தலில் வெற்றிபெற்றிருந்தார். அதன் நினைவாக வீட்டுத் தோட்டத்தில் யானை சிலை செய்து வைத்திருந்தார்கள். வீட்டைச் சுற்றிலும் …

கல்பனாவின் வியாழக்கிழமை Read More »