admin

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -2

சித்தார்த்தா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஹெர்மன் ஹெஸ்ஸேயின் சித்தார்த்தா நாவலை கவிஞர் திருலோக சீதாராம் சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். அதன் புதிய பதிப்பை தேசாந்திரி பதிப்பகம் வெளியிடுகிறது. ஹெஸ்ஸே குறித்த விரிவான அறிமுகம் மற்றும் சித்தார்த்தா நாவல் பற்றிய எனது விரிவான அறிமுக கட்டுரையுடன் இந்த நூல் வெளியாகிறது. இதற்கு அனுமதி தந்த திருலோக சீதாராம் குடும்பத்தினருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். துறவு வாழ்க்கையை மேற்கொள்ளச் செல்லும் சித்தார்த்தன் என்ற இளைஞன் நாவலில் பகவான் …

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -2 Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள்-1

சென்னை புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டு தேசாந்திரி பதிப்பகம் புதிய நூல்களை வெளியிடுகிறது. அச்சில் இல்லாத எனது நூல்களின் மறுபதிப்பு மற்றும் புதிய நூல்கள் வெளியாகின்றன சிறார்களுக்காக நான் எழுதிய கதைகளின் தொகுப்பு கதைக்கம்பளம் என்ற பெயரில் ஏழு சிறு நூல்களாக முன்பு வெளியாகியிருந்தது. அதைத் தொகுத்து நான்கு நூல்கள் ஒன்று சேர்ந்த ஒரே புத்தகமாக வெளியிடுகிறோம் கடலோடு சண்டையிடும் மீன் என்ற தலைப்பில் வெளியாகிறது. அண்டசராசரம் நேதாஜியால் உருவாக்கபட்ட ஆசாத் வங்கியில் சேமித்து வைக்கபட்ட பணம், அவரது …

தேசாந்திரி புதிய வெளியீடுகள்-1 Read More »

உலகின் ஒரு நாள்

கரோனா முடக்கம் காரணமாக உலகமே ஸ்தம்பித்துப் போயிருந்த சூழ்நிலையில், உலகெங்கிலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை ஒரு நாளில் எப்படியிருந்தது என்பதை ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள். ஜூலை 25, 2020 அன்று, உலகெங்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு செலவிட்டார்கள் என்பதே இந்த ஆவணப்படத்தின் மையக்கரு. உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே ஒருவன் உலகின் ஒருநாளைக் காணுவது எளிய விஷயமில்லை. படத்தைப் பார்க்கப் பார்க்க மனதில் சந்தோஷம் பீறிடுகிறது. உலகைப் பற்றிய நமது எண்ணங்களை, வீண்பயத்தை, குறுகிய மனப்பாங்கினை முற்றிலும் மாற்றிவிடுகிறது …

உலகின் ஒரு நாள் Read More »

மூத்தோர் பாடல் -1 மதுரைக்காட்சிகள்.

நகரம் கதைகளின் விளைநிலம். பெரிய நகரங்கள் நிறைய கதைகளைக் கொண்டிருக்கின்றன. லண்டன், பாரீஸ், மாஸ்கோ, நியூயார்க். பீட்டர்ஸ்பெர்க், டோக்கியோ, ரோம், பெர்லின் ஆகிய நகரங்கள் பற்றி இலக்கியத்தில் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு முன்னோடி போல தமிழ் இலக்கியமே நகரங்களைக் கொண்டாடி அதன் பெருமைகளை எழுத்தில் பதிவு செய்திருக்கிறது. தமிழ் இலக்கியம் பதிவு செய்துள்ளது போல இந்தியாவின் வேறு எந்த மொழியிலும் நகரின் பெருமைகள் கவிதையில் எழுதப்படவில்லை. சிலப்பதிகாரம் பூம்புகாரைப் போற்றுகிறது. மதுரைக்காஞ்சியோ மதுரையைக் கொண்டாடுகிறது. அதிலும் மதுரை …

மூத்தோர் பாடல் -1 மதுரைக்காட்சிகள். Read More »

திரைக்குப் பின்னால்

Mank என்ற டேவிட் பிஞ்சர் இயக்கிய படத்தைப் பார்த்தேன். இந்த ஆண்டு ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் இருக்கிறது. நிச்சயம் விருது பெறும் என்றே நம்புகிறேன். கறுப்பு வெள்ளையில் மிகச் சிறப்பாகப் படமாக்கியிருக்கிறார்கள். ஆர்சன் வெல்ஸ் இயக்கிய சிட்டிசன் கேன் ஹாலிவுட் சினிமா வரலாற்றில் சாதனைப்படமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் படத்தை இயக்கியபோது ஆர்சன் வெல்ஸிற்கு 24 வயது. படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருது அறிவிக்கபட்ட போது அதைப் பெற்றுக்கொள்ள வெல்ஸ் நேரில் செல்லவில்லை. படத்தின் திரைக்கதையை அவர் …

திரைக்குப் பின்னால் Read More »

