admin

திருத்தப்பட வேண்டியவர்கள்

சென்ற மாதம்  சென்னை பிராட்வேயில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற  அருணாசாய்ராம் தமிழிசைக்கச்சேரி கேட்கப் போயிருந்தேன், நான் அருணாசாய்ராமின் தீவிர ரசிகன், சென்னையில் அவர்களது கச்சேரி எங்கே நடந்தாலும் போய்விடுவேன், அன்றைக்கு அரங்கு நிரம்பிய கூட்டம்,  ஒரு ரசிகர் எழுந்து சாய்பாபாவை பற்றி ஒரு பாட்டுப் பாட வேண்டும் என்று சப்தமாகக் கேட்டார்,  அருணா சாய்ராம் சிரித்தபடியே பார்க்கிறேன் என்று சொன்னார், அடுத்தபாடல் பாடி முடித்தவுடன் அதே ரசிகர் எழுந்து, சாய்பாபா பாட்டு என்று உரத்துக் கத்தினார், …

திருத்தப்பட வேண்டியவர்கள் Read More »

மண்புழு

சூழலியல் சார்ந்த கருத்துகளை முதன்மைப்படுத்தி மண்புழு என்றொரு அழகிய சிற்றிதழை திருவண்ணாமலையில் செயல்படும் குக்கூ அமைப்பு துவக்கியுள்ளது குக்கூ, குழந்தைகளின் படைப்பாளுமையை உருவாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரிய அமைப்பாகும். மசானபு புகோகோவின் இயற்கைக்குத் திரும்பும் பாதை என்ற நூலை டாக்டர் வெ.ஜீவானந்தம் அவர்கள் மொழியாக்கம் செய்திருக்கிறார், அந்த நூலை தமிழ்நாடு பசுமை இயக்கத்துடன் இணைந்து குக்கூ விநியோகம் செய்கிறார்கள் இயற்கையைப் பாதுகாப்பது மற்றும் குழந்தைகளின் படைப்புலகம் சார்ந்த  இதழாக மண்புழு உருவாக்கபட்டுள்ளதாக  குக்கூ தெரிவிக்கிறது, முதல் …

மண்புழு Read More »

கண்டிக்கிறேன்

எழுத்தாளரும்  சமூக விமர்சகருமான நண்பர் மனுஷ்யபுத்திரன் அவர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததோடு ,அவரது எழுத்துச் செயல்பாடுகளை முடக்குவதற்காக கொலை மிரட்டல் விடுக்கும் மதவாதத் தாக்குதலை  வன்மையாகக் கண்டிக்கிறேன் சவுதி அரேபிய நாட்டில் வீட்டு வேலை செய்துவந்த  சிறுமிக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதை விமர்சித்து நண்பர் மனுஷ்யபுத்திரன் எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து அவர் மீது தொடர்ந்த மிரட்டல்களை மதவாத அமைப்புகள் விடுத்துவருகின்றன, இது போன்ற கீழ்தரமான அவதூறுகள், அச்சுறுத்தல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பொறுப்பற்ற இந்தத் …

கண்டிக்கிறேன் Read More »

அமெரிக்க இதழில்

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் இலக்கியப் பத்திரிக்கை 34thparallel.  சமீபத்திய இதழில் எனது கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது, இந்த இதழின் மின்பதிப்பு இணையத்தில் உள்ளது, ஆனால் இது விலை கொடுத்துப் பெற வேண்டிய இதழாகும், https://www.34thparallel.net/index.html

அவள் பிரிவு

வெ சாமிநாத சர்மா தனது மனைவியின் மரணம் ஏற்படுத்திய இழப்பில் இருந்து மீள்வதற்காக அவரைப்பற்றிய தனது நினைவுகளை உணர்ச்சிபூர்வமான கடிதங்களாக எழுதியிருக்கிறார், சர்மாஜி, தனது நண்பர்  அரு சொக்கலிங்கத்திற்கு  எழுதிய இந்தக் கடிதங்களை தொகுத்துத் தனி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்,  அவள் பிரிவு என்ற இந்நூலை பூங்கொடி பதிப்பகம் வெளியிட்டுள்ளது, சர்மாவின் மனைவி மங்களம் அம்மையார் குறித்து உணர்ச்சிபூர்வமான சித்திரம் ஒன்றினை அவள் பிரிவு உருவாக்குகிறது, புத்தகத்தை படித்து முடிக்கையில் மனது கனத்துப் போய்விடுகிறது, புகழ்பெற்ற எழுத்தாளர் C. …

