புத்தகவெளியீட்டு விழா- புகைப்படங்கள்
டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது. நிகழ்விற்குத் தலைமேற்று சிறப்பித்தார் தொழிலதிபர் அம்பாள் ஆர் முத்துமணி. அவர் தேர்ந்த இலக்கிய வாசகர். என் மீது அன்பு கொண்ட நண்பர். நிகழ்விற்கு காளிமார்க் நிறுவன உரிமையாளர் தனுஷ்கோடி அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார். கவளம் நூல் குறித்து சேரலாதன் சிறப்பான உரையை நிகழ்த்தினார். சிறுகதையின் பல்வேறு முனைகளைத் தொட்டு பேசியது …








