admin

குற்றமுகங்கள் -19 கட்டைக்கை பரந்தன்

அவனை கட்டைக்கை பரந்தன் என்று அழைத்தார்கள்.  இருபத்திரெண்டு வயதிருக்கும். கற்சிலையைப் போல உறுதியான உடல் கொண்டிருந்தான். அவனது வலது கை அளவில் சிறியது. பிறக்கும் போதே அந்தக் கையின் அளவு அப்படியிருந்தது. எழுதிக் கொண்டிருக்கும் போது பென்சிலின் நுனி உடைந்துவிடுவது போல அவனை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது கடவுள் வைத்திருந்த களிமண் தீர்ந்துவிட்டது என்று வகுப்பு ஆசிரியர் மாணிக்கம் கேலி செய்தார். மாணவர்கள் அதைக் கேட்டு சிரித்தார்கள். அது தான் பரந்தன் பள்ளிக்குச் சென்ற கடைசி நாள். …

குற்றமுகங்கள் -19 கட்டைக்கை பரந்தன் Read More »

குற்றமற்ற மகன்

தி வின்ஸ்லோ பாய் திரைப்படம் 1910களில் நடைபெற்ற உண்மை சம்பவம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற திரைக்கதை ஆசிரியரான டேவிட் மாமெட் இப்படத்தை இயக்கியுள்ளார். டெரன்ஸ் ராட்டிகனின் கிளாசிக் நாடகத்தின் 1999 ரீமேக்காகும். லண்டனின் தெற்கு கென்சிங்டனில் உள்ள வின்ஸ்லோ குடும்பத்தில் நடைபெறுகிறது. ஆர்தர் வின்ஸ்லோ ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி, மிகவும் வசதியானவர். கண்டிப்பானவர். அவரது, மூத்த மகன் ஆக்ஸ்போர்டில் படிக்கிறான் , இளைய மகன் ரோனி ராயல் கடற்படை அகாடமியில் பயிலுகிறான். மகள் …

குற்றமற்ற மகன் Read More »

விருதுநகரில்

ஆகஸ்ட் 3 ஞாயிற்றுகிழமை மாலை விருதுநகரில் நடைபெறும் பேராசிரியர் வினோத்தின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறேன். JCI மற்றும் விருதை விருட்சம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்வு ஸ்ரீ அம்பாள் ராமசாமி புஷ்பமணி அரங்கில் நடைபெறுகிறது. நிகழ்வில் அம்பாள் ஆர் முத்துமணி அவர்கள் தலைமை ஏற்கிறார். தொழிலதிபர் ஆறுமுகச்சாமி மற்றும் தேன்மொழி அவர்கள் நூலினைப் பெற்றுக் கொள்கிறார்கள் கல்வி அதிகாரி ஜான் பாக்கியா, முனைவர் ந. அருள்மொழி நூல் குறித்து உரையாற்றுகிறார்கள். பேராசிரியர் …

விருதுநகரில் Read More »

திரைப்பயணி -3

உலக சினிமாவை அறிமுகப்படுத்தும் காணொளித் தொடர் திரைப்பயணியின் மூன்றாவது பகுதி வெளியாகியுள்ளது

சாய்ந்தாடும் குதிரை

புதிய சிறுகதை. – July25. அவன் வழக்கமாக நடைப்பயிற்சி செல்லும் கிரௌன் தியேட்டர் சாலையில் நிறையப் பழைய மரசாமான்கள், இரும்புப் பொருட்கள் விற்கும் கடைகள் இருந்தன. அந்தக் கடைகளின் வெளியே ஸ்டீல் நாற்காலி, இரும்பு பீரோ. மரக்கதவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறான். வீட்டிலிருந்து வெளியேறியதும் கதவுகள் பற்களை இழந்த மனிதனைப் போலாகி விடுகின்றன.. விடிகாலையில் நடக்கும் போது இரவு விளக்கின் மஞ்சள் வெளிச்சமும் காலையின் மென்னொளியும் கலந்து அந்தச் சாலை விநோதமாகத் தோற்றமளிக்கும். வீதியோர மரங்களில் அசைவேயிருக்காது. …

சாய்ந்தாடும் குதிரை Read More »

மண்டியிடுங்கள் தந்தையே – இணைய நிகழ்ச்சி

நூல் வாசிப்பு முற்றம் சார்பில் எனது மண்டியிடுங்கள் தந்தையே நாவலிற்கான அறிமுகவுரை நடைபெறவுள்ளது. ஜுலை 24 வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு இணைய வழியில் நிகழ்வு நடைபெறுகிறது மண்டியிடுங்கள் தந்தையே குறித்து இரா. ஜெயபால் உரையாற்றுகிறார். நூல் வாசிப்பு முற்றம் – 237′நாள் : 24.07.2025வியாழக்கிழமை நேரம் : இரவு 7.00 – 7.30 மணி நிகழ்விற்கான இணைப்பு : https://meet.google.com/pfw-tcoy-xxb நூல் கருத்துரை வழங்க விரும்புவோருக்கானவிண்ணப்பப் படிவம் :https://forms.gle/kVqEwX9uqrGYqv2a8

கோவை புத்தகத் திருவிழாவில்

கோவை புத்தகத் திருவிழாவில் மூன்று நாட்கள் இருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சி அளித்தது. திங்கள்கிழமை எனது உரையின் போது நிறைய இளைஞர்கள் வந்திருந்தார்கள். அரங்கு நிறைந்த கூட்டம். கோவை புத்தகத் திருவிழாவின் போது உடனிருந்து உறுதுணைகள் செய்த அன்பு நண்பர் மூர்த்திக்கு மனம் நிறைந்த நன்றி. உபசரித்து மகிழ்ந்த அம்பாள் முத்துமணி , நிலக்கோட்டை ஸ்ரீதர், தேன்மொழி, டாக்டர் சந்திரமௌலி, வசந்த், கொடீசியா நடராஜ், அழகிரி, கோவை ஷபி, ஸ்ருதி டிவி கபிலன், பத்திரிக்கை, …

கோவை புத்தகத் திருவிழாவில் Read More »

பாராட்டுவிழா

நான் பாரதிய பாஷா பரிஷத் விருது பெற்றதற்கான பாராட்டுவிழா தூத்துக்குடியில் நடைபெறுகிறது ஆகஸ்டு 1 வெள்ளிக்கிழமை மாலை காமராஜ் கல்லூரி அரங்கில் விழா நடைபெறுகிறது நூலக மனிதர்கள் இயக்கம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

கோவையில்

கோவை புத்தகத் திருவிழா கொடீசியா அரங்கில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள கோவை வருகிறேன். ஜுலை 19, 20,21 மூன்று நாட்களும் தேசாந்திரி பதிப்பக அரங்கு 67ல் என்னைச் சந்திக்கலாம்.“ ஜுலை 21 திஙகள் கிழமை மாலை புத்தகத் திருவிழா அரங்கில் “புத்தகங்களின் சரித்திரம்“ என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்