admin

ஈழத்தின் பாடல்

    1934 ஆண்டு தயாரிக்கப்பட்ட Song of Ceylon  என்ற ஆவணப்படத்தை கல்கத்தாவில் நடைபெற்ற உலக திரையிடப்பட விழாவில் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக பார்த்திருக்கிறேன். சமீபமாக அதை சின்னக்குட்டிவின்  வலைத்தளத்தில் பார்வையிட்டேன். ஆவணப்படங்களின் வரிசையில் மிக முக்கியமான படமிது. Song of Ceylon https://sinnakuddy1.blogspot.com/2008/06/song-of-1934.html ***நாற்பது நிமிசங்கள் உள்ள இந்த ஆவணப்படம் இலங்கையின் கடந்த கால வாழ்வைப் பற்றிய மிக பசுமையான பதிவு . பேசில் ரைட் இயக்கிய இப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான புருசெல்ஸ் திரைப்பட விழா …

ஈழத்தின் பாடல் Read More »

பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்

சிறுகதை இரண்டு வருடங்களுக்கு முன்பாக வெளியான என்னுடைய இந்த கதையை வாசிப்பதற்கு தேடுவதாக அமெரிக்காவில் இருந்து சிவசங்கரன் என்ற நண்பர் மின்னஞ்சல் அனுப்பி கேட்டிருந்தார். இது போன்று கடந்த நாலு மாதங்களில் ஆறேழு நண்பர்கள் இக்கதையை வாசிப்பதற்காக கேட்டிருந்தார்கள். அவர்களின் விருப்பத்திற்கு இணங்கி இக் கதையை இங்கே மறுபிரசுரம் செய்திருக்கிறேன். ** ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு கிலோ எடையுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் …

பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள் Read More »

திரை வெளி.

இணையத்தில் அதிகம் விவாதிக்கபடும் விஷயம் தமிழ் சினிமா. குறிப்பாக திரையிசைப்பாடல்கள்  குறித்து எண்ணிக்கையற்ற பதிவுகள் காணப்படுகின்றன.  அது போலவே கடந்த கால தமிழ்சினிமா குறித்த அறியப்படாத தகவல்கள், நினைவலைகள் ஆங்காங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.  இதில் பல வல்லுனர்கள் இருக்கிறார்கள். இந்த செய்திகளும் கதைகளும்  ஒருவகையான வாய்மொழி வரலாறு. தமிழ் சினிமாவின் நடிகர்கள், நடிகைகள் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் வெளியாகமால் போன திரைப்படங்கள் குறித்த வாய்மொழிகதைகள், வேடிக்கைகள் மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள் இதுவரை முழுமையாக தொகுக்கபடவில்லை.  நண்பர்கள் …

திரை வெளி. Read More »

பல்லி ஜென்மம்

– கிரேஸி ** மலையாளத்தின் முக்கிய கதாசிரியர் கிரேஸி. அவரது சிறப்பான கதை இது. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு ஸ்ரீபதிபத்மநாபா. ** அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் இரண்டு பல்லிகள் வசித்துவந்தன. ஓர் ஆண்பல்லி, ஒரு பெண் பல்லி. கொடுந்துயரமான ஆஸ்பத்திரி வாழ்க்கையை ஒரு தொடர்நாடகம் போல் பார்த்து அலுத்துப் போன அவை, உடல் நலத்துக்கு தீங்கானது என்ற முன்னறிவிப்பை கிழித்தெறிந்து தாம்பத்யம் அனுபவிக்க ஆரம்பித்து கொஞ்சநாட்கள்தான் ஆகியிருந்தது. அந்தக் கவர்ச்சி முழுதும் தீர்ந்துவிட்டபிறகு தெளிந்த …

பல்லி ஜென்மம் Read More »

கர்ணமோட்சம்

நான் கதை வசனம் எழுதிய கர்ணமோட்சம் என்ற குறும்படம் கடந்த இரண்டு ஆண்டுகளில் திரைப்படவிழாக்களில் மிகப் பரவலான கவனத்தைப் பெற்றதோடு அதிகமான விருதுகளையும் பெற்றிருக்கிறது. கர்ணமோட்சம் குறும்படத்தை சென்னை திரைப்படக்கல்லூரியில் பயின்ற மாணவர் முரளி மனோகர் இயக்கியுள்ளார். அப்படம் தமிழக அரசின் 2005 -2006 ம் ஆண்டுக்கான மாணவர்களுக்கான பிரிவில் சிறந்த இயக்கம் , சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த பதனிடல் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளைப் பெற்றது. அதைத் தொடர்ந்து கேரளாவில் நடைபெற்ற உலகத் திரைப்படவிழா …

