admin

காலைக் குறிப்புகள் 30 சிறப்பு மௌனம்.

நோபல் பரிசு பெற்ற பின்பு  ஜப்பானிய எழுத்தாளரான கென்ஸாபுரோ ஒயி இனி தான் எழுதப்போவதில்லை. தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்று ஒரு பேட்டி கொடுத்தார். ஏன் அப்படி சொல்கிறீர்கள் என பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு. என் எழுத்திற்கு அடிப்படையாக ஒரேயொரு காரணமிருந்தது அது என் மகன் ஹிக்காரி. மூளை வளர்ச்சியற்ற அவன் நலமடைய வேண்டும் என்பதற்காகவே எழுதினேன். அந்தப் பணியை சரியாக செய்துவிட்டதாக உணர்கிறேன். ஆகவே இனி எழுதத் தேவையில்லை என்று பதில் சொன்னார் உங்கள் மகனுக்காக மட்டும் …

காலைக் குறிப்புகள் 30 சிறப்பு மௌனம். Read More »

காட்டு வாத்துடன் பறந்து செல்வேன்

– ஜப்பானிய எழுத்தாளர் கென்ஸாபுரோ ஒயி நோபல் பரிசு ஏற்புரையின் ஒரு பகுதி தமிழில் எம்.எஸ். குழப்பம் நிறைந்த முதல் உலக மகா யுத்தத்தின் போது நான் ஒரு சிறு பையனாயிருந்தேன். இங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில், ஜப்பான் தீவுக்கூட்டத்தில் ஷிக்கோகு தீவின் தனிமையான மரங்களடர்ந்த பள்ளத்தாக்கில் வசித்து வந்தேன். அப்போது இரண்டு புத்தகங்கள் என்னைக் கவர்ந்திருந்தன. The Adventures of Huckleberry Finn மற்றும் The Wonderful Adventures of Nils. இந்த உலகம் முழுவதையும் …

காட்டு வாத்துடன் பறந்து செல்வேன் Read More »

நீலம் இதழில்

ஓர் எழுத்தாளனும் சில கதாபாத்திரங்களும் என்ற தலைப்பில் தொடர்கட்டுரைகளை நீலம் இதழ் வெளியிட்டு வருகிறது. அதில் எனக்குப் பிடித்த தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனை நாவலின் நாயகன் ரஸ்கோல்நிகோவ் குறித்து எழுதியிருக்கிறேன். பிப்ரவரி 2021 நீலம் இதழில் வெளியாகியுள்ளது.

திரைப்படவிழாவில்

சென்னையில் நடைபெறும் சர்வதேசத் திரைப்படவிழாவின் மாஸ்டர் கிளாஸ் நிகழ்வில் பிப்ரவரி 19 மாலை மூன்று மணிக்கு உரையாற்றுகிறேன். சத்யம் திரையரங்கிலுள்ள சிக்ஸ் டிகிரி அரங்கில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

கற்றுத் தரும் உலகம்

பத்திரிக்கையாளரும் எனது நண்பருமான ஜென்ராம் புதிய யூடியூப் சேனல் ஒன்றினைத் துவக்கியுள்ளார்.அந்தச் சேனலுக்காக ஜென் ராம் அவர்களுடன் Life in a day ஆவணப்படம் குறித்து உரையாடினேன்.

தாகூரைப் பற்றி

சொல்வனம் இணைய இதழ் சார்பில் வங்காள இலக்கியத்திற்கான சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறார்கள். மிகச்சிரத்தையாக, விரிந்த தளத்தில் செறிவாகக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஒரு இளம்வாசகனுக்கு இந்தச் சிறப்பிதழ் பெரும்பொக்கிஷமாகவே அமையும். சொல்வனம் ஆசிரியர் குழு சிறப்பான முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிக்குக் காரணமாக இருந்த பாஸ்டன் பாலா, நம்பிகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர் குழுவினர், பங்களித்த படைப்பாளிகள் அனைவருக்கும் மனம் நிரம்பிய பாராட்டுகள். இந்தச் சிறப்பிதழுக்காக அற்புதமான லோகோ அமைத்தவருக்கு என் தனிப்பட்ட வாழ்த்துகள். சொல்வனம் இதழில் சத்யஜித்ரே இயக்கிய தாகூர் பற்றிய …

