admin

சிற்றுரையும் பேருரையும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றின் ஆண்டுவிழாவில் பேசவேண்டும் என்று அழைத்திருந்தார்கள். இது ஒரு சம்பிரதாயம் போல எல்லா பள்ளிகளிலும் நடைபெறும் விஷயம் என்பதால் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டினேன். மொத்தமே ஒரு மணி நேர நிகழ்ச்சி இதில் நீங்கள் பத்து நிமிசம் பேசினால் போதும் என்று தெரிந்த ஒரு ஆசிரியர்  வழியாக அன்புக் கட்டளையிட்டு கலந்து கொள்ளச் செய்தார்கள். ஐந்து மணிக்கு நிகழ்ச்சி என்பதால் நாலரை மணிக்குச் சென்றேன். ஐநூறு பேருக்கும் …

சிற்றுரையும் பேருரையும். Read More »

பதேர் பாஞ்சாலி

            எங்கிருக்கிறாய் துர்கா ? இரண்டு நாட்களுக்கு முந்தைய இரவில் பதேர்பாஞ்சாலி திரைப்படத்தை பின்னிரவில் தனியாக உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தேன்.  இதற்கு முன்பாக இருபது முறைகளுக்கும் மேலாக பார்த்திருக்கிறேன் என்றாலும் அந்த படம் அந்தரங்கமாக சில சலனங்களை எனக்குள் உருவாக்குகிறது என்பதற்காகவே அடிக்கடிப் பார்ப்பேன். விளக்கின் சுடர் நிசப்தமாக அசைந்து கொண்டிருப்பது போல காட்சிகளின் வழியே  ஏதோ துண்டப்பட்டு சலனம் கொள்ளத் துவங்கியிருந்தேன். முன்பு ஒரு போதும் பார்த்தறியாத ஒரு …

பதேர் பாஞ்சாலி Read More »

நான்கு அறிமுகங்கள்

அநங்கம்  சிற்றிதழ் நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அக்கறை கொண்ட வாசகர்கள், படைப்பாளிகள் மலேசியாவில்  நிறைய இருக்கிறார்கள். சிறுகதைகள் கவிதைகள் என்று தொடர்ந்து செயல்படும் அவர்கள் தங்களது வெளிப்பாட்டிற்காக ஒன்றிரண்டு சிற்றிதழ்களை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் புதிதாக வெளிவந்துள்ளது அநங்கம் என்ற சிற்றிதழ். இதன் முக்கிய நோக்கமாக மலேசியாவில் உள்ள தீவிர எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் வாசகர்களையும் ஒன்றிணைப்பது என்ற பிரகடனத்துடன்  முதல் இதழ் வெளியாகி உள்ளது. பொதுவில் சிறுபத்திரிக்கைகள் நடத்துவது பொருளாதார சிரமம் கொண்டது. அத்தோடு …

நான்கு அறிமுகங்கள் Read More »

மூன்று கடிதங்கள்

அன்பிற்குரிய ராமகிருஷ்ணன் தங்களது கவிதையும் கோவிலும் கட்டுரையை வாசித்தேன். கபிலருக்கு விழுப்புரம் மாவட்டத்தின் திருக்கோவிலூரில் ஒரு கோவில் உள்ளது. கபிலர் வடக்கு இருந்து உயிர் துறந்த குன்று அது என்று குறிப்பிடப்படுகிறது. அந்த குன்றில் கபிலருக்கு தனியான  கோவில் உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ளது அக்கோவில். அதை கபிலர் குன்று என்று கூறுகிறார்கள். Nandakumar K nandakumar.raman@gmail.com ***  அன்பின் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,      வணக்கம். தங்களின் எழுத்தின் ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஏராளமான வாசகர்களின் நானும் …

மூன்று கடிதங்கள் Read More »

சிங்கப்பூரில் ஐந்து நாட்கள்

      சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்ச்சிக்காக 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையான ஐந்து நாட்கள் சிங்கப்பூர் சென்றிருந்தேன். பள்ளி கல்லூரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல்களும் சிங்கப்பூர் இலக்கிய அமைப்புகள்  மற்றும் பொது வாசகர்களுடன் நிகழ்த்தபட்ட உரையாடல்களும் சிறப்புரைகளும் நன்றாக அமைந்திருந்தன. இந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் சிங்கப்பூர் தேசிய நூலகத்தை சார்ந்த திருமதி புஷ்பலதா, மணியம், மற்றும் நாராயண மூர்த்தி, …

சிங்கப்பூரில் ஐந்து நாட்கள் Read More »