கர்ணமோட்சம் Read More »

சிப்பியின் வயிற்றில் முத்து

          வங்காளத்தில்  1980 ஆண்டு வெளியான jhinuker pete mukto  என்ற நாவல் சமகால இந்திய நாவல்களில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இதை எழுதியவர் போதி சத்வ மைத்ரேய. இந்த நாவல் தமிழில் சிப்பியின் வயிற்றில் முத்து என்ற பெயரில் எஸ். கிருஷ்ணமூர்த்தியால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வங்காள நாவலின் சிறப்பம்சம் இது முழுமையாக தமிழக மக்களின் வாழ்வை விவரிக்கிறது. குறிப்பாக தூத்துக்குடியில் உள்ள பெர்னாந்தோ பிரிவு மீனவர்களின் வாழ்க்கைபாடுகளையும் அவர்களுக்குள் …

சிப்பியின் வயிற்றில் முத்து Read More »

சிகேகே இலக்கிய விருது.

                      கடந்த முப்பதாண்டு காலமாக ஈரோட்டில் செயல்பட்டு வரும் சிகேகே அறக்கட்டளையின் இலக்கியத்திற்கான விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பதினைந்தாயிரம் பணமும் பாராட்டுச் சான்றிதழும் கொண்டது. இதற்கான விழா ஈரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கத்தில் ஜுலை மாதம் 27தேதி  ஞாயிற்றுகிழமை மாலை (27.7.08) நடைபெற உள்ளது.

டால்ஸ்டாயோடு நடந்தேன் 2

எல்லா அப்பாக்களும் பையன்களை விடவும் பெண்கள் மீதே அதிக அன்பும் நெருக்கமும் கொண்டிருக்கிறார்கள். அதுவும் எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. ஏதோவொரு மகள் அப்பாவின் மிகுந்த அன்பிற்கும்  பரிவிற்கும் உள்ளாகிறாள். அப்படி டால்ஸ்டாயின் அன்பிற்கு உரியவளாக இருந்தவள் மாஷா. தன்னுடைய குழந்தைகளை முத்தமிடுவதை கூட ஒரு சடங்கு போல செய்யக்கூடியவர் டால்ஸ்டாய். தாயின் வளர்ப்பில் மட்டுமே உருவானவர்கள் அவரது பிள்ளைகள். அந்த நிலையில் மாஷா ஒருத்தி மட்டும் அப்பா எழுதிக்கொண்டிருக்கும் போது அருகில் நின்று பேசுவது அவரை கொஞ்சுவது …

டால்ஸ்டாயோடு நடந்தேன் 2 Read More »

டால்ஸ்டாயோடு நடந்தேன் 1

        கடந்த ஒரு மூன்று வார காலமாகவே புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை வரலாற்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அவரது மனைவியின் நாட்குறிப்புகள். மகன் மகள்களின் நினைவுப்பதிவுகள் மற்றும் டால்ஸ்டாயின் இறுதி நாட்கள் பற்றிய அவரது உதவியாளரின் குறிப்புகள் , டால்ஸ்டாயின் கடிதங்கள் என்று நாலைந்து புத்தகங்கள் அவரது வாழ்வை விவரிக்கின்றன. 1) Leo Tolstoy`s Diaries & Letters 2) The Diaries of Sophia Tolstoy 3) …

டால்ஸ்டாயோடு நடந்தேன் 1 Read More »

கவிதையும் கோவிலும்

              புகழ் பெற்ற கவிஞர்களுக்கு சிலை வைக்கும் வழக்கம் உலகமெங்கும் உள்ளது. பல நாடுகளில் கவிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் அவர்களது வாழ்விடங்கள் நினைவகமாக்கப்பட்டு மாதந்தோறும் சிறப்பு கூட்டங்கள், கவிதை வாசித்தல் என்று அக்கறையோடு செய்யப்படுகின்றன. இந்தியாவில் காந்திசமாதி போன்று ஒன்றிரண்டு நினைவிடங்களை தவிர மற்றவை முறையான பராமரிப்பின்றி கவனிப்பார் அற்றே கிடக்கின்றன. இதில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் நினைவிடங்களின் கதி எப்படியிருக்கும் என்பது உலகமறிந்த செய்தி. தமிழகத்தில் வள்ளுவர், ஔவை, …

கவிதையும் கோவிலும் Read More »