அவள் பிரிவு Read More »

பாண்டிச்சேரியில்

நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் புதிய நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி வெளியீட்டுவிழா ஜனவரி 26ந்தேதி மாலை  5 30 மணிக்கு பாண்டிச்சேரியில் உள்ள ஜெயராம் ஓட்டலில் நடைபெற இருக்கிறது. கி.அ.சச்சிதானந்தம் தலைமையில் நடபெறவிருக்கிற நிகழ்வில் நான் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறேன் இந்த நிகழ்வில் எழுத்தாளர் தமிழவன், ந.முருகேசபாண்டியன், ழான் தெலொஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

புத்தக கண்காட்சியில்

கடந்த இரண்டுநாட்களில் புத்தக கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான நூல்கள் தமிழர் உணவு /பக்தவசல பாரதி/காலச்சுவடு பதிப்பகம் பாப்லோ நெரூடா நினைவுக்குறிப்புகள் /தமிழில் சா தேவதாஸ் /கருத்துபட்டறை பதிப்பகம் என் நண்பர் ஆத்மாநாம் /ஸ்டெல்லா புரூஸ் /விருட்சம் வெளியீடு சம்பத் கதைகள் /விருட்சம் வெளியீடு ஒர் இந்திய கிராமத்தின் கதை  /தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை/சந்தியா பதிப்பகம் மகாத்மாகாந்தி /வின்சென்ட் ஷீன் /வ உசி நூலகம் ஒநாய் குலச்சின்னம்/ ஜியாங் ரோங் /அதிர்வு பதிப்பகம் கோபி கிருஷ்ணன் படைப்புகள் /முழுத்தொகுதி …

புத்தக கண்காட்சியில் Read More »

புத்தக வெளியீட்டுவிழா

குதிரைகள் பேச மறுக்கின்றன என்ற எனது தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பினை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டு உள்ளது, இதற்கான புத்தக வெளியீட்டுவிழா ஜனவரி 22 செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை புத்தக கண்காட்சி புன்னகை அரங்கில் நடைபெற் உள்ளது. அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைக்கிறேன்

டங்கனின் ஆவணப்படம்

புகழ்பெற்ற இயக்குனர் எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கிய இந்தியா பற்றிய அரிய ஆவணப்படத்தின் தொகுப்பு. மதுரைவீரன் நாடகம், ஜல்லிக்கட்டு, பழைய சினிமா ஸ்டுடியோக்கள். கிராமிய வாழ்க்கை எனத் தமிழகத்தின் அரிய பண்பாட்டுக் கூறுகளை காணும் போது வியப்பளிக்கிறது ** ELLIS R. DUNGAN COLLECTION Inside India: Village Life in Southern India https://youtu.be/vTLcxny7YSg தமிழ் திரையுலகம் பற்றி Ellis R. Dungan — Film from India https://www.youtube.com/watch?v=BgW1pnCQBmo&feature=share&list=PL42F883EB0583E77C புலி வேட்டை பற்றி Tiger …

டங்கனின் ஆவணப்படம் Read More »

திறக்கப்படாத கதவு

The Door என்ற ஹங்கேரியத் திரைப்படம் ஒன்றினைப் பார்த்தேன்,  இஸ்த்வான் ஸாபோ (István Szabó)இயக்கியது, ஸாபோ ஹங்கேரியின் மிக முக்கியமான, மூத்த தலைமுறை இயக்குனர். இவரது திரைப்படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கின்றன, இவரது மெபிஸ்டோ திரைப்படம் சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதினைப் பெற்றுள்ளது, ஸாபோவின் திரைமொழி கவித்துவமானது, புறக்கணிப்பும் அதனால் உருவாகும் அவமானமும் தான் அவரது படங்களின் மையப்பொருள், அடக்கிவைக்கபட்ட மனஉணர்ச்சிகளின் கொந்தளிப்பையும், உறவுகளின் ஊசலாட்டத்தையும் ஸாபோ மிகவும் திறமையாகக் …

திறக்கப்படாத கதவு Read More »