குஞ்நுண்ணி கவிதைகள்.
குஞ்நுண்ணி மலையாளத்தில் முக்கியமான நவீன கவிஞர். இவரது கவிதைகள் நேரடியான மொழியில் எளிய அனுபவங்களை முன்வைக்ககூடியவை. அவரது கவிதைகள் குஞ்நுண்ணி கவிதைகள் என்று தமிழில் மொழியாக்கம் செய்து தனித்தொகுப்பாக வெளிவந்துள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் பா. ஆனந்த குமார். மலையாள நவீன கவிதையில் நாட்டார் இலக்கிய மரபுகளை முன்னிறுத்தி சமுக அரசியல் உணர்வோடு கவிபாடுகின்ற போக்கினை சார்ந்தவர் குஞ்நுண்ணி என்று அவரை அறிமுகம் செய்து வைக்கிறார் ஆனந்த குமார். வலப்பாடு என்ற ஊரில் பிறந்த குஞ்நுண்ணி கோழிக்கோடு ராமகிருஷ்ண மிஷின் …