ஒளிரும் வானவேடிக்கைகள்
வானவேடிக்கைகளைச் சித்தரிக்கும் ஓவியங்களாகத் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து, பிரமாண்டமான விழாக்கள் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களில் வாணவேடிக்கைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவற்றை விளக்கும் அரிய ஓவியங்களைக் காண முடிகிறது. முகலாய இளவரசர் தாரா ஷிகோவின் திருமணத்தைச் சித்தரிக்கும் 1633ல் வரையப்பட்ட ஓவியத்தில் இரவு வானத்தில் ஒளிரும் வானவேடிக்கைகளைக் காண முடிகிறது. ஓவியத்தில் மணமகன் தாராவும் அவரது குழுவினரும் ஊர்வலமாக ஆக்ரா கோட்டைக்கு வருகிறார்கள். அவர்களை நதிரா பானுவின் குடும்பத்தினர் எதிர் கொண்டு வரவேற்கிறார்கள். தாரா …









