admin

எனது பரிந்துரைகள் -4

புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு ஐம்பதுக்கும் அதிகமான புதிய கவிதைநூல்கள் வெளியாகியுள்ளதாக அறிந்தேன். ஒரு சில நூல்களை மட்டுமே காண முடிந்தது. இளங்கவிஞர்களுக்கு எனது வாழ்த்துகள். நேஷனல் புக் டிரஸ்ட் அரங்கில் 50 சதவீத தள்ளுபடியில் மிகச்சிறந்த நாவல்கள் கிடைக்கின்றன. இந்திய அளவில் புகழ்பெற்ற இந்த நாவல்கள் இனி மறுபதிப்பு வருமா என்பது சந்தேகமே. ஒருவேளை வந்தாலும் அதன் விலை மிக அதிகமாக இருக்கும். நூறு ரூபாயில் இரண்டு மூன்று முக்கியமான நாவல்களை இங்கே வாங்கிவிட முடியும். கவிதாலயம், …

எனது பரிந்துரைகள் -4 Read More »

நானும் எனது இலக்கியத் தேடலும்.

(தினமணி நாளிதழில் இன்று வெளியான கட்டுரை.) எது நான் படித்த முதல் புத்தகம் என்று யோசித்துப் பார்த்தால் விடை காணமுடியவில்லை. ஆனால் மூன்று நான்கு வயதுகளிலே வண்ணப்படம் உள்ள புத்தகத்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த நினைவு இருக்கிறது. என் வீட்டில் புத்தகம் படிக்கும் ஆர்வம் எல்லோரிடமும் இருந்தது. ஆகவே வார இதழ்கள், மாத இதழ்கள். புதிய புத்தகங்கள் வீட்டிற்கே வந்துவிடும். படித்த புத்தகங்களைப் பற்றி வீட்டில் காரசாரமாக விவாதிப்பார்கள். ஆகவே புத்தக வாசிப்பு வீட்டில் தான் முதலில் …

நானும் எனது இலக்கியத் தேடலும். Read More »

வல்லினம் இதழில்

வல்லினம் இணைய இதழில் எனது புதிய சிறுகதை கறுப்பு ரத்தம் வெளியாகியுள்ளது. https://vallinam.com.my/version2/?p=7442&fbclid=IwAR3oh6k5UlTlhF1ikVWqZmFgF8h1UwlZKltZ3zDDuCYjZGHBoAyU0zPt3tw

அஞ்சலி

காந்தியவாதியும் மிகச்சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டாளருமான அருமை நண்பர் டாக்டர் ஜீவா ( ஈரோடு) இன்று காலமானார். எளிமையும் ஆழ்ந்த ஞானமும் கொண்ட அற்புதமான மனிதர். நிறைய மொழியாக்க நூல்களை வெளியிட்டுள்ளார். கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கியதில் முன்னோடி. அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

புத்தகக் காட்சி தினங்கள் -3

சனிக்கிழமை இருந்த கூட்டத்தைப் போல நேற்று இரண்டு மடங்கு அதிக கூட்டமிருந்தது. எனது கார் உள்ளே செல்ல இயலவில்லை. நீண்ட நேரம் காத்திருந்து உள்ளே சென்றேன். திருவிழாக் கூட்டம். இத்தனை பேர் புத்தகங்களை ஆசையாக வாங்குகிறார்கள் என்பது சந்தோஷம் அளித்தது நீண்ட நேரம் முகக் கவசம் அணிந்து கொண்டு இருப்பது மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. மேலும் புகைப்படம் எடுக்கும் அனைவரும் முகக்கவசத்தை நீக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆகவே கண்காட்சியில் நிறைய நேரம் முகக்கவசம் அணிய இயலவில்லை. …

புத்தகக் காட்சி தினங்கள் -3 Read More »

புத்தகக் காட்சி தினங்கள் -2

நேற்று புத்தகக் கண்காட்சியில் நல்லகூட்டம். நீண்ட காலத்தின் பின்பு அலை அலையாகப் புத்தகம் வாங்க வந்த மக்களைக் காணச் சந்தோஷமாக இருந்தது. வழக்கமாக எந்த வரிசையில் எந்தக் கடைகள் இருக்கின்றன என்ற பட்டியல் ஒன்றை பபாசி அளிப்பார்கள். சில நேரம் அது தன்னார்வலர்கள் முயற்சியிலும் வெளியிடப்படும். இந்த ஆண்டு அப்படி எந்தத் தகவலும் தெரியாத காரணத்தால் தேசாந்திரி அரங்கு எங்கே இருக்கிறது எனத் தெரியாமல் அலைந்து திரிந்து நிறைய பேர் சிரமப்பட்டிருக்கிறார்கள். பபாசி கடைகளின் பட்டியலை வெளியிட்டால் …

