admin

டாலியின் வினோத உலகம்

 “I am not strange. I am just not normal.” ― Salvador Dalí ஓவியர் சல்வடோர் டாலியின் வாழ்க்கையை மையமாக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் Daliland. மேரி ஹாரன் இயக்கியுள்ளார். பென்கிங்ஸ்லி டாலியாக நடித்திருக்கிறார். மிகப்பொருத்தமான தேர்வு. 1970களில் நடக்கும் கதை. தனது சர்ரியலிச ஓவியங்களால் மிகப்பெரும் புகழை அடைந்தவர் டாலி. கரப்பான்பூச்சி மீசையும் விசித்திரமான ஒப்பனைகளும் கொண்ட டாலி தனது ஒவியங்களைப் போலவே வாழ்க்கையிலும் கனவுலகில் சஞ்சரித்தார். அவரது ஆடம்பர வாழ்க்கை ஒழுக்க …

டாலியின் வினோத உலகம் Read More »

சிரிக்கும் பந்து

மதார் எழுதிய ஆறு கவிதைகள் மே மாத சொல்வனம் இணைய இதழில் வெளியாகியுள்ளன. இளங்கவிகளில் மதார் முக்கியமானவர். திருநெல்வேலியில் வசிக்கிறார். இவரது வெயில் பறந்தது நல்லதொரு கவிதைத் தொகுப்பு. சமீபமாக இவரது கவிதைகள் இணைய இதழ்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மதார் எழுதும் கவிதைகளின் மையப்பொருள் சிறார்களின் உலகம். அவரது கவிதைகளில் விளையாட்டு தொடர்ந்து இடம்பெறுகிறது. சொல்வனத்தில் வெளியாகியுள்ள கவிதைகளிலும் முதல் கவிதை பலூனைப் பற்றியதே. இந்த ஆறு கவிதைகளும் தனித்துவமானவை. புதிய அனுபவத்தையும் பரவசத்தையும் தருகின்றன. …

சிரிக்கும் பந்து Read More »

திருச்சியில்

களம் இலக்கிய அமைப்பின் சார்பில் திருச்சி அஜந்தா ஹோட்டலில் 24.6.23 சனிக்கிழமை மாலை ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம் நூலிற்கான அறிமுகவிழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நூல் குறித்து சிறப்புரை ஆற்றுகிறேன்

இன்மையின் சுவை

சுவிஸ் திரைப்படத் தயாரிப்பாளரான வெர்னர் பென்சல் இயக்கிய ஆவணப்படம். Zen for Nothing 2016ல் வெளியான இப்படம் ஜென் மடாலய வாழ்வினைப் பற்றிய சிறப்பான அனுபவத்தைத் தருகிறது. சுவிஸ் நடிகையான சபீனா டிமோடியோ தனது அகத்தேடலின் காரணமாக ஜப்பானின் மேற்குக் கடற்கரை பகுதியிலுள்ள அந்தாஜி ஜென் மடாலயத்திற்குச் செல்கிறார். அங்கே மூன்று பருவகாலங்களைக் கழிக்கிறார். தியானம் மற்றும் வாழ்வியல் நுட்பங்களைக் கற்றுக் கொள்கிறார். ஜென் துறவிகள் என்றால் சதா தியானத்திலிருப்பவர்கள் என்ற பொதுப்புத்திக்கு மாறாக இங்கே துறவிகள் …

இன்மையின் சுவை Read More »

ஆங்கில மொழிபெயர்ப்பு

எனது முகமது அலியின் கையெழுத்து சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு borderless journal இதழில் வெளியாகியுள்ளது இதனை டாக்டர் சந்திரமௌலி மொழியாக்கம் செய்துள்ளார்

சாமுராய்களும் செர்ரி மலர்களும்

Chushingura 1962ல் வெளியான ஜப்பானியப் படம். ஹிரோஷி இனாககி இயக்கியது புகழ்பெற்ற 47 ரோனின் என்ற சாமுராய்வீர்ர்களின் கதையை விவரிக்கும் படம். 47 ரோனின் கதை ஜப்பானின் தேசிய காவியம் என்றே அழைக்கப்படுகிறது இக்கதை எண்ணற்ற முறை நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அத்தோடு ஆறு முறை படமாக்கப்பட்டிருக்கிறது இதே கதையை மிஷோகுஷி 1949ல் எடுத்திருக்கிறார். அப்படம் தோல்வியுற்றது. வண்ணத்தில் அதே கதையைத் தொசிரே மிபுனே போன்ற முக்கிய நட்சத்திரங்களைப் பயன்படுத்திப் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். இடைக்கால ஜப்பானில் நடைபெறும் கதை. …

சாமுராய்களும் செர்ரி மலர்களும் Read More »

பாஸ்டர்நாக்கின் ஜன்னல்.

1958ம் ஆண்டுத் தனக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் செய்தியை கேள்விப்பட்டபோது போரிஸ் பாஸ்டர்நாக் மாஸ்கோவிற்கு அருகிலிருந்த எழுத்தாளர்களுக்கான கிராமமான பெரெடெல்கினோவில் இருந்தார். அங்கே அவருக்கு ஒரு வீடு ஒதுக்கப்பட்டிருந்தது மாக்சிம் கார்க்கியின் ஆலோசனைப் படி ஸ்டாலின் எழுத்தாளர்களுக்கான கிராமத்தினை உருவாக்கியிருந்தார். இயற்கையான சூழலில் நதிக்கரை ஓரமாக 250 ஏக்கர் பரப்பளவில் அந்தக் கிராமம் உருவாக்கப்பட்டு அதில் ஐம்பது எழுத்தாளர்களுக்குத் தனிவீடு ஒதுக்கப்பட்டிருந்தது. அந்தக் குடியிருப்பின் பின்புறமாக எளிய மரவீடுகளில் விவசாயிகள் குடியிருந்தார்கள். அங்கே விவசாயப் பணிகள் நடைபெற்றன. …

பாஸ்டர்நாக்கின் ஜன்னல். Read More »

பில்லி காலின்ஸ்

புகழ்பெற்ற அமெரிக்க கவிஞர் பில்லி காலின்ஸ் தனது கவிதைகளை வாசிக்கும் காணொளி. இதன் முடிவில் கவிதை குறித்த அவரது பேச்சு மிக முக்கியமானது. Basically when you’re teaching poetry, despite that poem (Introduction to Poetry), you’re talking about meaning. We’re basically extracting meaning from the poem. And I realized at some point, that when I wrote a poem, meaning was the last …

பில்லி காலின்ஸ் Read More »