ரஸ்கோல்நிகோவ்வின் ட்வீட்

உலகம் முழுவதும் தஸ்தாயெவ்ஸ்கியை எப்படி எல்லாம் படிக்கிறார்கள். எப்படி எல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பது வியப்பளிக்கிறது. 1866ல் குற்றமும் தண்டனையும் (Crime and Punishment ) நாவல் தொடராக 12 மாதங்கள் வெளியானது. பின்பு 1867ல் அந்த நாவல் முழுமையான ஒரே நூலாக வெளியானது. அன்று முதல் இன்றுவரை எவ்வளவு பிரதிகள் இந்த நாவல் விற்றுள்ளது என்று துல்லியமாக எவராலும் சொல்ல முடியாது. நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. 1867 முதல் 2021 வரை எத்தனை தலைமுறை அந்த …

ரஸ்கோல்நிகோவ்வின் ட்வீட் Read More »

கதைகளின் வேட்டைக்காரன்.

எடுவர்டோ காலியானோ லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர். வரலாற்றாசிரியர். இவரது வரலாறு என்னும் கதை மணற்கேணி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ரவிக்குமார் தமிழாக்கம் செய்திருக்கிறார். காலியானோவின் லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள் என்ற வரலாற்று நூலும் தமிழில் வெளியாகியுள்ளது. காலியானோ வரலாற்றின் மையப்புள்ளிகளை, முக்கிய இயக்கங்களை, அறியப்படாத உண்மைகளை, பண்பாட்டு விநோதங்களைச் சிறிய துண்டுகளாகப் பதிவு செய்கிறார். அவை மின்மினிப்பூச்சியிடமிருந்து வெளிப்படும் வெளிச்சம் போன்றது. சர்வதேச அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றை ஆழ்ந்து வாசித்த ஒருவரால் …

கதைகளின் வேட்டைக்காரன். Read More »

புத்தரின் சொற்கள்.

தீக நிகாயம் என்ற பௌத்த மறைநூலை மு.கு.ஜகந்நாத ராஜா மொழியாக்கம் செய்திருக்கிறார். திரிபிடகங்களில் ஒன்றான சுத்தபீடகத்திலுள்ள தீக நிகாயம் புத்தரின் போதனைகளை விரிவாக உணர்த்துகிறது. இராஜபாளையத்தில் வசித்து வந்த மு.கு.ஜகந்நாத ராஜா அவர்களை நேரில் சந்தித்துப் பழகியிருக்கிறேன். அவரது நூலகத்திற்குச் சென்று பௌத்தம் தொடர்பான நூல்களை வாசித்திருக்கிறேன். மணிமேகலை மன்றம் அமைப்பை நடத்தி வந்த மு.கு.ஜகந்நாத ராஜா சமஸ்கிருதம், பிராகிருதம். பாலி மொழிகளைக் கற்றவர். மணிமேகலையை ஆழ்ந்து படிப்பதற்காகவே தான் பாலி மொழியினைக் கற்றுக் கொண்டதாகக் கூறினார். …

புத்தரின் சொற்கள். Read More »

போர்ஹெஸின் பயணம்.

அமெரிக்க எழுத்தாளரான ஜெய் பரினி இதுவரை எட்டு நாவல்களை எழுதியுள்ளார், டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு இவர் எழுதிய தி லாஸ்ட் ஸ்டேஷன் நாவல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. நாவல் மற்றும் திரைப்படம் இரண்டும் மிகச்சுமாரானவை என்றே சொல்வேன். இரண்டிலும் டால்ஸ்டாயின் ஆளுமையும் வாழ்க்கை நிகழ்வுகளும் சரியாக வெளிப்படவில்லை. ஸ்டீன்பெக், வில்லியம் பாக்னர், ராபர்ட் பிராஸ்ட் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றை ஜெய் பரினி எழுதியிருக்கிறார். தகவல் துணுக்குகள் என்பதைத் தாண்டி இந்த வாழ்க்கை வரலாற்று …

போர்ஹெஸின் பயணம். Read More »

சிரிப்பு பாதி அழுகை பாதி

எங்க வீட்டுப் பெண் படத்தில் இடம்பெற்ற சிரிப்பு பாதி அழுகை பாதிச் சேர்ந்ததல்லவோ மனித ஜாதி பாடல் திடீரெனக் காலையில் நினைவிற்கு வந்தது. பழைய பாடல்களில் எந்தப் பாடல் எப்போது நினைவில் கிளர்ந்து எழும் என்று சொல்ல முடியாது. அந்த நாள் முழுவதும் அந்தப் பாடல் மனதில் ஒடிக் கொண்டேயிருக்கும். கே.வி.மகாதேவன் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல்.. : P.B.ஸ்ரீநிவாஸ் அற்புதமாகப் பாடியிருப்பார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இந்தப் பாடலில் நாகையா மெய்யுருகப் பாடுகிறார். …

சிரிப்பு பாதி அழுகை பாதி Read More »