admin

இரண்டு பார்வைகள்

“அப்பாவின் வருகை“ சிறுகதை குறித்த இருவரின் பார்வைகள் கோ.புண்ணியவான். மலேசியா அப்பாவின் வருகை சிறுகதையின் நுணுக்கத்தைப் புரிந்துகொள்ளும்போது அலாதியான வாசிப்பின்பம் உண்டாகிறது. அப்பா எந்த முக்கியக் காரணமாகவும் சண்டிகார் வரவில்லை. தன் மகனைப் பார்க்கவே வருகிறார். இக்கதையில் அப்பா தன் மகனுக்குச் சிறு பிராயத்தில் என்னவெல்லாம் செய்தாரோ அதனையே மகனும் அப்பா தனக்குச் செய்ததற்கு ஈடான அன்போடு செய்கிறார். இந்த நுணுக்கம் தான் கதையைக் கலைநயமிக்கதாக்குகிறது. அப்பாவின் வருகையை வேற்றிடத்தில் வேலை செய்யும் மகன்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. …

இரண்டு பார்வைகள் Read More »

கவிதா சொக்கலிங்கம் -75

கவிதா பதிப்பகம் சொக்கலிங்கம் அவர்களின் 75ம் ஆண்டு விழா சென்னையில் ஜுன் 22 மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்குகிறேன் இடம் : முத்தமிழ் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கம். இராஜா அண்ணாமலைபுரம். சென்னை. 28 நாள் : ஜுன் 22 சனிக்கிழமை மாலை 5 மணி

காதலின் முடிவு

ஏதென்ஸில் நகரில் நடக்கும் மூன்று காதல்கதைகள். ஒன்று அகதி இளைஞனின் காதல். மற்றொன்று நடுத்தர வயதுக்காரனின் காதல். மூன்றாவது வயதான இருவரின் காதல். மூன்றும் ஒன்று சேரும் புள்ளி வியப்பளிக்கிறது. கதை இணையும் இடத்தை நாம் எதிர்பார்க்க முடியாது. Worlds Apart 2015ல் வெளியான கிரேக்கத் திரைப்படமாகும் கிறிஸ்டோஃபோரோஸ் பாபகாலியாடிஸ் இயக்கியுள்ளார் பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயிலும் டாப்னே இளம் பெண்ணுக்கும் சிரிய அகதி ஃபரிஸ்க்கும் இடையே ஏற்படும் காதலின் வழியே சமகால அரசியல் மற்றும் அகதிகளின் …

காதலின் முடிவு Read More »

தஸ்தாயெவ்ஸ்கி நாடகம்

பியோதர் தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல் மற்றும் அவரது வாழ்க்கையை மையப்படுத்தி மூன்று நாடகங்கள் எழுதியிருக்கிறேன். அவை புதுவை. சென்னை, திருச்சூரில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராவ் தனது தியேட்டர் லேப் மூலம் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மணி நேர நாடகமாக நிகழ்த்தினார் தற்போது வெளி ரங்கராஜன் மரண வீட்டின் குறிப்புகள் நாடகத்தை கூத்துப்பட்டறையில் நிகழ்த்தியுள்ளார். தஸ்தாயெவ்ஸ்கியின் Notes from Underground நாவலின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டு இந்த நாடகத்தை எழுதினேன். மரணவீட்டின் குறிப்புகள் நாடகம் புதுவை …

தஸ்தாயெவ்ஸ்கி நாடகம் Read More »

அப்பாவின் வருகை.

புதிய சிறுகதை. 2024 சண்டிகரிலிருந்த அவனது வீட்டுப் படியில் அப்பா உட்கார்ந்திருந்தார். குமார் அவரை எதிர்ப்பார்க்கவில்லை. மதுரையில் இருந்த அப்பா எதற்காகத் திடீரென வந்து நிற்கிறார் என்று புரியவும் இல்லை. தனது பைக்கை மரத்தடியில் நிறுத்திவிட்டு புன்சிரிப்புடன் அப்பாவை நோக்கி நடந்தான். அவனைப் பார்த்தவுடன் அப்பா எழுந்து கொண்டபடி கையில் வைத்திருந்த காய்ந்த கொய்யா இலையை வீசி எறிந்தார். ஒடிசலான உருவம். தலை முழுவதும் நரைத்துவிட்டது. எப்போதும் அணிவது போலக் கோடு போட்ட சட்டை. அடர்பச்சை நிற …

அப்பாவின் வருகை. Read More »

அம்பு துளைக்கப்பட்ட மான்

புகழ்பெற்ற ஓவியரான ஃபிரைடா காலோ வாழ்க்கையை விவரிக்கும் புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது. ஃபிரைடாவின் டயரி மற்றும் கடிதங்களைப் பயன்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஃபிரைடாவின் ஓவியங்கள் திரையில் உயிர்பெற்று இயங்குவது அழகானது. அனிமேஷன் மற்றும் ஆவணக்காட்சிகள் மூலம் ஃபிரைடா வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் சித்தரிக்கப்படுகின்றன. இதற்கு முன்னதாகச் சல்மா ஹாயக் நடித்த ஃப்ரைடா திரைப்படம் 2002 ஆம் ஆண்டு ஜூலி டெய்மரால் இயக்கப்பட்டு வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்த ஆவணப் படம் அதிலிருந்து நிறைய வேறுபடுகிறது. …