புத்தகக் காட்சி தினங்கள் -2 Read More »

எனது பரிந்துரைகள் -3

சென்னை புத்தகக் கண்காட்சியின் மூன்றாம் நாளுக்கான எனது பரிந்துரைகள். •• பிறக்கும் தோறும் கவிதை ஷங்கர் ராமசுப்ரமணியன் வனம் வெளியிடு கவிஞர் ஷங்கர் ராமசுப்ரமணியன் நவீன கவிதையுலகில் தனித்துவமான கவிஞர். கவிதைகள் குறித்த அவரது கட்டுரைகள் ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடாக அமைந்தவை. சமகாலத் தமிழ் கவிதைகள் குறித்த அவரது இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு நவீன தமிழ்க்கவிதையின் போக்கினையும் சாதனைகளையும் எடுத்துச் சொல்கிறது இயந்திரம் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய நாவல். தமிழாக்கம் ஆனந்தகுமார். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு. …

எனது பரிந்துரைகள் -3 Read More »

புத்தகக் காட்சி தினங்கள் 1

நேற்று மாலை 4 மணிக்கு சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்றிருந்தேன். சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் என்பதால் வழக்கத்தை விட மிக அகலமான, பெரிய நடைபாதைகளை அமைத்திருக்கிறார்கள். கண்காட்சி அரங்குகள் சிறப்பாக அமைக்கபட்டிருந்தன. புத்தகக் கண்காட்சிக்கு சென்று வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது என்பது பேட்டரியை ரீசார்ஜ் செய்து கொள்வது போன்றது. வாசகர்களின் தீராத அன்பும் பாராட்டும் ,எழுத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையுமே என்னைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது. எத்தனை விதமான வாசகர்கள். அவர்களுடன் உரையாடவும் அவர்களின் பல்வேறு …

புத்தகக் காட்சி தினங்கள் 1 Read More »

எனது பரிந்துரைகள் -2

சென்னை புத்தக் கண்காட்சியின் இரண்டாம் நாளுக்கான எனது பரிந்துரைகள். மிச்சக் கதைகள் கி.ராஜநாராயணன் அன்னம் – அகரம் பதிப்பகம் கரிசல் இலக்கியத்தின் பிதாமகர் கி.ராஜநாராயணன் தனது 98வது வயதில் எழுதிய கதைகளின் தொகுப்பு. •• மறக்க முடியாத மனிதர்கள் வண்ண நிலவன் காலச்சுவடு இலக்கிய ஆளுமைகள் குறித்த வண்ணநிலவனின் நினைவுக்குறிப்புகள். •• ராஜாஜி வாழ்க்கை வரலாறு ராஜ்மோகன் காந்தி தமிழில்:கல்கி ராஜேந்திரன் வானதி பதிப்பகம் ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக விவரிக்கும் இந்த நூல் தமிழக அரசியல் …

எனது பரிந்துரைகள் -2 Read More »

எனது பரிந்துரைகள் -1

நான் படித்த, எனக்கு விருப்பமான சில நூல்களைப் பரிந்துரை செய்கிறேன். இவை புத்தகக் கண்காட்சியில் கிடைக்க கூடும். எந்தக் கடையில் கிடைக்கிறது என்ற விபரம் எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அச்சில் இல்லாமல் இருந்தால் நூலகத்தில் தேடித்தான் வாசிக்க வேண்டும். இவான் விளதீமிர் பகமோலவ் தமிழில்: நா. முகம்மது செரீபு நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு புகழ்பெற்ற ரஷ்ய இயக்குநரான தார்கோவெஸ்கியின் (Andrei Tarkovsky) Ivan’s Childhood திரைப்படம் இந்த நாவலை மையமாக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. சிறிய நாவல். …

எனது பரிந்துரைகள் -1 Read More »