தாகூரைப் பற்றி Read More »

ஜப்பான் நினைவுகள்

ஒரு புகைப்படத்தைத் தேடிக் கொண்டிருக்கும் போது 2014ல் ஜப்பான் பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களின் சேமிப்பு பழைய ஹார்ட் டிஸ்க் ஒன்றில் இருப்பதைக் கண்டேன். அவற்றை இரவில் பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை இனிமையான நாட்கள். இனிய நினைவுகள். எவ்வளவு அற்புதமான நண்பர்கள். ஜப்பானுக்குத் தனது வேலை நிமித்தம் சென்ற இளைஞர்களில் சிலர் ஒன்றுகூடி முழுமதி அறக்கட்டளை என்ற அமைப்பினை உருவாக்கி அதன்வழியே தமிழ் கற்றுத்தருவது, இலக்கிய நிகழ்ச்சிகள் செய்வது. தமிழகத்திலுள்ள கிராமப்புற கல்வி நிறுவனங்களுக்கு உதவி செய்வது. …

ஜப்பான் நினைவுகள் Read More »

மூத்தோர் பாடல் -2 காதலின் கானல் உருவங்கள்.

கலித்தொகையிலுள்ள பாலைக்கலி ஒன்பதாவது கவிதையை வாசிப்பதற்கு முன்பு ஒரு காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். கொதிக்கும் வெயில் பரந்த பாலை நிலத்தில் காதல் வசப்பட்ட ஒரு இளைஞனும் இளம்பெண்ணும் வீட்டைவிட்டு ஓடிப்போகிறார்கள். உடன்போக்குதல் பாலையின் இயல்பு. அப்படித் தான் அந்த இளைஞனும் பெண்ணும் புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் செல்கிறார்கள். நடந்தால் மட்டுமில்லை. அதைப்பற்றி நினைத்தாலே சுடக்கூடியது பாலை நிலம். பாலையின் கடுமை அந்த இளைஞனுக்குத் தெரிந்திருக்கலாம். அந்த இளம்பெண்ணுக்கு முழுமையாகத் தெரியாது. அவள் பாலை நிலத்திலே …

மூத்தோர் பாடல் -2 காதலின் கானல் உருவங்கள். Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -4

புத்தக வாசிப்பை ஒரு விளையாட்டாக மாற்றக்கூடிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் நிறைய வெளியாகியிருக்கின்றன. ரஷ்ய சிறார் நூல்களில் இது போன்ற முயற்சிகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. தமிழில் இது போன்ற கதாவிளையாட்டுகள் இல்லை. ஆகவே முதன்முயற்சியாக ஒரு கதையைப் படிக்கும் வாசகர் கையில் ஒரு பகடையை உருட்டி அதில் விழும் எண்ணிற்கு ஏற்ப கதையின் பாராக்களை படித்துப் போனால் எப்படியிருக்கும் என்ற சுவாரஸ்யமான விளையாட்டினை இந்த நூல் அறிமுகப்படுத்துகிறது. வீடியோ கேம் ஒன்றினை நீங்கள் புத்தகமாக உருமாற்றினால் …

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -4 Read More »

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -3

குறத்தி முடுக்கின் கனவுகள் ஜி.நாகராஜன், சம்பத், காசியபன்,ஹெப்சிபா ஜேசுதாசன், வண்ணதாசன்,லா.ச.ரா, பஷீர், அக்ஞேயா, எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. பேசத் தெரிந்த நிழல்கள் உலகப் புகழ்பெற்ற ஆவணப்படங்கள். மற்றும் ஆசிய நாடுகளின் முக்கிய திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு. இருள் இனிது ஒளி இனிது பெட்ரிக்கோ பெலினி ,இங்மர் பெர்க்மன், அகிரா குரோசவா, டேவிட் லீன் போன்ற உலகப்புகழ்பெற்ற இயக்குநர்களின் முக்கியத் திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. …

தேசாந்திரி புதிய வெளியீடுகள் -3 Read More »