admin

நைல் நதி சாட்சிகா

எனது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் தெலுங்கு மொழியாக்கம் வெளியாகியுள்ளது. நைல் நதி சாட்சிகா என்ற இந்த நூலை மொழிபெயர்ப்பு செய்திருப்பவர் பாலாஜி. இவர் சாகித்ய அகாதமிக்காக எனது சஞ்சாரம் நாவலையும் தெலுங்கில் மொழியாக்கம் செய்து வருகிறார் Nylu nadhi sakshiga (Short Stories)S. Ramakrishnan’s tamil stories translated by Gillella Balaji விலை ரூ 120 தொடர்புக்கு Desanthiri Pathippagam : D1 ,Gangai apartments, 80 Feet Road, Sathya Garden, Saligramam, Chennai, Tamil …

நைல் நதி சாட்சிகா Read More »

கறை படிந்த சட்டை

.Beijing Bicycle படத்தின் மூலம் சர்வதேச கவனத்தைப் பெற்ற இயக்குநர் வாங் சியாஷுவாய் உருவாக்கியுள்ள புதிய படம் 11 Flowers. பாடகரும் ஓவியருமான ஒருவரின் பதினோறு வயது மகனைப் பற்றியது. ஹானின் தந்தை  ஓவியம் வரைவதற்காகப் பூக்குவளையில்  மலர்களை அடுக்குவதில் படம் துவங்குகிறது. குறிப்பிட்ட கோணத்தில் மலர்களை எப்படி அவதானிப்பது என்பதை ஆரம்பக் காட்சியிலே மகனுக்குக் கற்றுத் தருகிறார் வாங் ஹானின் தந்தை. கலாச்சாரப் புரட்சிக்குப் பின்பு குய்ஷோ மாகாணத்தில் நடக்கும் கதையிது. பள்ளியில் படிக்கும் வாங் …

கறை படிந்த சட்டை Read More »

அட்டன்பரோவின் காந்தி

காந்தி படத்தை ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கியபோது படப்பிடிப்பில் என்ன நடந்தது. எவ்வாறு அந்தப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறித்த ஆவணப்படம் ஒன்றைக் கண்டேன். ஒளி மற்றும் ஒலியின் தரம் மோசமாக இருந்த போதும் காந்தி திரைப்படம் குறித்த அரிய ஆவணப்பதிவு என்பதால் இதனை விரும்பிப் பார்த்தேன். காந்தியிடம் என்னைக் கவர்ந்த விஷயம் அவரது அறிவுத்திறன் மற்றும் நம்பிக்கை . அவர் கொண்டிருந்த லட்சியவாதம் முதன்மையானது. தனது அறிவுத்திறனை அவர் வெளிப்படுத்திய விதமும் அதை எளிய மனிதர்களின் விடுதலைக்காகப் பயன்படுத்திய …

அட்டன்பரோவின் காந்தி Read More »

நாவலின் விதி

எழுத்தாளர் ஐரின் நெமிரோவ்ஸ்கி இரண்டாம் உலகப்போரின் போது ஆஷ்விட்ஷ் முகாமில் கொல்லப்பட்டவர். உக்ரேனிய யூத வம்சாவளியைச் சேர்ந்த இவர் பிரான்சில் வாழ்ந்தவர். பிரெஞ்சு மொழியில் எழுதினார். இவரது Suite française நாவல் அவர் மறைந்து அறுபத்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகளால் கண்டுபிடிக்கப்பட்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மனிதர்களைப் போலவே நாவலின் விதியும் விசித்திரமானதே. எழுதப்பட்ட உடனே எல்லா நாவல்களும் வெளியாவதில்லை. சில நாவல்கள் பதிப்பகத்தாலும். எழுத்தாளரின் விருப்பமின்மை மற்றும் மனச்சோர்வினால் அப்படியே முடங்கிப் …

நாவலின் விதி Read More »

எலியின் சாகசம்

கலை கார்ல்மார்க்ஸ் திருவாரூர். எலியின் பாஸ்வேர்டு நூல் பற்றிய வாசிப்பனுபவம். ••• நூல் : எலியின் பாஸ்வேர்டு ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன் விலை : ரூ.35 பதிப்பகம் : தேசாந்திரி இது குழந்தைகளுக்கான / சிறுவர், சிறுமியர்களுக்கான படைப்பு. தொன்று தொட்டு இயங்கி வரும் உணவுச்சங்கிலியில் பாம்புக்கும் எலிக்குமான பிணைப்பில், எது பிழைக்கும் என்ற கேள்வியில், வலியதே பிழைக்கும் என்பதே விடையாய் உள்ளது. எப்படியும் இறுதியில் வெல்வது பாம்புகளாகவே உள்ளன. உயிர்கள் தோன்றிய காலம் தொட்டே வலியது …

