பார்த்தேன் படித்தேன்
ருஷ்டியின் Midnight’s Children நாவலை வாசித்திருக்கிறேன், அது எனக்கு அவ்வளவு ஈர்ப்புடையதாகயில்லை, ஆனால் சில நாட்களுக்கு முன்பாகத் தீபா மேத்தா இயக்கத்தில் அதைப் படமாகப்பார்த்தேன், படம் எனக்குப் பிடித்திருந்தது, மறுபடியும் அந்த நாவலை படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன், தீபா மேத்தா நாவலுக்கு மிக நெருக்கமாகப் படமாக்கியிருக்கிறார், ருஷ்டியின் சமீபத்தைய புத்தகமான Joseph Anton அவர் மீது பட்வா விதிக்கபட்ட நாளில் துவங்கி அவர் தப்பியோடிய நிகழ்வுகளை முழுமையாகப் பதிவு செய்திருக்கிறது, மரணம் துரத்தும் ஒரு எழுத்தாளனின் …