அம்பு துளைக்கப்பட்ட மான் Read More »

ஸி.வி. ஸ்ரீராமனின் கதைகள்

மலையாள எழுத்தாளர் ஸி.வி. ஸ்ரீராமனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தொகுப்பினை சாகித்ய அகாதமி வெளியிட்டிருக்கிறது. ஸ்ரீராமனின் இரண்டு சிறுகதைகளை அரவிந்தன் திரைப்படமாக்கியிருக்கிறார். ஸ்ரீராமன் கதைகள் இதுவரை நாம் அறியாத கதைப்பரப்பினைக் கொண்டிருக்கின்றன. பாண்டிச்சேரி. கடலூர். சென்னை எனத் தமிழ் வாழ்க்கையின் ஊடாகவும் ஸ்ரீராமன் கதைகள் எழுதியிருக்கிறார். குறிப்பாகப் பாண்டிச்சேரி அன்னை ஆசிரமம் பின்புலத்தில் எழுதப்பட்ட கதை சிறப்பானது. ஸ்ரீராமனின் கதைகள் நினைவுகளால் வழிநடத்தப்படும் மனிதர்களின் வாழ்க்கையை விவரிக்கின்றன.   கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை  விஷ்ணுகுமாரன் சிறப்பாக மொழியாக்கம் …

ஸி.வி. ஸ்ரீராமனின் கதைகள் Read More »

எழுத்தின் வலிமை

ஸ்டீபன் ஸ்வேக் (Stefan Zweig) ஆஸ்திரியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் 1930 களில், அவர் உலகில் மிகவும் பரவலாக மொழிபெயர்க்கப்பட்ட எழுத்தாளர்களில் ஒருவராக இருந்தார். குறிப்பாகச் சீனாவில் அவரது புத்தகங்கள் மிகவும் விரும்பி படிக்கப்பட்டன. அவரது முக்கியப் படைப்புகள் யாவும் சீனமொழியில் வெளியாகியுள்ளன. சீனாவின் பெஸ்ட் செல்லராக ஸ்வேக் அறியப்பட்டார். எதனால் ஸ்டீபன் ஸ்வேக்கை சீனர்கள் இவ்வளவு ஆர்வமாகப் படித்தார்கள் என்பதை ஆராய்ந்து ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அது ஸ்வேக்கின் கதைகள் உளவியல் ரீதியாகக் கதாபாத்திரங்களின் செயல்களை …

எழுத்தின் வலிமை Read More »

மிதக்கும் காதலர்கள்

மார்க் சாகலின் ஓவியங்கள் கதை சொல்லக் கூடியவை. அச்சிடப்பட்ட கதைகளை வாசிப்பதைப் போல அவரது ஓவியத்தில் மறைத்துள்ள கதைகளையும் நம்மால் படிக்க முடியும். அவை நினைவின் சிதறிய வடிவங்கள். மார்க் சாகலை மகிழ்ச்சியின் ஓவியன் என்றே சொல்வேன். பிராயத்தின் கனவுகள் போன்ற காட்சிகளையே தொடர்ந்து வரைந்திருக்கிறார். தனது நினைவுகளையும் கனவினையும் ஒன்று சேர்த்து ஓவியமாக்குகிறார். அவரது ஓவியத்தில் பசு நீலநிறமாக இடம்பெறுகிறது. ஆடு வயலின் வாசிக்கிறது. மனிதர்கள் வானில் பறக்கிறார்கள். ஆகாசமும் பூமியும் இடம் மாறியிருக்கின்றன. அவரது …

மிதக்கும் காதலர்கள் Read More »

இசைக்குப் பின்னால்

கோ.புண்ணியவான் – மலேசியா சஞ்சாரம் நாவல் வாசிப்பனுபவம் நாவல் வடிவில் யாரும் எழுதிராத நாதஸ்வர தவில் கலைஞர்களின் கதையை ‘சஞ்சாரம்’ சொல்லிச் செல்கிறது. அச்சமூகத்தின் இந்த நூற்றாண்டின் வளர்சிதை மாற்றங்களை நேர்த்தியாகக் காட்சிப்படுத்திக்கொண்டே போகிறது நாவல். தற்காலக் கலைஞர்கள் எவ்வாறு நலிந்த சமூகமாகத் தள்ளிவைத்துப் பார்க்கப்பட்டார்கள் என்பதைத் தன் நுணுக்கமான கதைப்பின்னலால் சிக்கலில்லாமல் விவரித்துக்கொண்டே செல்கிறா எஸ் ரா. உண்மையிலேயே, பூ வேலைப்பாடு நன்கு தெரிந்த ஒரு பெண்ணின் கலைக் கைகள் நடத்துகின்ற பின்னல் நடனத்தை அழகு …

இசைக்குப் பின்னால் Read More »