ராஞ்சிபூரின் மழை

        நேற்றிரவு The Rains Came  என்ற 1934 ல் வெளியான கறுப்பு வெள்ளை திரைப்படத்தை பார்த்தேன். இந்தியாவைப் பற்றி எடுக்கபட்ட பெரும்பான்மை ஆங்கில படங்கள் பொதுவாக இந்தியர்களை முட்டாள்களாகவும், இந்தியா முழுவதும் பாம்புகளும் யானைகளும் பெருகியிருப்பது போன்றும் சாமியார்கள், நரபலி, வறுமை பீடித்த மக்கள், படிப்பறிவில்லாத கிராமவாசிகள் என்று கலவையான உலகமாகவே சித்தரித்துள்ளது. அதிலும் வெள்ளைக்காரர்களை முக்கிய கதாபாத்திரமாக கொண்ட படங்களில் இந்தியர்கள் கூலிகளாகவோ, அல்லது கார் ஒட்டுனர்கள் பாம்பாட்டிகள் என்று மூன்றாம் …

ராஞ்சிபூரின் மழை Read More »

பால் காகின்

        – நிறங்களின் தீவு. I shut my eyes in order to see. – Paul Gauguin 1891 ஆண்டு ஒஷியானிக் என்ற கப்பல் ஆஸ்திரேலியா வழியாக பிரெஞ்சு காலனிகளில் ஒன்றான நியூ கலோடோனியாவை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தது. கப்பலில் மூன்று அடுக்குகள் இருந்தன. குடியும் கொண்டாட்டமும் கூக்குரலுமாக நீளும் அந்த கடற்பயணத்தில் ஒரேயொரு ஆள் மட்டும் கப்பலின் மேல்தளத்தில் நின்றபடியே கண்ணெதிரில் விரிந்து கிடக்கும் தொலைவை வெறித்து …

பால் காகின் Read More »

சிங்கப்பூர் எழுத்தாளர்கள் .

சமகால சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அதற்கான தனித்துவத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கிறது. புதிதாக எழுத  துவங்கியுள்ள இளம் படைப்பாளிகளும் வலைப்பக்கத்தின் வழியே எழுத துவங்கியுள்ள பலரும் கவனிக்கபட வேண்டிய முக்கிய படைப்புகளை உருவாக்கி வருகிறார்கள். இந்நாள் வரையான தமிழ் இலக்கியத்தை புரட்டி போட்டுவிட்டது என்றெல்லாம் மயக்கமடையாமல் தங்களது சூழல் சார்ந்த அக்கறையுடன் செயல்படும் படைப்புகள் இவை. சமகால தமிழ் இலக்கிய போக்கோடு ஒப்பிட்டு சிங்கை தமிழ் இலக்கியத்தை வாசிக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் …

சிங்கப்பூர் எழுத்தாளர்கள் . Read More »

நெடுங்குருதி – 2

நவீன தமிழ் இலக்கியம் குறித்த உரையாடலை வளமைப்படுத்தவும், புதிய புத்தகங்களை முறையாக வாசித்து அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் சிங்கப்பூரில் உள்ள வாசகர் வட்டம் என்ற அமைப்பில் மாதம் ஒரு புத்தகம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுகின்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட புத்தகம் குறித்து விரிவான கட்டுரைகள் வாசிக்கபடுகின்றன. அதன் தொடர்ச்சியாக விவாதங்களும் நடைபெறுகின்றன. எனது நாவலான நெடுங்குருதி குறித்து வாசிக்கபட்ட கட்டுரைகள் இவை *** எஸ் ராமகிருஷ்ணனின் `நெடுங்குருதி` –  ஜெயந்தி சங்கர் **ஊரையும் உணர்வையும் பாத்திரங்களாக்கும் …

நெடுங்குருதி – 2 Read More »

நெடுங்குருதி

நவீன தமிழ் இலக்கியம் குறித்த உரையாடலை வளமைப்படுத்தவும், புதிய புத்தங்களை முறையாக வாசித்து அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் சிங்கப்பூரில் உள்ள வாசகர் வட்டம் என்ற அமைப்பில் மாதம் ஒரு புத்தகம் குறித்து கலந்துரையாடல் நடைபெறுகின்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட புத்தகம் குறித்து விரிவான கட்டுரைகள் வாசிக்கபடுகின்றன. அதன் தொடர்ச்சியாக விவாதங்களும் நடைபெறுகின்றன. எனது நாவலான நெடுங்குருதி குறித்து வாசிக்கபட்ட மூன்று கட்டுரைகள் இவை. தேர்ந்த வாசிப்பு அனுபவத்தின் வெளிப்பாடுகள் இவை. இந்த கட்டுரைகளை எழுதிய ரெ. …

நெடுங்குருதி Read More »