எலியின் சாகசம் Read More »

சிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதிய பூவை என்ற சிறுகதையில் பேரக்கா என்ற ஒரு பெண் வருகிறாள். அவள் ஒரு அநாதை. அண்டி வாழும் அவள் மாடு மேய்க்கிறாள். பாட்டிக்குக் கைகால் பிடித்துவிடுகிறாள். அவளுக்குத் தலைமுடி சரியாக வளரவில்லை என்று மொட்டையடித்துவிடுகிறார்கள். நாலைந்து முறை இப்படிச் செய்தபிறகே அவளுக்குக் கூந்தல் வளருகிறது. அவளது கல்யாண நாளை பற்றியதே கதை. மணப்பெண் என்பதால் அவளை அலங்கரித்துத் தலையில் பூச்சூடுகிறார்கள். இந்தப் பூவாசனை தாங்காமல் பேரக்கா மயங்கிவிடுகிறாள். காரணம் இதுவரை அவள் பூச்சூடி …

சிறிய உண்மைகள். 3 பூவின் மென்மை Read More »

மலையாளத்தில்

மாத்யமம் மலையாள இதழில் எனது பஷீர் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளது. இதனை மொழியாக்கம் செய்திருப்பவர் பொன்மனை வல்சகுமார்.

சிறிய உண்மைகள் 2

பசியின் குரல் பசியைப் பிணி என்கிறது மணிமேகலை. அட்சயபாத்திரத்தைக் கையில் ஏந்தி உலகின் பசிப்பிணியைப் போக்குகிறாள் மணிமேகலை. இப்படி ஒரு கதாபாத்திரமோ, அட்சய பாத்திரமோ இந்தியாவின் வேறு மொழி இலக்கியங்கள் எதிலும் இடம்பெற்றிருக்கிறதா என்று தெரியவில்லை. பசியாற்றுவதைப் அறமாகக் கருதிய தமிழ்ச் சமூகம் பசியால் ஏற்படும் இன்னல்களை. வறுமையால் ஏற்பட்ட பசிக்கொடுமையின் விளைவுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. புறநானூறு படித்தால் பசியின் குரல் தான் மேலோங்கி ஒலிக்கிறது. பசியும் வறுமையும் பற்றிச் சங்க இலக்கியம் ஏராளமாகப் பதிவு …

சிறிய உண்மைகள் 2 Read More »

ஆயிரம் நினைவுகளின் வீடு

சீனாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் பா ஜின் எழுதிய குடும்பம் என்ற நாவல் அலைகள் பதிப்பக வெளியீடாக 1999ல் வெளிவந்துள்ளது. இந்நாவலைத் தமிழாக்கம் செய்திருப்பவர் நாமக்கல் சுப்ரமணியன். சிறந்த மொழியாக்கம். உலகின் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் இந்த நாவல் குறித்துத் தமிழில் அதிகம் விவாதிக்கப்படவில்லை. ஒன்றோ இரண்டோ விமர்சனம் வெளியாகியுள்ளது. ஆழ்ந்து வாசிக்கவும் பேசவும் வேண்டிய முக்கிய நாவலிது. நவீன சீன இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படும் பா ஜின் 1920களில் ஒரு குடும்பத்தில் நடந்த நிகழ்வுகளை வழியாக …

ஆயிரம் நினைவுகளின் வீடு Read More »

சிறிய உண்மைகள்-1

அபுவின் சந்தோஷம். சத்யஜித்ரேயின் அபூர் சன்சார் படத்தில எழுத்தாளராக ஆக விரும்பும் அபு தன் நண்பனிடம் தனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும் போது தஸ்தாயெவ்ஸ்கியின் பெயரைச் சொல்கிறான். அது மூலத்தில் விபூதி பூஷன் எழுதியதா என்று தெரியவில்லை. ஆனால் சத்யஜித் ரேயிற்குத் தஸ்தாயெவ்ஸ்கியைப் பிடிக்கும் என்பதை அவரது நேர்காணலில் தெரிந்து கொள்ள முடிகிறது. புகழ்பெற்ற சினிமா இயக்குநர்கள் பலரும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாசகர்களே. அகிரா குரசேவா நேர்காணல் ஒன்றில் இடியட் நாவலைப் படமாக்கும் போது ஒரு குறிப்பிட்ட …

சிறிய உண்மைகள்-1 Read More »